சனி, 27 ஜூன், 2009

13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜே.வி.பி.யின் தலைமையில் மக்கள் போராட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும்: ரில்வின் சில்வா

உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை நீண்ட நாட்களுக்கு முகாம்களில் தங்கவைத்திருப்பது, இலங்கையைத் தோல்வியுற்ற ராஜ்ஜியமாக சர்வதேசம் பிரகடனப்படுத்த காரணமாக அமைந்துவிடும். அரசியல் இலாபத்திற்காக வடக்கில் தடுப்பு முகாம் வாழ் மக்களைப் பயன்படுத்திக் கொள்வதால் சிறீலங்கா அரசாங்கம், மனித உரிமைகள் மீறல் போன்ற கடுமையான சர்வதேச சட்டங்களுக்குள் சிக்கிக் கொள்ளும் அபாயம் தோன்றியுள்ளது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

 
13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரப் பரவலாக்கலின் ஊடாக மீண்டும் இலங்கையில் பிரிவினைவாத யுத்தமொன்றை உள்நாட்டில் தோற்றுவிக்க இடமளியோம். எனவே, 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜே.வி.பி.யின் தலைமையில் மக்கள் போராட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படுமெனவும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

 
தீர்வுத்திட்டம் தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை: