புதன், 29 ஏப்ரல், 2009

Re: இளந்தமிழர் இயக்கத்தின் துண்டறிக்கை பற்றி ”தினமலர்” மீண்ட...

தமிழ் அமைப்புகள் இளங்கோவனை கிண்டல் செய்து பிரசுரம்:காங்.,எரிச்சல்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13505〈=ta&Itemid=52

ஒருத்தி தாலியறுத்ததால் ஓராயிரம் தமிழச்சிகள் தாலியறுக்கவேண்டுமா? காணொளி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13521&lang=ta&Itemid=62

ஈழப்பிரச்சினை, தேர்தல், எதுவரை அரசியல்வாதிகள்? : வே.மதிமாறன் நேர்காணல்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13542&lang=ta&Itemid=107

ஈழத்தை யார் அங்கீகரிக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு:இயக்குனர் சீமான்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13513&lang=ta&Itemid=52

ஊட்டி பிரசாரத்தில் கதறிஅழுத வைகோ; பொதுமக்களும் கண்ணீர் விட்டனர்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13514&lang=ta&Itemid=55

தமிழீழ கோரிக்கை தேசத் துரோகமாகாது: ஜெயலலிதா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13512〈=ta&Itemid=52

முல்லைத்தீவு:1.5 லட்சம் மக்கள்மீது கோரத்தாக்குதல்-தமிழர்கள் கோரப்பலி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13522&lang=ta&Itemid=52

ஈழப்பேரழிவு இன்னும் 20 ஆண்டுகளுக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தும்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13518&lang=ta&Itemid=62

இந்திய வம்சாவழி தமிழர்கள் அச்சத்தில் உள்ளனர்.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13517〈=ta&Itemid=52

இலங்கைக்கான தூதுவரை மீள அழைக்கிறது சுவீடன்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13516〈=ta&Itemid=52

சுவீடன் அமைச்சருக்கு இலங்கை வர அனுமதி மறுப்பு
http://www.adhikaalai..com/index.php?option=com_content&task=view&id=13515〈=ta&Itemid=52

முள்ளிவாயக்கால் எறிகணைத்தாக்குதல்:பெருமளவானோர் பலி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13511〈=ta&Itemid=52

புதுவை சிறையிலிருந்து சீமான் விடுதலை
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13510〈=ta&Itemid=52

அமெரிக்காவுக்கு இலங்கை எச்சரிக்கை
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13509〈=ta&Itemid=52

வாயில் மூடப்பட்டதை கண்டித்து வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13508〈=ta&Itemid=52

பிளஸ்2 தேர்வு முடிவு மே 8ஆம் தேதி வெளியீடு
http://www.adhikaalai..com/index.php?option=com_content&task=view&id=13507〈=ta&Itemid=52

நக்கீரன் கோபால் விடுதலை
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13506〈=ta&Itemid=52


 
புரட்சி வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்


Now surf faster and smarter ! Check out the new Firefox 3 - Yahoo! Edition * Click here!

செவ்வாய், 28 ஏப்ரல், 2009

Re: [muththamiz] இளந்தமிழர் இயக்கத்தின் துண்டறிக்கை பற்றி ”தினமலர்” மீண்ட...


வணக்கம் உறவுகளே!!
 
எமது தாயகக்காற்று இணையத்தளம் 1 வது அகவையில் கால் தடம் பதிக்கும் இவ் வேளையில் உறவுகளே நீங்களும் எம்முடன் இணைந்து பணியாற்றலாம். பரந்துபட்டு வாழ்கின்ற எம் உறவுகளே உறங்காத உண்மைகளை உலகிற்கு வெளிப்படுத்துவோம். எங்கள் உயிருள்ளவரை..!! நீங்களும் எமது இணையத்தில் ஒரு செய்தியாளராக,பணியாற்றலாம் உறங்காத உண்மைகளை உலகிற்கு வெளிப்படுத்துவோம் அத்தோடு எமது இணையத்தில் உங்கள் ஆக்கங்களையும் (கவிதை,கட்டுரை,செய்திகள்,சிறுகதை)அனுப்பிவையுங்கள் இணைத்துக்கொள்கின்றோம்
அத்தோடு எமது கருத்துக்களப்பகுதியிலும் அரட்டையிலும் இணைந்துகொள்லுங்கள்
 
1) இணையத்தள முகவரி www.thayagakaatru.com
 
2) உங்கள் ஆக்கங்கள் மற்றும் செய்திகளை அனுப்பிவைக்க thayagakaatru@gmail.com
 
3) எமது கருத்துக்களப்பகுதியில் இணைந்துகொள்ள(forum)  http://grou.ps/www_thayagakaatru_com
 
4) எமது அரட்டை (chat) இல் இணைந்துகொள்ள http://www.thayagakaatru.com/chat.htm
 
"வீழ்வது நாமக இருப்பினும்
வாழ்வது தழிழாக இருக்கட்டும்"
 
நன்றி
admin,

 

Re: [muththamiz] இளந்தமிழர் இயக்கத்தின் துண்டறிக்கை பற்றி ”தினமலர்” மீண்ட...

:)

 

காவல் துறையினருக்கு நல்ல வேலை தான்.
 
தமிழக உறவுகள் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும். சோனியா/ராகுல் மே மாதம் தமிழகம் வருவதாக செய்தி அறிந்தேன்.


2009/4/28 க.அருணபாரதி <arunabharthi@gmail.com>

ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசிற்கு காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு உதவி வருகின்றது. இதனை கண்டித்தும் தமிழினத் துரோகக் காங்கிரஸ் கட்சியை தமிழிகத்திலிருந்து விரட்டும் நோக்கிலோம் வருகின்ற மக்களவைத் தோ்தலில் காங்கிரசுக்கு தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்று இளந்தமிழர் இயக்கம் பிரச்சாரம் செய்து வருகின்றது.

மாவீரன் முத்துக்குமாரை யாரென்று ஏளனம் செய்த தமிழினத் துரோகி ஈரோடு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைக் கண்டிக்கும் வகையில் ஈரோட்டில் இளந்தமிழர் இயக்கம் சார்பில் ஒரு நிகழ்ச்சி ஏற்படாகி அதற்கான துண்டறிக்கை மக்களிடம் கொடுக்கப்பட்டது. அத்துண்டறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


இத்துண்டறிக்கையையும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள
துண்டறிக்கையையும் இணைத்து "தினமலர்" ஆட்காட்டி உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி பின்வருமாறு கூறுகிறது :

இளங்கோவனை கிண்டல் செய்து பிரசுரம் : தமிழ் அமைப்புகள் செயலால் காங்., எரிச்சல்
தினமலர், ஏப்ரல் 25,2009,20:31 IST

ஈரோடு : இளங்கோவனைக் கேலி செய்து 'பயோ-டேட்டா' வடிவில் ஈரோடு முழுவதும் வினியோகிக்கப்படும் துண்டுப் பிரசுரங்கள் காங்கிரசாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தேசிய விடுதலை இயக்கம், தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் ஈரோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் மதுபாட்டிலுடன் நடனமாடுவது போல் கேலிச்சித்திரம் வரைந்து, ஈரோடு முழுவதும் துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.'கருணாநிதியின் 'டாஸ்மாக்'கும்; குடிப்பழக்கத்தால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஞாபகமறதியும்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த துண்டுப் பிரசுரத்தில் உள்ள பயோ-டேட்டா வருமாறு:

பெயர்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
ஊர்: பிறப்பால் கன்னடன்; பிழைப்பது தமிழகத்தில்.
பதவி: மத்திய மந்திரி.
தொழில்: குடிப்பழக்கத்தால் மறந்துவிட்டது.
பிடிக்காதது: தமிழர்கள்.
பிடித்தது: எல்லா வகை மதுபானங்களும்.
மறந்தது: தோழர் முத்துக்குமாரின் தியாகம்.
மறக்காதது: தமிழர்களுக்குத் துரோகம்.
சொத்து: சோனியாவின் செருப்பு.
கோபப்படுவது: கருணாநிதியின் நடிப்பு.
பொழுதுபோக்கு: உட்கட்சி மோதல்; சுவரொட்டிகள் கிழிப்பது.
பட்டப்பெயர்: தமிழனத் துரோகி.
சாதித்தது: ஈரோட்டில் 'சீட்' வாங்கியது.
எதிர்பார்ப்பது: மீண்டும் பதவி.
நடக்கவிருப்பது: 'டிபாசிட்' இழப்பு.

தமிழக மக்களே... 'காங்கிரசை ஒழிப்பதே என் முதல்பணி' என முழங்கிய பெரியார் பிறந்த மண்ணில் வாழும் ஈரோடு வாழ் மக்களே... உங்கள் ஓட்டுக்களை இளங்கோவனுக்கு வாய்க்கரிசியாய் மாற்றுங்கள்!இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், 'சாணிப்பால் தெளித்து பழைய செருப்பால் அடிக்கும் முகாம்' என்ற தலைப்பில், 'இளந்தமிழர் இயக்கம்' சார்பில் வினியோகிக்கப்பட்டுள்ள மற்றொரு துண்டுப் பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:வழிப்பறி செய்தல், கொள்ளையடித்தல், கன்னம் வைத்து திருடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோரை தமிழர்கள் கழுதை மேல் உட்காரவைத்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி பழைய செருப்பால் அடித்து ஊர்வலம் விடுவது வழக்கம்.அன்று தமிழ் மக்களுக்குப் பல்வேறு இடையூறு செய்த கன்னட சாளுக்கிய மன்னன் மீது, ராஜராஜ சோழன் படை எடுத்து, மராட்டியம் வரை துரத்தி அடித்தான்.தமிழக மீனவர்களுக்காகவும், தமிழீழ மக்களுக்காகவும் உயிர்த்தியாகம் செய்த, 'தோழர் முத்துக்குமாரை' - அவன் யார் என்று கேட்ட கன்னடன் இளங்கோவன் தமிழினத்துக்கே துரோகம் செய்கிறான்.'முத்துக்குமார் யார்?' எனத் தெரியாத இளங்கோவனுக்கும், மற்றவர்களுக்கும் நினைவுத்திறன் வளர, மறக்காமல் இருக்க சாணிப்பால் தெளித்து, செருப்பால் அடிக்கும் முகாம், ஈரோட்டில் ஏப்., 25 மாலை 5 மணிக்கு பன்னீர்செல்வம் பூங்காவில் நடைபெறும். குறிப்பு: தமிழர்கள் பழைய செருப்புகளை பத்திரமாக வைத்திருந்து முகாம் நடைபெறும் நாளில் அதை கொண்டு வரவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுபோல், பல்வேறு நோட்டீஸ்கள் அச்சிடப்பட்டு நகர் முழுவதும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனால், காங்கிரசார் எரிச்சலடைந்துள்ளனர். 'இருக்கிற தலைவலி போதாதென்று இதுவேறயா' என போலீசாரும் புலம்பி வருகின்றனர்

இணைப்புப
தினமலர் இணையதளச் செய்தி :



--
Posted By இளந்தமிழர் இயக்கம் to இளந்தமிழர் இயக்கம் at 4/27/2009 11:24:00 PM




--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---




--
நட்போடு விஜி

"நாமார்க்கும் குடியல்லோம்"
நமனை அஞ்சோம்"
http://www.karumpu.com

கொடு வாளினை எடடா மிகு
கொடியோர் செயல் அறவே!
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா! ..



இளந்தமிழர் இயக்கத்தின் துண்டறிக்கை பற்றி ”தினமலர்” மீண்ட...


ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசிற்கு காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு உதவி வருகின்றது. இதனை கண்டித்தும் தமிழினத் துரோகக் காங்கிரஸ் கட்சியை தமிழிகத்திலிருந்து விரட்டும் நோக்கிலோம் வருகின்ற மக்களவைத் தோ்தலில் காங்கிரசுக்கு தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்று இளந்தமிழர் இயக்கம் பிரச்சாரம் செய்து வருகின்றது.

மாவீரன் முத்துக்குமாரை யாரென்று ஏளனம் செய்த தமிழினத் துரோகி ஈரோடு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைக் கண்டிக்கும் வகையில் ஈரோட்டில் இளந்தமிழர் இயக்கம் சார்பில் ஒரு நிகழ்ச்சி ஏற்படாகி அதற்கான துண்டறிக்கை மக்களிடம் கொடுக்கப்பட்டது. அத்துண்டறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


இத்துண்டறிக்கையையும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள
துண்டறிக்கையையும் இணைத்து "தினமலர்" ஆட்காட்டி உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி பின்வருமாறு கூறுகிறது :

இளங்கோவனை கிண்டல் செய்து பிரசுரம் : தமிழ் அமைப்புகள் செயலால் காங்., எரிச்சல்
தினமலர், ஏப்ரல் 25,2009,20:31 IST

ஈரோடு : இளங்கோவனைக் கேலி செய்து 'பயோ-டேட்டா' வடிவில் ஈரோடு முழுவதும் வினியோகிக்கப்படும் துண்டுப் பிரசுரங்கள் காங்கிரசாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தேசிய விடுதலை இயக்கம், தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் ஈரோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் மதுபாட்டிலுடன் நடனமாடுவது போல் கேலிச்சித்திரம் வரைந்து, ஈரோடு முழுவதும் துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.'கருணாநிதியின் 'டாஸ்மாக்'கும்; குடிப்பழக்கத்தால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஞாபகமறதியும்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த துண்டுப் பிரசுரத்தில் உள்ள பயோ-டேட்டா வருமாறு:

பெயர்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
ஊர்: பிறப்பால் கன்னடன்; பிழைப்பது தமிழகத்தில்.
பதவி: மத்திய மந்திரி.
தொழில்: குடிப்பழக்கத்தால் மறந்துவிட்டது.
பிடிக்காதது: தமிழர்கள்.
பிடித்தது: எல்லா வகை மதுபானங்களும்.
மறந்தது: தோழர் முத்துக்குமாரின் தியாகம்.
மறக்காதது: தமிழர்களுக்குத் துரோகம்.
சொத்து: சோனியாவின் செருப்பு.
கோபப்படுவது: கருணாநிதியின் நடிப்பு.
பொழுதுபோக்கு: உட்கட்சி மோதல்; சுவரொட்டிகள் கிழிப்பது.
பட்டப்பெயர்: தமிழனத் துரோகி.
சாதித்தது: ஈரோட்டில் 'சீட்' வாங்கியது.
எதிர்பார்ப்பது: மீண்டும் பதவி.
நடக்கவிருப்பது: 'டிபாசிட்' இழப்பு.

தமிழக மக்களே... 'காங்கிரசை ஒழிப்பதே என் முதல்பணி' என முழங்கிய பெரியார் பிறந்த மண்ணில் வாழும் ஈரோடு வாழ் மக்களே... உங்கள் ஓட்டுக்களை இளங்கோவனுக்கு வாய்க்கரிசியாய் மாற்றுங்கள்!இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், 'சாணிப்பால் தெளித்து பழைய செருப்பால் அடிக்கும் முகாம்' என்ற தலைப்பில், 'இளந்தமிழர் இயக்கம்' சார்பில் வினியோகிக்கப்பட்டுள்ள மற்றொரு துண்டுப் பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:வழிப்பறி செய்தல், கொள்ளையடித்தல், கன்னம் வைத்து திருடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோரை தமிழர்கள் கழுதை மேல் உட்காரவைத்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி பழைய செருப்பால் அடித்து ஊர்வலம் விடுவது வழக்கம்.அன்று தமிழ் மக்களுக்குப் பல்வேறு இடையூறு செய்த கன்னட சாளுக்கிய மன்னன் மீது, ராஜராஜ சோழன் படை எடுத்து, மராட்டியம் வரை துரத்தி அடித்தான்.தமிழக மீனவர்களுக்காகவும், தமிழீழ மக்களுக்காகவும் உயிர்த்தியாகம் செய்த, 'தோழர் முத்துக்குமாரை' - அவன் யார் என்று கேட்ட கன்னடன் இளங்கோவன் தமிழினத்துக்கே துரோகம் செய்கிறான்.'முத்துக்குமார் யார்?' எனத் தெரியாத இளங்கோவனுக்கும், மற்றவர்களுக்கும் நினைவுத்திறன் வளர, மறக்காமல் இருக்க சாணிப்பால் தெளித்து, செருப்பால் அடிக்கும் முகாம், ஈரோட்டில் ஏப்., 25 மாலை 5 மணிக்கு பன்னீர்செல்வம் பூங்காவில் நடைபெறும். குறிப்பு: தமிழர்கள் பழைய செருப்புகளை பத்திரமாக வைத்திருந்து முகாம் நடைபெறும் நாளில் அதை கொண்டு வரவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுபோல், பல்வேறு நோட்டீஸ்கள் அச்சிடப்பட்டு நகர் முழுவதும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனால், காங்கிரசார் எரிச்சலடைந்துள்ளனர். 'இருக்கிற தலைவலி போதாதென்று இதுவேறயா' என போலீசாரும் புலம்பி வருகின்றனர்

இணைப்புப
தினமலர் இணையதளச் செய்தி :



--
Posted By இளந்தமிழர் இயக்கம் to இளந்தமிழர் இயக்கம் at 4/27/2009 11:24:00 PM



வெள்ளி, 24 ஏப்ரல், 2009

இந்திய - இலங்கைக் கொடி எரிப்புப் போராட்டம்



வருகிற 25.04.09 அன்று தமிழகமெங்கும் இந்திய - இலங்கைக் கொடி எரிப்புப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு ஆகியோர் இன்று விடுத்துள்ள கூட்டறிக்கை:

இந்திய - இலங்கைக் கூட்டுப் படையினர் ஈழத்தமிழினத்தைக் கொன்று குவிக்கின்றனர். தாங்கள் வாழ்ந்த தாயக மண்ணில் நாதியற்ற பிணங்களாகத் தமிழர்களின் உடல்கள் அங்கங்கே சிதறிக் கிடக்கின்றன. ஒரு நாளைக்கு சராசரியாக நூறு, இருநூறு பேர் என கொல்லப்பட்ட நிலை மாறி, இப்பொழுது ஆயிரம் இரண்டாயிரம் பேர் என்று கொல்லப்படுகிறார்கள். பாதுகாப்பு வலையம் நோக்கி வந்த 46,000 தமிழர்களைக் காணவில்லை என்ற செய்தி நம் நெஞ்சத்தை ஈட்டி போல் குத்துகிறது. ஈழத்தமிழர்களை இவ்வாறு கொன்றழிப்பதற்கும், பல்லாயிரக்கணக்கானோரின் உடல் உறுப்புகளைத் துண்டித்து ஊனப்படுத்தியதற்கும் இந்தியா மூல காரணமாக உள்ளது. இராணுவ உதவியும் நிதி உதவியும் செய்ததற்காக இந்திய ஆட்சியாளர்களுக்கு இராசபட்சேயும், சிங்களப் படைத் தலைவன் பொன்சேகாவும் நன்றி கூறி இருக்கிறார்கள்.

22.04.09 இரவு புதுதில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடிய அமைச்சரவைக் குழுவினர், ‘அப்பாவி மக்களைப் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் விடுதலைப் புலிகளின் காட்டுமிராண்டித் தனத்தைக் கண்டிக்கிறோம்’ என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தி ஒரே நாளில் மூவாயிரம் தமிழர்களைக் கொன்றதையும், நிவாரண முகாம்கள் என்ற பெயரில் சிறை முகாம்களில் இலட்சக்கணக்காண தமிழர்களை அடைத்து வைத்திருப்பதையும் இவர்கள் மூடி மறைக்கின்றார்கள். இலங்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று இலங்கை அரசை நோக்கி மென்மையாக ஒப்புக்குக் கூறியிருக்கிறார்கள்.

பதினாறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்திய அரசிடம் கடந்த ஏழு மாதங்களாக போர் நிறுத்தம் கோரி எத்தனையோ வழிகளில் போராடி வருகிறோம். ஆனால் இந்திய அரசு மேலும் மேலும் கூடுதலாக இராணுவ உதவியும் நிதி உதவியும் சிங்கள அரசிற்கு செய்து தமிழின அழிப்புப் போரை தீவிரப்படுத்தி வருகின்றது.

இந்திய - இலங்கை அரசுகளின் இந்த இனப்படுகொலையைக் கண்டித்து இந்திய - இலங்கைக் கொடிகளை எரிக்கும் போராட்டம் நடைபெறுகிறது. தற்காப்பு உணர்ச்சியும் தமிழின உணர்வும் மனித நேயமும் கொண்ட அனைவரும் அங்கங்கே கொடி எரிப்புப் போராட்டத்தை நடத்துமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 21 ஏப்ரல், 2009

அயர்லாந்து அன்னிபெசன்டிலிருந்து இத்தாலி சோனியா வரை...காங்கிரஸ் வரலாறே - தமிழினப் பகைமை தான்!




காங்கிரஸ் கட்சி - பிரிட்டிஷ்காரரால் தொடங்கியது முதல் இது நாள் வரை அது தமிழினத்தின் பகை சக்தியாகவே இருந்திருக்கிறது. இடையில் இந்திய தேசியத்திலிருந்து மாறுபட்டு, தமிழின அடையாளத்தோடு செயல்பட்ட காமராசர் காலம் மட்டுமே மாறுபட்டிருந்தது. மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் - தமிழினப் படுகொலைக்கு கரம் நீட்டிக் கொண்டிருக்கிறது. இளம் தலைமுறையினரே; இதோ, அந்த வரலாற்றிலிருந்து சில துளிகள்...

• 1885 இல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியவர் ஆலன் ஆக்டேவியன் ஹுயூம் என்ற பிரிட்டிஷ் அய்.சி.எஸ். (அந்தக்கால அய்.ஏ.ஸ்.) அதிகாரி. அதற்கான ஆலோசனையை வழங்கியவர் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த டஃப்ரின் பிரபு.

• பம்பாய், கல்கத்தா, சென்னையில் காங்கிரஸ் மாநாடுகள் கூடியபோது மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு பிரிட்டிஷ் ஆளுநர்கள் தேனீர் விருந்து கொடுத்தனர்.

• காங்கிரஸ் தொடங்கப்பட்டது - சுதந்திரம் கேட்பதற்காக அல்ல. அப்போது நிர்வாகம் நடத்திய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியாரின் அடக்குமுறைகளை எதிர்த்து எவரும் போரிடாமல் கட்டுக்குள் வைப்பதற்கே காங்கிரஸ் தொடங்கப்பட்டது. எனவேதான் காங்கிரசைத் தொடங்கிய ஹுயூம் என்ற பிரிட்டிஷ் அதிகாரியே அக்கட்சியின் செயலாளராக 20 ஆண்டுகாலம் இருந்தார்.

• ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியின் மாநாடும் தொடங்கும்போதும் - “பிரிட்டிஷ் அரசர் அரசிக்கு கடவுள் நீண்ட ஆயுளைத் தர வேண்டும்” என்று தீர்மானங்கள் போடுவது வழக்கம். 1886 இல் தொடங்கி 1914 வரை 8 மாநாடுகளில் இந்த ‘மன்னர் வழிபாட்டு’த் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

• கல்கத்தாவில் இரண்டாவது காங்கிரஸ் மாநாடு நடந்தபோது ‘மன்னர் வழிபாட்டுத் தீர்மானம்’ தேவையா என்ற கேள்வி எழுந்தது, மாநாட்டுத் தலைவரான தாதாபாய் நவ்ரோஜி “இந்த ஜனசபை (காங்கிரஸ் மாநாடு) பிரிட்டிஷ் ராஜ்யத்துக்கு வலிமையான அடித்தளம் (அஸ்திவாரக்கல்) என்று பதில் தந்தார்.

• அப்போது - காங்கிரசுக்கு ‘ஆரிய ஜன அய்க்கியம்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. ‘காங்கிரஸ் அல்லது ஆரிய ஜன அய்க்கியம்’ என்ற பெயரில் க. சுப்ரமணிய அய்யர் என்ற காங்கிரஸ் தலைவர் ஒரு நூலையே எழுதியுள்ளார்.

• காங்கிரசைத் தொடங்கிய ஹுயும் அப்போது காங்கிரசில் பெரும் எண்ணிக்கையாக இருந்த பார்ப்பனர்களிடம் மதம், ஆச்சாரம், வர்ணஸ்ரமப் பாதுகாப்பு போன்ற சமூகப் பிரச்சினைகளில் கட்சி குறுக்கிடாது என்று ஒவ்வொரு மாநாட்டிலும் உறுதி தந்து பேசினார். இதை ‘அம்பேத்கர் தனது சாதியை ஒழிக்க வழி’ எனும் நூலில் குறிப்பிடுகிறார்.

• சென்னையில் கூடிய காங்கிரஸ் மாநாடு பற்றி ‘சுதேசமித்திரன்’ நாளேட்டில் காங்கிரஸ் ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருந்தது. அதில், “இந்த வருடத்துக் காங்கிரஸ் சபையில் ஒரு முக்கியமான புதுஅம்சம் - சாதி ஆச்சாரம் பார்க்கும் பிரதிநிதிகளுக்குப் (பார்ப்பனர்களுக்கு) பிரத்தியேகமான ஒரு பங்களாவை அவர்களுடைய சாதி ஆச்சாரங்களுக்கு ஏற்றபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன” என்று அந்த விளம்பரம் கூறியது.

• 1885 இல் நடந்த பம்பாய் காங்கிரசிலும் 1886 இல் நடந்த கல்கத்தா காங்கிரசிலும் ஒரு முஸ்லீம் பிரதிநிதிகூட பங்கேற்கவில்லை. காரணம் அப்போது பிரிட்டிஷாரை முழுமையாக எதிர்த்தது முஸ்லீம்கள்தான். ‘ஆரிய ஜன அய்க்கியம்’ என்று பெயர் சூட்டிக் கொண்ட கட்சியில் எப்படி முஸ்லீம்கள் வருவார்கள்?

• சென்னையில் கூடிய மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற 361 பிதிநிதிகளில் 138 பேர் பார்ப்பனர்கள். மற்றவர்கள், செட்டியார், ரெட்டியார், முதலியார் போன்ற முன்னேறிய சாதியினர். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை. கும்பகோண சங்கர மடத்தின் சார்பில் சங்கராச்சாரி பிரதிநிதி கலந்து கொண்டார்.

• சமூகப் பிரச்சினையில் காங்கிரஸ் ‘தலையை நுழைக்காது’ என்ற கூறினாலும், சென்னை காங்கிரஸ் மாநாட்டில் பசுவதையை தடை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை பார்ப்பனர்களுக்காக நிறைவேற்றினார்கள்.

• 1900க்குப் பிறகு நடந்த காங்கிரஸ் மாநாடுகளில் - காலையிலே இந்து மகாசபை மாநாடும், மாலையில் - அதே மேடையில் காங்கிரஸ் மாநாடும் நடந்த வந்தன. காங்கிரசார் இரண்டு அமைப்புகளிலும் இரட்டை உறுப்பினர்களாக இருந்து வந்தனர்.

• இதற்குப் பிறகுதான் 1906 இல் முஸ்லீம்கள் தங்களுக்கு என்று ‘அகில இந்திய முஸ்லீம் லீக்’ என்ற அமைப்பை உருவாக்கிக் கொண்டார்கள்.

• வங்காளத்தை மத அடிப்படையில் இரண்டு மாகாணமாக பிரிட்டிஷார் பிரித்தபோது அதை எதிர்த்து ‘அய்க்கிய வங்காள இந்து இயக்கத்தை’ (United Bengal Hindu Movement) தொடங்கியது, காங்கிரசார் தான். அதே ஆண்டில் பஞ்சாபில் இந்து மகாசபையை காங்கிரசார் உருவாக்கினார்கள். இதுவே பிறகு அகில பாரத இந்து மகா சபையாகியது. ஆக, அரசியலில் மதவாதத்துக்கு கால்கோள் நடத்தியதே காங்கிரஸ் தான்.

• லாலா லஜபதிராய், மதன்மோகன் மாளவியா இருவரும் ஒரே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் இந்து மகாசபைக்கும் தலைவர்களாக இருந்தனர். இருவருமே மோசமான வர்ணஸ்ரம வெறியர்கள். முஸ்லீம் எதிர்ப்பாளர்கள். ‘கடல் தாண்டுவது இந்துமத விரோதம்’ என்பதால், லண்டன் வட்ட மேஜை மாநட்டுக்கு சென்ற மதன் மோகன் மாளவியா, தன்னுடன் மண்ணை உருண்டையாக உருட்டி கையில் எடுத்துச் சென்றார். மண்ணை கையில் எடுத்துச் சென்றால், கடல் தாண்டி போனதாகாது என்பது அய்தீகமாம்! எனவே அவர் ‘மண்ணுருண்டை மாளவியா’ என்றும் அழைக்கப்பட்டார்.

• இப்போது - சென்னை காங்கிரஸ் அலுவலகம் ‘சத்திய மூர்த்தி பவனில்’ காங்கிரசார் கூடினாலே அங்கு கலவரம் வெடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். உண்மையில் காங்கிரசின் வரலாறே அப்படித்தான் இருந்திருக்கிறது. சூரத் நகரில் கூடிய காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ‘தீவிரவாதிகள்’ என்று அழைக்கப்பட்ட திலகர் தலைமையிலான ‘இந்து வெறியர்’ குழு கலவரத்தில் இறங்கியது எதிர்ப்பு அணி. திலகர் மீது செருப்பு வீசியது. பெரும் கலவரத்தினால் எந்த முடிவும் எடுக்காமல், மாநாடு கலைந்தது. அதன் பிறகு ஓராண்டு காலம் காங்கிரஸ் கூடவே இல்லை. அரசியலில் ‘செருப்பை’ ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்பதை, அப்போது தான், காங்கிரசார் உலகத்துக்கே அறிமுகப்படுத்தினர்.

• பொது மக்களிடம் திரட்டிய நிதிக்கு கணக்கு காட்டாமல் விழுங்கி ஏப்பம் விடும் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியதும் காங்கிரஸ் தான். ‘திலகர் சுயராஜ்ய நிதி’ திரட்டி, கடைசி வரை காங்கிரஸ் அதற்கு கணக்கே காட்ட வில்லை. அதே ‘திலகர்’ நிதியை காந்தியார் வசூல் செய்தார். வசூல் செய்த பலரும் பணத்தை தங்கள் வசமாக்கிக் கொண்டார்கள். அதனால் தான் இப்போதும் “வசூல் பணம் என்னவாயிற்று?” என்று எவராவது கேட்டால் ‘காந்தி கணக்கில் எழுது’ என்று கூறும் வழக்கு உள்ளது. இது பொது வாழ்க்கை “ஒழுக்க”த்துக்கு காங்கிரஸ் வழங்கிய ‘அருட்கொடை’.

• அரசியலில் மதத்தை நுழைத்தவர் பாலகங்காதர திலகர் என்ற மராட்டிய காங்கிரஸ் பார்ப்பனத் தலைவர்தான். ‘பிள்ளையாரை’ அரசியல் குறியீடாக்கியவரும் அவர்தான். சைவ - வைணவப் பிரிவுகளை ஒருங்கிணைக்க அவர் விநாயகனைப் பயன்படுத்தி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ‘விநாயகர்’ ஊர்வலங்களை மராட்டியத்தில் நடத்தினார். அதைத் தான் இப்போது இந்து முன்னணி நடத்திக் கொண்டிருக்கிறது.

• புனே நகரத்தில் எலிகளால் பிளேக் நோய் பரவி ஏராளமானோர் உயிரிழந்த போது நோயைத் தடுக்க எலிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளை பிரிட்டிஷ் நிர்வாகம் தீவிரப்படுத்தியது. அப்போது விநாயகன் வாகனம் எலி. எனவே எலியை ஒழிப்பது இந்து மத விரோதம் என்று கூறினார் திலகர். இதனால் எலியை ஒழிக்க வந்த இரண்டு பிரிட்டிஷ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் திலகர் தண்டிக்கப்பட்டு 18 மாதம் சிறைபடுத்தப்பட்டார்.

• ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் ஒரே பள்ளியில் படிப்பதை எதிர்த்த திலகர், பெண்களுக்கு கல்வி தருவதையே எதிர்த்தார். குழந்தை திருமணங்களை (பால்ய விவாகம்) தடை செய்யும் சட்டத்தை பிரிட்டிஷார் கொண்டு வந்தபோது மதத்தில் தலையிடுவதாகக் கூறி, கடுமையாக எதிர்த்தார்.
• சென்னையில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் அரசியல் உரிமை கோரியபோது 1918 இல் திலகர் இவ்வாறு பேசினார்: “எதற்காக, செருப்பு தைக்கிறவனும், எண்ணெய்ச் செக்கு ஆட்டுபவனும், வெற்றிலை பாக்கு கடை வைத்திருப்பவனும், சட்டசபைக்குப் போக முயற்சிக்கிறார்கள்? யார், யார் எங்கே போக வேண்டும் என்று ஒரு வரைமுறை கிடையாதா?” - இந்த நிகழ்வுகளை அம்பேத்கர் தனது நூலில் (காந்தியும் - காங்கிரசும் தீண்டப்படாதோருக்கு செய்தது என்ன? நூலில்) பதிவு செய்துள்ளார்.

• அரசியலில் மதத்தைப் புகுத்தியதில் காந்திக்கு பெரும் பங்கு உண்டு. ‘ராம பஜனையோடு’ அவரது அரசியல் நடவடிக்கைகள் கலந்து நின்றன. தனது ‘அந்தராத்மா’வுடன் அடிக்கடிப் பேசுவதாக அவர் கூறிக் கொண்டார். இந்தியாவில் ‘ராம ராஜ்யம்’ அமைய வேண்டும் என்றார். ‘தீண்டாமை’ ஒழிய வேண்டும். ஆனால், நால்வர்ணப் பிரிவாகிய வர்ணாஸ்ரம அமைப்பு நீடிக்க வேண்டும் என்றார். ஒவ்வொரு ‘வர்ணமும்’ தங்களுக்குரிய தொழிலை செய்வதே நல்லது என்றார்.

• ‘தீண்டப்படாத’ தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை வழங்க பிரிட்டிஷ் அரசு முன்வந்த போது அதை எதிர்த்து சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தைத் தொடங்கினார் காந்தி. மிரட்டலுக்கு பிரிட்டிஷ் அரசு பணிந்தது. தலித் மக்களுக்கு கிடைத்த உரிமையை காந்தி பறித்தார்.

• மயிலாப்பூரிலுள்ள சீனிவாச அய்யங்கார் என்ற பிரபல காங்கிரசார் வீட்டில் காந்தி தங்குவது வழக்கம். அப்போதெல்லாம் அவர் வீட்டுத் திண்ணையில்தான் காந்திக்கு இடம்; உள்ளே போக முடியாது; இதை காந்தியே கூறியிருக்கிறார்.

கறைபடிந்த காங்கிரஸ் வரலாற்றுப் பக்கங்கள்!

• வர்ணஸ்ரமத்தையும், மதத்தையும் நம்பிய காந்தி, கடைசியில் மதவெறியர்களாலே சுட்டுக் கொல்லப்பட்டார். கடைசி காலங்களில் பார்ப்பனர்களை எதிர்க்கத் தொடங்கியதும், இஸ்லாமியர்களின் நியாயங்களைப் புரிந்து கொள்ளத் தொடங்கியதுமே இதற்குக் காரணம்.

• பத்துக்கு மேற்பட்ட முறை - காந்தியாரை கொலை செய்யும் முயற்சிகள் நடந்தாலும், ‘சுதந்திர’ இந்தியாவில் உள்துறை அமைச்சராக இருந்த பட்டேல், காந்திக்கு உரிய பாதுகாப்பை வழங்கவில்லை. சுதந்திரப் போராட்ட வீரரும், முதுபெரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஜெயப்பிரகாஷ் நாராயணன், காந்தியின் மரணத்துக்கு பட்டேலின் அலட்சியமே காரணம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார். ‘சுதந்திரம்’ பெற்ற காலத்தில் காங்கிரசின் தலைவராக இருந்த மவுலானா அபுல்கலாம் ஆசாத் எழுதிய தனது சுயசரிதையில், உள்துறை அமைச்சர் பட்டேல் அலட்சியம் காட்டியதுதான் - காந்தி மரணத்துக்கு காரணமாகிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

• காந்தியை கொலை செய்யப் போவதாக முன் கூட்டியே பம்பாய் மாகாண உள்துறை அமைச்சராக இருந்த காங்கிரஸ் தலைவர் மொரார்ஜி தேசாய்க்கு கடிதம் எழுதியதாக காந்தியார் கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே (இவர் நாதுராம் கோட்சேயின் தம்பி) விடுதலையான பிறகு ‘பிளிட்ஸ்’ பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அது பற்றி விசாரிக்க அப்போது மத்திய காங்கிரஸ் ஆட்சி ஜி.எஸ். பாதக் என்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைத்தது. ஆனால் அந்த விசாரணை ஆணையம் செயல்படுவதில் காங்கிரஸ் அலட்சியமே காட்டியது. நீதிபதி பாதக் விசாரணையை முடிப்பதற்கு முன்பே வேறு பதவிக்கு மாற்றப்பட்டார். பிறகு எதிர்க் கட்சிகள் காட்டிய எதிர்ப்பால் நீதிபதி கபூர் என்பவர் தலைமையில் மற்றொரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையத்தின் முன் சமர்ப்பிக்க காந்தி கொலை தொடர்பான அரசு ஆவணங்கள் டெல்லியிலிருந்து விமானத்தில் பம்பாய் கொண்டு போகப் பட்டன.

• ஆனால், விமானத்திலே அந்த ஆவணங்கள் திருட்டுப் போய்விட்டதாக மத்திய காங்கிரஸ் ஆட்சி ஆணையத்தின் முன் கூறிவிட்டது. கபூர் ஆணையம் ஆர்.எஸ். எஸ்சைக் காப்பாற்றக்கூடிய ஓர் அறிக்கையை தந்து விசாரணையை முடித்துக் கொண்டது. இப்படி, தேசத் தந்தை காந்தியின் கொலையைப் பற்றியே அக்கறை காட்டாத கட்சிதான் காங்கிரஸ்.

• கேரள காங்கிரஸ் தலைவர்கள் தொடங்கிய வைக்கம் - தீண்டாமை ஒழிப்புப் போரைத் தொடர முடியாத நிலையில் அவர்களின் அவசர அழைப்பையேற்று தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார், வைக்கம் விரைந்து, தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரமாக தொடர்ந்தார். ஆனால், காங்கிரஸ் தலைவர்களான காந்தியும், ராஜகோபாலாச்சாரியும் அதை ஆதரிக்கவில்லை. பெரியார் போராட்டத்திற்குப் போயிருக்கக் கூடாது என்று குறை கூறினர். போராட்டம் வெற்றி பெற்ற பிறகு, சமரசம் பேச காந்தியை தலையிட வைத்த ராஜகோபாலாச்சாரி போராட்டத்தில் பெரியாரின் பங்கினைக் குறைத்தார். தனது சுயசரிதையில் வைக்கம் போராட்டம் பற்றி எழுதிய காந்தியும் பெரியார் பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிட வில்லை.

• ஹோம்ரூல் இயக்கத்தைத் தோற்றுவித்தவரும், பிரம்ம ஞானசபைக்கு தலைமை ஏற்றவருமான அன்னிபெசன்ட் என்ற அயர்லாந்து நாட்டுப் பெண்மணி. பார்ப்பனர்களின் செல்லப் பிள்ளையாகப் பாராட்டப்பட்டவர். இத்தாலியிலிருந்து வந்து, காங்கிரசுக்கு தலைமையேற்ற சோனியா, இன்று சிங்கள ராணுவத்தின் இனப்படுகொலையை ஆதரிப்பதுபோல், அன்று, அன்னிபெசன்ட், ஜாலியன் வாலாபாக்கில் ஜெனரல் டயர் நடத்திய படுகொலையை நியாயப்படுத்தினார். ‘பஞ்சாபி, சீக்கியர்கள் செங்கல்லை வீசியதற்கும், அதற்கு ஜெனரல் டயர் பீரங்கிக் குண்டுகளைப் போட்டதற்கும் சரியாகப் போய்விட்டது. இதுதான் அரசு தர்மம்’ என்றார்; அதேபோல் தான் ஈழத் தமிழர் படுகொலைக்கும் இன்று காங்கிரசும் தி.மு.க.வும் ‘இறையாண்மை தர்மம்’ என்கின்றன.

• அகில இந்திய காங்கிரஸ் கட்சி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தபோது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் செயலாளராக இருந்த ஏ.ரங்கசாமி அய்யங்கார், தலைவராக இருந்த ‘இந்து’ ஏட்டின் ஆசிரியர் கஸ்தூரி ரங்க அய்யங்கார், சுயராஜ்யக் கட்சி தலைவர் சத்தியமூர்த்தி அய்யர் ஆகியோர், பிரிட்டிஷ் அரசு நடவடிக்கைகளுக்கு பயந்து, பதவிகளிலிருந்து விலகல் கடிதம் கொடுத்து ஓடிவிட்டனர். அகில இந்திய மட்டத்தில் முன்னணித் தலைவராக இருந்தவரும், ‘சர்வாதிகாரி’ என்று வர்ணிக்கப்பட்டவருமான மற்றொரு தேசியத் திலகமான சீனிவாச அய்யங்கார், ஒத்துழையாமை இயக்கமே சட்ட விரோதம் என்று கூறிவிட்டார்.

• இந்து மதம் திணித்த குழந்தைப் பருவத்திலே திருமணம் செய்து வைக்கும் கொடுமையை நிறுத்த 1928 இல் அன்றைய சென்னை மாகாண சட்டசபையில் தீர்மானம் வந்தபோது, தமிழ்நாடு சுயராஜ்யக் கட்சி (சுயராஜ்யக் கட்சி என்பது தேர்தலில் பார்ப்பனர்கள் போட்டியிடுவதற்காக காங்கிரசார் உருவாக்கிய பினாமி அமைப்பு) பால்ய விவாகத்தை ஒழித்து விட்டால், ‘கற்பு கெட்டு விடும்’ என்று சட்ட சபையில் எதிர்த்தது.

• கோயில்களில் பெண்களை ‘தேவதாசிகளாக்கும்’ இந்து மதக் கொடுமையை ஒழிக்க - 1930 இல் சென்னை சட்டமன்றத்தில் தீர்மானம் வந்தபோது அதைக் கடுமையாக எதிர்த்தவர், காங்கிரஸ் தலைவரான சத்திய மூர்த்தி அய்யர். இந்த சட்டத்தை எதிர்த்து சிறைக்குப் போவேனே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நரகத்துக்குப் போக மாட்டேன்; சட்டத்தைவிட சாஸ்திரமே முக்கியம் என்று பேசினார்; அவர் பெயரைத் தான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு, இப்போது சூட்டியுள்ளார்கள்.

• பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் நலனுக்காக சட்டசபையில் கேள்வி கேட்க அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு கேள்விகளை கேட்பது சத்தியமூர்த்தி வழக்கம். இதை அவரே ஒப்புக் கொண்டும் எழுதியுள்ளார். இப்போதும் நாடாளுமன்றத்தில் பெரும் தொழில் நிறுவனங்களுக்காக, அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, உறுப்பினர்கள் சிலர் கேள்வி கேட்கும் முறைக்கு வழிகாட்டியதே காங்கிரஸ் கட்சி தான்.

• காந்தி - பிரிட்டிஷாருக்கு எதிராக ‘ஒத்துழையாமை இயக்கம்’ அறிவிக்கப்பட்ட போது, சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை வலியுறுத்தியது, சத்திய மூர்த்தி அய்யர், ரங்கசாமி அய்யங்கார், சீனிவாச அய்யங்கார் பதவியை விட விருப்பமின்றி அரைமனதோடு பதவி விலகினார்கள். போராட்டத்தில் பங்கேற்காமல் ஒதுங்கிக் கொண்டார்கள்.

• 1931 இல் கராச்சியில் (இன்று பாகிஸ்தானிலுள்ள நகரம்) அகில இந்திய காங்கிரஸ் மாநாடு கூடியது. அதில் பொது கிணறு, பொது வீதி, பொது இடம் ஆகியவற்றை எல்லோரும் பயன்படுத்த உரிமை உண்டு என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுபற்றி சத்தியமூர்த்தி அய்யர் - அவசர அவசரமாக ‘இந்து’ ஏட்டில் ஒரு விளக்கம் எழுதினார். ஒரு வகுப்பினருக்கு உரிமையான இடம் (அதாவது அக்ரகாரம்) கோயில் மற்றும் அது தொடர்புடைய இடங்களுக்கு இந்தத் தீர்மானம் பொருந்தாது என்பதே தேசியத் திலகம் சத்தியமூர்த்தி அய்யர் தந்த விளக்கம்!

• பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது, காந்தி பிரிட்டிஷ் அதிகாரி இர்வின் என்பவருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார். சட்டமறுப்பு இயக்கத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வது பற்றி அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டாலும், பகத்சிங் தூக்கிலிடப்படுவது பற்றி - காந்தி, இர்வினுடன் எதையுமே பேசவில்லை. மாறாக, காந்தி தூக்கிலிடுவதை ஆதரித்துள்ளார். பகத்சிங்கை எப்போது தூக்கிடலாம் என்பது குறித்து, விவாதித்துள்ளதோடு, காங்கிரஸ் மாநாடு நடக்கும் நேரத்தில் தூக்கிலிட நேரம் குறித்தார்கள். வழக்கமாக விடியற்காலையில்தான் தூக்கு போடப்படும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக பகத்சிங்கும், அவரது தோழர்கள் ராஜ குரு, சுகதேவ் ஆகியோரும் மாநாடு நடக்கும் நேரத்தில் இரவு 7.30 மணியளவில் தூக்கிலிடப்பட்டார்கள்.

• பிரிட்டிஷாரின் 1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின் கீழ் 1938 இல் பிரிட்டிஷாரோடு சமரசம் செய்து கொண்டு, தமிழ் மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முன் வந்தது. காங்கிரஸ் முதல்வராக பதவிக்கு வந்த ராஜகோபாலாச்சாரி பார்ப்பனர் (ராஜாஜி) - பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக இந்தியைப் புகுத்தினார். 10 பேர் கொண்ட அமைச்சரவையில் 4 முக்கியப் பொறுப்புகளில் பார்ப்பனர்களை நியமித்தார். ஒழுக்கக் கேடாக செயல்பட்டார் என்று காங்கிரஸ் கட்சியிலிருந்து 5 ஆண்டுகள் நீக்கப்பட்டிருந்த டி. எஸ். எஸ். ராஜன் என்ற பார்ப்பனரை அழைத்து அமைச்சராக்கினார். இலவசக் கல்வித் திட்டத்தை ரத்து செய்தார். வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை முடக்கப்பட்டது. உயர் பதவிகளில் பார்ப்பனர்களே நியமிக்கப்பட்டனர். அரசு கடிதம் - பதிவேடுகளில் ‘திரு’ என்று போடுவதற்கு பதிலாக ‘ஸ்ரீ’ என்றே போட உத்தரவிட்டார். விசுவ கர்ம சாதியார் பெயருக்குப் பின்னால் ‘ஆச்சாரி’ என்று போடக்கூடாது. ‘ஆசாரி’ என்றே போட வேண்டும் என்று உத்தரவிட்டார். (ஆச்சாரி என்றால் பார்ப்பனரைக் குறிக்கும் என்பதால்) பார்ப்பன மனுதர்ம ஆட்சியையே அன்று காங்கிரஸ் ஆட்சி நடத்தியது.

• மீண்டும் ‘சுதந்திர’ இந்தியாவில் 1952 இல் காங்கிரஸ் பதவிக்கு வந்தபோது, ராஜகோபாலாச்சாரியே முதல்வர். 15000 ஆரம்பப் பள்ளிகளில் 6000 பள்ளிகளை நிதி இல்லை என்று கூறி மூடினார். குழந்தைகள் அப்பாவின் தொழிலை பள்ளியில் கற்றுக் கொள்ள உத்தரவிட்டார். அரை நேரம் படிப்பு; அரை நேரம் அப்பாவின் தொழிலை கற்கவேண்டும்; மீண்டும் குலத் தொழில் செய்யும் நிலையை உருவாக்கினார்.

• “சாதி முறை ஒழிய வேண்டும் என்று பலர் குறை கூறுகிறார்கள். அதை ஒழிக்க முடியாது. நன்கு யோசித்துத்தான் நமது முன்னோர்கள் வர்ணஸ்ரம முறையை வகுத்துள்ளார்கள். அதன்படி அவரவர்கள் தங்கள் முறைக்கேற்றவாறு நடந்து மக்களுக்கு தொண்டு புரிய வேண்டும்” என்று கரூரில் காங்கிரஸ் தலைவர் ராஜகோபாலாச்சாரி வெளிப்படையாகவே பேசினார். (‘சுதேச மித்திரன்’ 29.1.61) பெரியார் போராடி பார்ப்பன ஆட்சியை ஒழித்தார்.

• பிறகு பெரியார் ஆதரவுடன் காமராசர் முதல்வரானார்; அவரது ஆட்சிதான் தமிழரின் பொற்கால ஆட்சியாக இருந்தது. தமிழ் மண்ணின் உளவியலைப் புரிந்து, தமிழர்களுக்கான ஆட்சி நடத்தினார். டெல்லி ஆட்சியின் உத்தரவுகள் தமிழகத்துக்கு எதிராக இருந்தால் செயல்படுத்த மறுத்தார். தமிழர் அடையாளத்தோடு இருந்த வரை வெற்றிகளைக் குவித்த காமராசர், மீண்டும் அகில இந்திய அரசியலுக்குள் நுழைந்தபோது, காங்கிரஸ் பார்ப்பனத் தலைமை அவரை அவமதித்தது; புறக்கணித்தது. இந்திரா அவரை கட்சியிலிருந்தே நீக்கினார். தமிழகத்தில் காமராசர் கட்டி எழுப்பிய ஆட்சியும் 1967 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது.

• எந்த அகில இந்திய தலைமை - இந்திராவின் தலைமை - காமராசரை புறக்கணித்தோ அந்தத் தலைமையுடன் கைகுலுக்கி, காமராசரின் காங்கிரசை வீழ்த்த, கலைஞர் கருணாநிதி, 1971 இல் இந்திராவுடன் கூட்டணி அமைத்தார்.

• அதே கலைஞர் கருணாநிதியின் ஆட்சியை இந்திராவின் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தான் கவிழ்த்து, ‘மிசா’வின் கீழ், தி.மு.க.வினரை கைது செய்து, ஓராண்டு சிறையில் அடைத்து, தி.மு.க. ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, சர்க்காரியா விசாரணை ஆணையத்தை அமைத்தது. தொடர்ந்து பதவிக்கு வந்த மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா ஆட்சி, இரண்டு ஆண்டுகளில் கவிழ்ந்தவுடன், மீண்டும், காங்கிரசுக்கு நட்புக்கரம் நீட்டினார், கலைஞர் கருணாநிதி. ‘நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக!’ என்றார். அதே ‘துரோக மரபு’ இன்றும் தொடருகிறது.

• ஈழத் தமிழர் இனப்படுகொலைகளுக்கு காரணமான சிங்கள ராணுவத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்துவரும் சோனியாவை சொக்கத் தங்கம் என்கிறார்; கலைஞர் கருணாநிதி.

• சோனியா ஆட்சி அமைக்க தமிழர்களின் வாக்குகளைக் கேட்கிறார்;
• முல்லைத் தீவில் - ஒவ்வொரு நாளும் மரண ஓலங்கள்;
• கொத்து கொத்தாய் செத்து மடியும் தமிழர்கள்;
• உணவு இல்லை; மருந்து இல்லை; சிகிச்சை இன்றி - குண்டுவீச்சில் கைகால்களை இழந்தவர்கள் துடிதுடித்துச் சாவும் அவலங்கள்;
• இந்த கொடுமைகளுக்கு, இன அழித்தலுக்கு சிங்கள அரசுக்கு நிதியுதவியும், ஆயுத உதவியும், போர் பயிற்சியும் தரும் சோனியாவின் காங்கிரசு மீண்டும் பதவிக்கு வரவேண்டுமா?

• தமிழக ராமேசுவரம் மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு, கைது செய்வதையும், படகுகளை தாக்குவதையும், மீனவர் வாழ்வாதார உரிமைகளை நசுக்குவதையும், தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் - சிங்கள கப்பல் படைக்கு இந்தியா ஆயுத உதவி செய்யலாமா? இது பற்றி கவலைப்படாத சோனியாவின் காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வரலாமா?

தமிழர்களே! தமிழர்களே!

• காங்கிரஸ் பகையையும் அதற்கு துணைப்போகும் தி.மு.க. துரோகத்தையும் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்து பாடம் புகட்டுவீர்!

நன்றி:-கீற்று இணையதளம்

‘இந்து’ ராம் நடத்தும் ஏடு ஒப்புதல் சிங்களப் படைக்கு உளவு சொல்வது, இந்தியா தான்!

தமிழ்நாட்டில் - இலங்கை அரசின் தமிழினப் படுகொலையை ஆதரிப்பதோடு, இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் நேரடி தொடர்பு கொண்டு, அவரின் ஊதுகுழலாகவும் இயங்கி வருகிறது, ‘இந்து’ நாளேடு. அந்த நாளேடு நடத்தும் மாதம் இருமுறை ஆங்கில ஏடு ‘பிரன்ட் லைன்’, இந்தியா இலங்கைக்கு செய்து வரும் ராணுவ உதவிகளை விவரித்துள்ளது:

“தனது சிறப்பு தூதரை டெல்லிக்கு அனுப்பியமைக்காக, ராஜபக்சேவுக்கு இந்தியா மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்து, மகிழ்ச்சி அடைந்துள்ளது. சிறிலங்காவின் 13வது சட்டத் திருத்தத்தின்படி தமிழர் பகுதிகளுக்கு சில கூடுதல் அதிகாரங்களை வழங்கலாம் என்ற யோசனையை இந்தியா பசில் ராஜபக்சேயிடம் முன் வைத்தது.

வடக்குப் பகுதியில் இலங்கை அரசு மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு, இந்தியா இதுவரை எந்த திட்டவட்டமான கோரிக்கையையும், இலங்கையிடம் முன் வைக்கவில்லை என்றே, சிறீலங்கா பிரச்சினையைக் கவனித்து வருவோர் கூறுகின்றனர். உண்மையில், கொழும்பில் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் பேட்டி அளித்த பசில் ராஜபக்சே, “விடுதலைப் புலிகளை முற்றாக நசுக்குவதற்கு, இந்தியா எவ்வளவு அதிகம் உதவ முடியுமோ, அந்த அளவு உதவிகளை செய்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் 800 இலங்கை ராணுவத்தினருக்கு காடுகளில் போராடுவது பற்றியும், போராளிகளை எதிர்கொள்வது பற்றியும் இந்தியா பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்திய வெளியுறவு அமைச்சகம் கடந்த பிப். 2007-இல் வெளியிட்ட அறிக்கையில், “இலங்கை ராணுவத்துக்கான, பெரும் அளவிலான பயிற்சி இந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது” (A major part of training of Srilanka Armed forces is carried out in India) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய கப்பல்படையின் உளவுத் துறை, கடல் பகுதிகளில் உளவு வேலைப் பார்த்து, இலங்கை கப்பல் படைக்கு பல ரகசிய தகவல்களைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. (இந்திய கடல் பகுதியில் ராடார் கருவியை அமைத்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அண்மையில் சென்னையில் அளித்த பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார். அந்த ராடார் கருவி இப்படி உளவு சொல்வதற்குத்தான் பயன்படுகிறது.) இந்திய கப்பல் படை தந்த தகவல்களினால் இலங்கை கப்பல் படை விடுதலைப் புலிகளின் படகுகளையும், கப்பல்களையும் அழித்துள்ளன. அவர்களுக்கு வந்த ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகளும், இலங்கை கப்பல் படை அதிகாரிகளும் சந்தித்து, இது தொடர்பான அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு திட்டமிடுகின்றனர்.

இது தவிர, இந்தியாவும், இலங்கையும் ‘பாதுகாப்பு கூட்டுறவு உடன்பாடு’ ஒன்றை உருவாக்கியுள்ளன. இரு தரப்பினரும் அதில் கையெழுத்திடும் நிலை வந்தபோது, கடைசி நேரத்தில் அய்க்கிய முன்னணி ஆட்சி, கூட்டணிக்கு பாதிப்பு வரக்கூடும் என்பதால், கையெழுத்திடாமல் தள்ளிவைத்துள்ளது. “அரசியல் தீர்வு” என்று ஒரு பக்கம் கூறிக் கொண்டு, மற்றொரு பக்கத்தில் ராணுவ உதவிகளை வழங்கி வரும் இரட்டை கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது - என்று அந்த ஏட்டில் அதன் செய்தியாளர் ஜான் செரியன் எழுதியுள்ளார்.

- ‘பிரன்ட்லைன்’ மாதமிருமுறை ஆங்கில ஏட்டில் அதன் செய்தியாளர் ஜான் செரியன் - 21.11.2008

நன்றி:-கீற்று இணையதளம்

புதன், 8 ஏப்ரல், 2009

பார்லியில் ஒரு கேள்வி கூட கேட்காத தங்கபாலு

தமிழக எம்.பி.,க்கள் 'வாய் திறந்த' வரலாறு : பார்லியில் ஒரு கேள்வி கூட
கேட்காத தங்கபாலு

பார்லிமென்ட் நடவடிக்கைகளில் முக்கியமான நேரமாக கருதப்படுவது
கேள்வி-பதில் நேரம். ஒவ்வொரு நாளும் காலை அவை கூடியதும் முதல் பணியாக
எடுத்துக் கொள்ளப்படும் இந்த நேரத்தின்போது, எம்.பி.,க்கள் கேட்கும்
கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பர்.பல்வேறு எம்.பி.,க்களும்
முன்கூட்டியே கேள்விகளை அனுப்பி அந்த கேள்விகள் பார்லிமென்ட் அலுவலக
அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்பட்டு அதன்பின், நட்சத்திர குறியிட்ட
கேள்விகள் மற்றும் நட்சத்திர குறியிடப்படாத கேள்விகள் என்று
பிரிக்கப்படும்.

நட்சத்திர குறியிட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் நேரடியாக பதிலளிப்பர்.
நட்சத்திர குறியில்லாத கேள்விகளுக்கு எழுத்து மூலமாக சம்பந்தப்பட்ட
எம்.பி.,க்களுக்கு பதிலளிக்கப்படும்.அந்த வகையில், தமிழகத்திலிருந்து
கடந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட 39 எம்.பி.,க்களும்
பார்லிமென்டில் எத்தனை கேள்விகளை அவையில் எழுப்பினர் என்பது பற்றிய
விவரம் இது.கடந்த ஐந்து ஆண்டுகளில் கேள்வி நேரத்தின் போது சேலம்
தங்கபாலு, நாகை விஜயன், பொள்ளாச்சி கிருஷ்ணன், திருப்பத்தூர் வேணுகோபால்
ஆகிய எம்.பி.,க்கள் ஒரு கேள்வி கூட கேட்காமல் இருந்துள்ளனர்.

ராதிகா செல்வி 2004, 2005, 2006 ஆகிய மூன்று ஆண்டுகள் வெறும் எம்.பி.,யாக
இருந்துவிட்டு அமைச்சராக ஆனார். எம்.பி.,யாக இருந்த போது நான்கு
கேள்விகள் கேட்டுள்ளார்.சிதம்பரம், பாலு, ராஜா, வேலு, இளங்கோவன்,
வேங்கடபதி, ரகுபதி, பழனிமாணிக்கம், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர்
அமைச்சர்கள். இவர்கள் கேள்வி கேட்கமுடியாது. பதில் மட்டுமே அளிக்க
முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், ரயில்வே துறை பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் அவையில் இணையமைச்சர்
வேலு மட்டுமே முழுக்க முழுக்க பதிலளித்தார். லாலுவின் வேலை வெறுமனே
பட்ஜெட் படிப்பது மட்டும் தான்.

நன்றி:- தமிழ் இணையம்

மாவீரன் முத்துக்குமாருக்கு நினைவு மண்டபம் :

ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள அரசின் இனவெறிப் போரை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தீக்குளித்து ஈன்னுயிர் நீத்த மாவீரன் முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில் நினைவு மண்டபம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ட உள்ளன.

ஈழத்தமிழர்களின் இன்னல்களை விளக்கியும், "இனத்துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டோம்" என்று 1 இலட்சம் கையெழுத்துகளை திரட்டியும் "தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்" என்ற பெயரில் இளந்நதமிழர் இயக்கம் சார்பில் கடந்த 25.02.09 தொடங்கி 0.6.03.09 வரை தமிழ்நாடு முழுக்க பரப்புரைப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இப்பயணத்தின் முடிவில் சேலத்தில் 6.03.09 அன்று நடந்த "இன எழுச்சி மாநாட்டில்" மாவீரன் முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில் மணி மண்டபம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இவ்வறிவிப்பிற்கு முத்துக்குமாரின் தந்தை குமரேசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் திரு.த.வெள்ளையன், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. பழ.நெடுமாறன் ஆகியோரை சந்தித்து இளந்தமிழர் இயக்கம் ஆதரவு திரட்டியது. அவர்களும் இம்முயற்சிக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தருவதாக உறுதியளித்துள்ளனர்.

இது குறித்து உலகத் தமிழர்களுக்கு மாவீரன் முத்துக்குமாரின் தந்தை ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தமிழர்களுக்கு வணக்கம். எனது மகன் முக்குமார், வீரத்தமிழ்மகன் மாவீரன் என்ற உயர்ந்த தகுதியை அடைந்திருப்பதில் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. தமிழ் இனத்திற்காக அவன் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டது அவனது இழப்பையும் கடந்த பெருமிதத்தை எங்களுக்கு வழங்கியுள்ளது.

தேர்தல், சாதி அரசியலைத் தவிரி்த்து, புரட்சிகர மாற்று அரசியலை தமிழக இளைஞர்களும், மாணவர்களும் முன்னெடுக்க வேண்டும் என்பது முத்துக்குமாரின் இறுதிக் கடித வேண்டுகோள். இந்த வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்று இளந்தமிழர் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் மார்ச் 6மு் தேதி சேலத்தில் நடத்திய "இன எழுச்சி மாநாட்டில்" "வீரத்தமிழ் மகன் மாவீரன் முத்துக்குமாருக்கு நினைவு மண்டபம் எழுப்புவோம்" என்ற தீர்மானத்தை உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் செயலாகும்.

இளந்தமிழர் இயக்கத்தினர் முத்துக்குமாருக்கான நினைவு மண்டப அடிப்படைப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். அவர்களது முன்முயறச்சியில் எங்கள் குடுமத்தினருக்கு முழு சம்மதம் உள்ளது. இந்த நினைவு மண்டபம் தமிழர் வரலாற்றில் அழியாப் பணிகளை மேற்கொள்ளும் அறிவு மையமாகச் செயல்படும் என்று இளந்தமிழர் இயக்கத்தினர் உறுதி தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்த சமூகமும் இந்த முயற்சியில் கைகோர்த்துச் செயல்பட வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.

நாள் 04.04.09.
இடம் திருச்சிராப்பள்ளி

அன்புடன்,
S.குமரேசன்


இவ்வாறு அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முத்துக்ககுமாரின் தந்தை வெளியிட்ட கடிதத்திற்கு ஏற்ப , விரைவில் மணி மண்டபம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு அதற்கான முறையான அறிவிப்புகள் வெளியிடப்படும்.
தோழமையுடன்,
க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்.

இலங்கை இராணுவத்தின் 2 படைப் பிரிவுகளில் இந்திய வீரர்கள்: பிரான்ஸ் செய்தி நிறுவனம்

இலங்கையின் வட பகுதியில் சிங்கள இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்களும் பங்கெடுத்துள்ளதாகவும், இந்திய வீரர்கள் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்றிருப்பதாகவும், இந்திய இராணுவ அதிகாரிகள், இலங்கைப் படையினரை வழி நடத்தி வருவதாகவும் பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இதுவரை இல்லாத அளவுக்கு இலங்கை படு வேகமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை பயன்படுத்தியிராத நவீன ஆயுதங்களையும் அது பயன்படுத்தி வருகிறது.

இதற்கு இந்தியாதான் முக்கிய காரணம், இந்தியா சகல உதவிகளையும் இலங்கைக்கு செய்து வருகிறது. இந்திய அதிகாரிகளும், வீரர்களும் இலங்கையில் முகாமிட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன. ஆனாலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் பிரான்ஸைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம், இலங்கைப் போரில் இந்தியா முக்கிய பங்கெடுத்திருப்பதாக செய்தி வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ..

இலங்கையின் 58வது இராணுவப் படைப் பிரிவு, விடுதலைப் புலிகளுடனான போரின்போது பெரும் சேதத்தை சந்தித்தது. அதில் இருந்த பெருமளவிலான வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து அந்தப் படைப்பிரிவு ஆட்கள் இல்லாமல் திண்டாடியது. இதையடுத்து அந்தப் பிரிவில் இந்திய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தப் படைப் பிரிவில், தற்போது சிங்கள வீரர்களுடன் இணைந்து இந்திய வீரர்களும் வடக்கு இலங்கையில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதேபோல 59வது படைப் பிரிவிலும் 50 சதவீதம் பேர் இந்திய வீரர்களே.

இதுதவிர, இலங்கைப் படையினருக்கு போர் உத்திகளை வகுத்துக் கொடுத்து அவர்களை வழி நடத்தி வருவது இந்திய இராணுவ அதிகாரிகள்தான். கிட்டத்தட்ட இலங்கை இராணுவத்தை அவர்கள்தான் தலைமை தாங்கி நடத்தி வருகின்றனர் என்று கூறுகிறது அந்த செய்தி.

சமீபத்தில் இலங்கையில், விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 200க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களின் உடல்கள் புனேவுக்கு இரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளியானது.

மேலும் கல்மடுக்குளம் அணைக்கட்டை புலிகள் தகர்த்தபோது இந்திய வீரர்கள் ஏராளமானோர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது நினைவிருக்கலாம்.

மேலும், விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த ரேடார் நிபுணர்கள் 3 பேர் காயமடைந்ததாகவும் முன்பு செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

தற்போதும் கூட புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளுடனான மோதலில் உயிரிழந்த சுமார் 125 இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரஙகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், இந்திய வீரர்கள் இலங்கை இராணுவத்தின் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்று தமிழர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக பிரெஞ்சு மீடியா செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி;-தமிழ்விண்.