செவ்வாய், 23 செப்டம்பர், 2008

Check out IN.com

Dear anand.k.mail.news,

I want to invite you to join IN.com.

Click here to accept the invitation

IN.com lets you discover the hottest news, music, videos and games, and you also get the coolest, shortest email address on the planet @IN.com.

By the way, my new email address is <arun_kr@in.com>. Please add this to your address book. If you add me as a friend, you can also send me personal messages on IN.com.

Thanks,
Arun K

Check out IN.com

Dear anand.k.mail.news,

I want to invite you to join IN.com.

Click here to accept the invitation

IN.com lets you discover the hottest news, music, videos and games, and you also get the coolest, shortest email address on the planet @IN.com.

By the way, my new email address is <arun_kr@in.com>. Please add this to your address book. If you add me as a friend, you can also send me personal messages on IN.com.

Thanks,
Arun K

புதன், 26 மார்ச், 2008

ஊதிய உயர்வு : இந்தியச் சந்தையை சேவைத்துறை சார்ந்ததாக மாற்றுகிறது - பெ.மணியரசன்

ஊதிய உயர்வு : இந்தியச் சந்தையை
சேவைத்துறை சார்ந்ததாக மாற்றுகிறது
உற்பத்தித் துறை உழைக்கும் மக்கள்
தங்களுக்குரியப் பங்கைப் பெற போராட வேண்டும்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி அறிக்கை

நடுவண் அரசு ஊழியர்கள், அதிகாரிகள், படைத்துறையினர் ஆகியோருக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான பரிந்துரையை நீதிபதி பி.என். ஸ்ரீ கிருஸ்ணா குழு அளித்துள்ளது. அப்பரிந்துரையை நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். இப்பரிந்துரைகளைப் பார்க்கும் போது இது ஊதிய உயர்வு சார்ந்த அறிக்கை மட்டுமல்ல, இந்தியப் பொருளாதாரத்தின் சார்புத் தன்மையை மாற்றியமைக்கும் ஓர் ஏவுகணை என்று தெரிகிறது.

இப்பரிந்துரை அளித்த நீதிபதி ஸ்ரீ.கிருஸ்ணா, நிதியமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் உலகமயம் என்ற ஒரே படகில் தாராளமாகப் பயணம் செய்பவர்கள் என்றும் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியச் சந்தை, உற்பத்தித் துறையைச் சார்ந்திருப்பதற்கு மாறாக, சேவைத்துறையை சார்ந்திருக்க வேண்டும் என்ற நோக்கம் இதில் வெளிப்படுகிறது. இதனால் தான், அமைச்சரவைச் செயலர், தலைமை தளபதி போன்ற அதிகாரிகளுக்கு தற்போதுள்ள 30,000 ரூபாய் மாதச்சம்பளத்தை மும்மடங்காக மாற்றி ரூ.90,000 என்று உயர்த்துகிறது பரிந்துரை. இதே போல  இனி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் போன்றோர்க்கும் சம்பள உயர்வு வரும். தலைமை அதிகாரிகளுக்கு மட்டுமின்றி அடுத்தநிலை அதிகாரிகளுக்கும் பெரிய அளவு ஊதிய உயர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதே பாணியிலான ஊதிய உயர்வு மாநில அரசு ஊழியர்களுக்கும் தர வேண்டும். இவையனைத்தும் சேவைத்துறை சார்ந்தவை. ஆனால் உற்பத்தி சார்ந்த, தொழில் துறை மற்றும் வேளாண் துறை ஆகிய இரண்டிலும் உழைக்கும் மக்கள் ஊதியமும் வருவாயும் மிக மேசாமாக வெவ்வேறு வடிவங்களில் வெட்டிக் குறைக்கப்படுகின்றன. தொழில் துறையில் நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கையை மிகவும் குறைவாக வைத்துக் கொண்டு குறைந்த கூலியில் ஒப்பந்த தொழிலாளர்களை பெருவாரியாக அமர்த்தி வேலை வாங்கும் முறை மேலோங்கிவருகிறது. தொழிலாளி வர்க்கத்தைக் கொல்லைப்புற வழியாக நுழைந்து சுரண்டும் இப்போக்கை அரசுத்துறை மேலும் மேலும் ஊக்குவிக்கிறது. தனியார் துறையில் நிலவும் ஒப்பந்த கூலிமுறை சொல்லும் தரமன்று. மாதம் 20,000 ரூபாய் சம்பளம் பெற வேண்டிய திறன் மிக்க தொழிலாளியை வெறும ரூ.4,000 அல்லது 5,000 ரூபாய்க்கு ஒப்பந்தக் கூலியாக வைத்துக் கொள்கிறார்கள. பணம் காய்க்கும் மரம் என்று வர்ணிக்கப்படும் தகவல் தொழில்நுட்பத்துறையிலேயே 'அமர்த்து பிறகு துரத்து' (Hire and fire) என்ற வகையில் திறன்மிக்க ஊழியர்களுக்கு குறைந்த கூலி தருகிறார்கள். வேலை நிரந்தரம் செய்யவும் மறுக்கிறார்கள்.
 
வேளாண் துறையில் நெல், கோதுமை, கரும்பு, வாழை, பருத்தி, பயறு, நிலக்கடலை, எள், உளுந்து, காய்கறி, போன்ற உற்பத்தி பொருட்களுக்கு லாப விலை வழங்கியதே கிடையாது. கட்டுபடியான விலை கூட அளித்ததில்லை. இப்பொழுது வரவுள்ள ஊதிய உயர்வும், பங்குச்சந்தை சூதாட்டமும் சந்தைத் திறனை சேவைத்துறை சார்ந்ததாக மாற்றி விடும். அதை எதிர்கொள்ளும் ஆற்றல், உற்பத்தி துறையில் உழைக்கும் மக்களுக்கு இல்லாமல் போய்விடும்.
எடுத்துக்காட்டாக, இப்பொழுது பரிந்துரைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு விகிதத்திற்கு ஏற்ற விலையை நிர்ணயப்பிது என்றால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 2500/- தர வேண்டும். அவ்வாறு தந்தால் தான் அந்நெல்லை உற்பத்தி செய்த உழவர் சந்தையை எதிர் கொண்டு வாழ்க்கைத் தரத்தை பாதுகாக்க முடியும். அதே போல் அந்நெல்லை உற்பத்தி செய்யப் பாடுபட்ட உழவுத் தொழிலாளியின் நாள் சம்பளம் இன்றுள்ளதை போல் இருமடங்கு உயர வேண்டும். பிரமிடு வடிவிலான பொருளாதாரம் மேலும் வளர்ந்து, பலர் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய அல்லாடும் நிலையும் சிலர் சமூக உற்பத்தியின் பெரும் பகுதியைக் கவர்ந்து கொள்ளும் உச்சி வாழ்வும் பெறுவர்.
 
விலைவாசி உயர்வு பன்மடங்காகும். அதன் பலன் அப்பண்டங்களை உற்பத்தி செய்தவர்களுக்குப் போய்ச் சேராது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஊக பேர பெரு வணிகர்களுக்கும் மட்டுமே விலைவாசி உயர்வால் வரும் பெரு நிதியம் போய்ச் சேரும். பண வீக்கம், வீக்கம் என்ற நிலையைத் தாண்டி பூதமாகப் பெருக்கும். சேவைத்துறை சார்ந்த இந்த ஊதியப் பெருக்கம் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் பெறும் இலஞ்சத் தொகையின் அளவையும் பன்மடங்காக்கும். ஊழியர்களின் மனதையும் பண்பையும் கறைப்படுத்தும். எனவே, இப்பொழுது உற்பத்தித் துறை சார்ந்த உழைப்பாளிகள் குரல் கொடுக்க வேண்டியது,
பரிந்துரைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வைக் குறைக்க வேண்டும் என்பதற்கல்ல. மாறாக வேளாண் துறை உற்பத்தி பொருட்களுக்கு சந்தை நிலவரப்படியான இலாப விலை, உழவுத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு, ஆலைத் தொழிலாளிகளுக்கு - நிரந்தர தொழிலாளர்களாக இருந்தாலும், ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருந்தாலும் புதிய சந்தையை எதிர் கொள்ளும் அளவிற்குச் சம்பள உயர்வு ஆகியவற்றைக் கோரிப் போராடுவதே இன்றைய உடனடித் தேவை. ஒவ்வொரு துறை சார்ந்த உழைக்கும் மக்களும் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கான விலை, உழைப்பிற்கான சம்பளம் ஆகியவற்றைப் புதிதாக நிர்ணயம் செய்து தாங்களே அறிவிக்க வேண்டும். அவ்வாறு நிர்ணயம் செய்து கொள்ள அந்தந்தப் பிரிவு உழைக்கும் மக்களும் தங்களுக்கான வல்லுநர் குழுவை அமைத்து மூன்று மாதஙகளுக்குள் முடிவு செய்து விலை உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான பட்டியலை வெளியிட்டு அதை அடைவதற்காகப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும். இப்போராட்டத்தில் ஒருவருக்கொருவர் உறுதுணையாய் பங்கெடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
 

சனி, 8 மார்ச், 2008

மக்கள் விரோத – மாநில விரோத வரவு செலவுத்திட்டம் - பெ.மணியரசன்

மக்கள் விரோத – மாநில விரோத வரவு செலவுத்திட்டம்
பன்னாட்டு முதலாளிகளின் கொற்றம்
பெ.மணியரசன் கண்டன அறிக்கை
 
நிதியமைச்சர் ப.சிதம்பரம் முன்வைத்துள்ள 2008-2009 க்கான வரவு செலவுத்திட்டத்தைப் பற்றி ஒற்ற வரியில் சொல்வதென்றால் "நிகழ்காலத்தை ஒப்பேற்ற எதிர்காலத்தை எரிக்கும் திட்டம்" என்று கூறலாம். அறுபதாயிரம் கோடி ரூபாய்க்கு உழவர்களின் கடனைத் தள்ளுபடி செய்யும் அவரது திட்டம் வாய்ப்பந்தலாக உள்ளதே தவிர, அதற்காக ஒரு காசு கூட நிதி ஒதுக்கவில்லை. இது பற்றி கேட்ட போது, "இதற்கு நிதியேற்பாட்டை வரும் மூண்றாண்டுகளுக்குள் செய்து முடிப்போம்"  என்று முதலில் சொன்னார். பிறகு, "குறிப்பிட்ட காலத்திற்குள் இத்தொகையை வங்கிகளுக்கு ஈடுசெய்வோம். அதற்கான கலைத்திறன் என்னிடம் உள்ளது" என்றார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்குமா? ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருப்பாரா? அடுத்த ஆண்டு மக்களவைக்கு தேர்தல் ஆண்டு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே ஒரு வரவு செலவுத் திட்டத்தில் சென்னைக்குக் கடல்நீரைக் குடிநீராக்க ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்தார். ஒரு காசு கூட அதற்காக ஒதுக்கவில்லை என்று அப்போதிருந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்து, மறுக்க முடியுமா என்று அறைகூவலும் விட்டார். கடல்நீரைக் குடிநீராக்கும் சென்னைத் திட்டத்திற்கு, இந்த வரவு – செலவு முன்மொழிவில் தான் ரூபாய் முந்நூறு கோடி ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பே, அவர் ஏற்கெனவே ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கவில்லை என்பதற்கான சான்று.

தொகை ஒதுக்காமலேயே அறுபதாயிரம் கோடி ரூபாய்க் கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் போல் ஆகிவிடக்கூடாது. இரண்டு எக்டேர் (5 ஏக்கர் கூட அல்ல. அதற்கும் கீழே) வரை நிலம் கொண்டுள்ள சிறு, குறு உழவர்களின் கடன்கள் தான் தள்ளுபடி செய்யப்படும் என்கிறார். மெய்யான துயர் தணிப்பு, எல்லா உழவர் கடனையும் தள்ளுபடி செய்வதாகும். மராட்டியத்தில் விதர்பா பகுதியில் தான் அதிக எண்ணிக்கையில் பருத்தி உழவர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்கள். விதர்பா ஜன அந்தோலன் என்ற அமைப்பின் தலைவர் கிசோர் திவாரி, உழவர் தற்கொலை மிகுந்துள்ள ஆறு விதர்பா மாவட்டங்களில் இக்கடன் தள்ளுபடி பயன் அளிக்காது. சாதாரணமாக, ஆறு அல்லது ஏழு ஏக்கர் நிலம் உள்ளவர்கள் அங்கு  மிகுதி என்கிறார். இரண்டு எக்கேருக்கு மேல் நிலம் உள்ள உழவர்கள் கடனில் அசல் வட்டி  இரண்டையும் சேர்த்து 75 விழுக்காடு செலுத்தினால் 25 விழுக்காடு தள்ளுபடி ஆகும் என்கிறார். வட்டியைக்கூட தள்ளுபடி செய்யாத இந்த ஏற்பாடு வசூல் தந்திரம் தவிர வேறு அல்ல. ஒரே நேரத்தில் கடன் தீர்க்கும் திட்டத்தின் கீழ் வணிக வங்கிகள் ஏற்கெனவே இவ்வாறான சலுகைகள்  வழங்கி வருகின்றன. உழவர் உற்பத்திப் பொருட்களுக்கு இலாபவிலை கிடைக்கவும், சந்தை வாய்ப்பு பெருகவும் எந்த ஏற்பாட்டையும், இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கவில்லை. அது மட்டுமல்ல, பன்னாட்டு நிறுவனங்கள் நம் தாயாகிய விலைநிலங்களை, பூச்சி மருந்து உரம் வேதிப்பொருட்களால் நஞ்சாக்கி, மலடாக்கிவிட்டனர். மான்சாண்டோ போன்ற உயிர் கொல்லி  நிறுவனங்கள் மரபீனி மாற்று விதைகளைக் கொண்டு வந்து, மரபுவழிப்பட்ட விதைகளை அழித்து, நீடித்து விளைச்சல் தராத புதிய விதைகளைக் கொடுத்து, உழவர்களை ஓட்டாண்டி ஆக்கிவிட்டனர். இந்தக் கொள்ளை நோயைத் தடுக்கவும், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு இலாப விலை கிடைக்கவும் துரும்பைக் கூட அசைக்கவில்லை. சோனியா –
மன்மோகன் புகழ்ந்து தள்ளும் சிதம்பரம் வரவு செலவுத் திட்டம் இது.

சிறப்புப் பொருளியல் மண்டலங்களுக்காக, விளை நிலங்களை அபகரித்து, கிராமங்களைக் காலி செய்யும் பன்னாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த எந்த முன்மொழிவையும் இத்திட்டம் கூறவில்லை. நாட்டின் பொருளியல் வளர்ச்சி அடைந்து வருவதாகப் போலித் தோற்றம் காட்டி வந்த மன்மோகன்- ப.சிதம்பரம் வாய்வீச்சு இந்த வரவு செலவுத் திட்டத்தில் அம்மணமாக அம்பலமாகிவிட்டது. இந்த ஆண்டு செலவில், மிக அதிக விகிதத்தைப் பெற்றிருப்பது நடுவண் அரசின் திட்டங்களோ மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் வரிப் பங்குத்தொகைகளோ அல்ல. நடுவண் அரசு கட்ட வேண்டிய வட்டித் தொகை தான் அது! மொத்தச் செலவில் 21 விழுக்காடு வட்டி செலுத்த மட்டுமே போகிறது. அசலைக் கட்டுவதற்கான அறிகுறி தொடுவானத்திற்கப்பால் கூட தெரியவில்லை. அத்துடன் புதுக்கடன் இவ்வாண்டு ஏராளமாகத் திரட்டப்போகிறார்கள். மொத்த வரவில் 14 விழுக்காடு கடன் வாங்குவதன் மூலம் வரும் தொகையாகும். ஆனால் உண்மையில் 14 விழுக்காட்டிற்கும் மேல் பல்லாயிரம் கோடி கடன் வாங்க உள்ளார். கடன் என்று சொல்லாமல் "சந்தை நிலை நிறுத்தல் திட்டம்" (Market stabilisation Scheme) என்று அக்கடன் வரவுக்குப்
புதுப்பெயர் சூட்டியுள்ளார்.

இந்திட்டத்தின்படி ரூ.13,958 கோடி கடன் திரட்டுகிறார். இஃதன்னியில் எண்ணெய் நிறுவனக்கடன் பத்திரங்கள் மூலம் ரூ.5519 கோடியும், உணவுக்கழக கடன் பத்திரங்கள் மூலம் ரூ.1319 கோடியும் திரட்டுவது வேறு. இவையனைத்தும் கடன் வரவில் காட்டப்படவில்லை ஓட்டு மொத்த நிதிப்பற்றாக்குறை என்று அவர் கணக்குக் காட்டியிருப்பது ரூ.1,33,287 கோடியாகும். உண்மையான பற்றாக்குறை இதைவிடக் கூடுதலாகும். வேளாண்கடன் தள்ளுபடிக்கு ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கப்படாததால், அத்தொகைiயும் பற்றாக்குறையில் சேர்க்க வேண்டும். அதே போல் நடுவண் அரசு ஊழியர் 6வது சம்பளக் குழு பரிந்துரைப்படி தரவேண்டிய ஊதிய உயர்வு மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான ஒதுக்கீடு செலவு திட்டத்தில் காட்டப்படவில்லை. இவ்விரு தொகைகளையும் சேர்த்தால் ரூ.90,0000 கோடி ரூபாய் பற்றாக்குறை வருகிறது. அதாவது கண்ணுக்குத் தெரிந்த பற்றாக்குறை ரூ.1,33,2887 + ரூ.90,000 = ரூ.2,23,287 கோடி. இவ்வளவு பற்றாக்குறையையும் எப்படி ஈடுகட்டப் போகிறார்கள். கடன்வாங்கியும், அரசுத்துறை உற்பத்திப் பொருட்களின் விலையை உயர்த்தியும், புதுவரிகளைக் கண்டுபிடித்தும், வரி உயர்வு செய்தும்,
கணக்கை மீறி ரூபாய்த் தாள்களை அச்சிட்டும் தான் ஈடுகட்டப் போகிறாhர்கள். விலை உயர்வு, பணவீக்கம், பொருளியல் மந்த நிலை என்பவை தான் இதனால் உண்டாகும்.

மருத்துவ நலத்திட்டங்களுக்கு கடந்த ஆண்ட விட 15 விழுக்காடு நிதி அதிகமாக
ஒதுக்கிவிட்டதாக ப.சிதம்பரம் தம்பட்டம் அடிக்கிறார். தனியார் மருத்துவமனைகளுக்குச் சலுகைகளை வாரி வழங்கியுள்ளார். கிராமப்புறங்களில் அமைக்கப்படும் தனியார் பன்முகச்சிறப்பு மருத்துவமனைகளுக்கு (Mutlti speciality Hospitals) ஐந்தாண்டுகளுக்கு வரி ஏதும் கிடையாது. இவை உண்மையில் மையக்கிராமப் பகுதிகளில் அமையாது. மாநகராட்சி, நகராட்சியை ஒட்டியுள்ள கிராமத்தில் மருத்துவமனையை
நிறுவிக்கொண்டு, வரிவிலக்குப் பெறுவார்கள். அவ்வாறான மருத்துவமனைகள் ஏற்கனவே நோயாளிகளைக் கொள்ளையடிப்பது நாடறிந்த உண்மை.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலங்களில், நட்சத்திரவிடுதிகள் கட்டும்,  முதலாளிகளுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு வரி கிடையாது என்கிறார் ப.சிதம்பரம். ஆனால் அதே கிராமப்பகுதியில் ஐந்து ஏக்கர் நிலம் உள்ள ஏழை உழவனுக்கு வட்டித் தள்ளுபடி செய்யக்கூட மறுக்கிறார். கிராமப்புறங்களில் மருத்துவமனை, நட்சத்திர விடுதி என்று இந்திய முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளையும் அனுமதிப்பதன் மூலம் மனைத்தொழில் இறக்கை கட்டிப்பறக்கப் போகிறது. 2007 சனவரி முதல் மனைத் தொழிலில் (Real Estate) நூற்றுக்கு நூறு வெளிநாட்டு முதலாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் நுழையும் வெளிநாட்டு மூலதனத்தில் 2003-04 இல் 4.5
விழுக்காடாக இருந்த மனைத்தொழில் மூலதனம் 2006-2007-இல் 26 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்ற விவரம், அபாயத்தின் தீவிரத்தை உணர்த்தும். தங்கள் தாய் மண்ணை இழந்து, நாடோடிகளாக நம்மக்கள் மாறுவர். மனைத்தொழிலில் ஒரு சில ஆண்டுகளில் 130 மடங்கு வரை லாபம் கிடைக்கிறது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.(செமினார் ஆங்கில இதழ், 2008 பிப்ரவரி - ஸ்ரீவத்சவா, பக்கம் 60) மார்க்கன் ஸ்டேன்லி, ப்ளாக் ஸ்டோன் நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி டாலர்களை கடந்த சில
மாதங்களில் இந்திய ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ளன.(ASSOCHAM  அறிக்கை -2007)

இந்த வரவு – செலவுத்திட்டத்தில் சிறுகார், இருசக்கர தானியங்கி வாகனங்கள் ஆகியவற்றிகு 4% வரி குறைக்கப்பட்டுள்ளது. சிங்கூர் டாட்டா சிறுகார் உற்பத்திக்கு ஒரு விழுக்காடு வட்டியில் கடன் தருகிறார்கள். பத்தாண்டுகளுக்கு மதிப்புக்கூட்டு வரிவதிப்பில்லை என்று விலக்கு அளித்துள்ளார்கள். உழவர்களிடம் 7 விழுக்காடு வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது. படைத்துறைக்கான செலவு 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. ரூ 1,05,600 கோடியை ஒதுக்கியுள்ளார். கடந்த ஆண்டு (2007-2008) ஒதுக்கிய ரூ. 96,000 கோடியில் ரூ.4,217 கோடி செலவு செய்யப்படாமலேயே உள்ளது.   அந்த நிலையில், இவ்வாண்டு இன்னும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. வருமானவரி, மதிப்புக் கூட்டு வரி, உற்பத்தி வரி ஆகியவற்றில் சில இனங்களில் வரியைக்
குறைத்துள்ளார். அதே வேளை கம்பெனி வருமானவரியைக் (Corporate Tax) குறைக்கவே இல்லை. காரணம், முன்னவை மாநிலங்களுக்கும் பங்கு கொடுக்கப்படவேண்டியவை. கம்பெனி வருமானவரி, அதற்கென துணை வரி ஆகியவற்றில் மாநிலஙக்ளுக்கு எந்தப் பங்குத்தொகையும் கிடையாது. மொத்த வரி வருமானத்தில் கம்பெனி வருமானவரி தான் மிக அதிக விகிதம் கொண்டது. அது 24 விழுக்காடாகும். மாநிலங்கள் மேலும்  மேலும் இந்திய அரசை நோக்கி பிச்சைப்பாத்திரம் ஏந்தும் நிலையிலேயே
வைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு வரிப்பங்கீட்டில் கூடுதல் தொகை ஒதுக்குவதுடன், கம்பெனி வருமானவரியில் குறைந்தது 50 விழுக்காடாவது ஒதுக்க வேண்டும். நேரடியான மக்கள் நலத்திட்டங்களான, கல்வி, நலத்துறை, வேளாண்துறை, சாலை வசதி போன்றவற்றை செயல்படுத்துபவை மாநிலங்களே.

பொருளியல் வளர்ச்சி (GDP) நடப்பாண்டில் (2007-2008) 10 விழுக்காடு வரும் என்று
கூறிக்கொண்டிருந்தனர் மன்மோகனும் சிதம்பரமும். அது கடந்த ஆண்டை விடவும் குறைந்து 8.7 விழுக்காடு தான் வந்துள்ளது. இதில், வேளாண் உற்பத்தியின் பங்களிப்பு வெறும் 2.6 விழுக்காடு மட்டுமே. கடந்த ஆண்டு (2007-2008) உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) 9.4. சுருக்கமாகச் சொன்னால் திரு ப.சிதம்பரம் முன்வைத்துள்ளது மக்கள் விரோத – மாநில விரோத வரவு செலவுத் திட்டம். பன்னாட்டு முதலாளிகளுக்கான திட்டம் இது. இந்தியப் பெருளாதாரதத்தை மேலும் திவாலாக்கும். இந்த வரவு செலவுத் திட்டத்தை தேர்தல் கண்ணோட்டத்துடன் போடப்பட்ட திட்டம் என்று எதிர்க்கட்சிகள் திறனாய்வு செய்தது காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக பாராட்டும் செயலாகவே அமையும். வாக்கு வாங்கும் நோக்கில் மக்களுக்கு வாரி வழங்கியுள்ளதாக பொருள் படும். ஆனால் இது முழுக்க முழுக்க மக்கள் விரோத வரவு செலவுத் திட்டம்.
அனைத்துக்கட்சிகளும் இத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்த்து முறியடிக்க வேண்டும். புதிய மாற்றுத் திட்டத்திற்கு முன்மொழிவுகள் வைக்க வேண்டும்.
 

வெள்ளி, 22 பிப்ரவரி, 2008

சென்னை உண்ணாப் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு - கண்டனம்

உண்ணாப் போராட்டம் நடத்தத் தடை:
அராஜகம் செய்த காவல் ஆய்வாளரைப் பாதுகாக்க
மாநகரக் காவல் ஆணையரின் சட்டவிரோதச் செயல்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்
 
பெ.மணியரசன் கண்டன அறிக்கை

             கடந்த 25-1-2008 மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் அன்று தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி இந்தி, ஆங்கில ஆதிக்கங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது.

           தமிழக அரசின் ஆங்கில ஆதரவு – தமிழ்ப் புறக்கணிப்புப் போக்கைக் கண்டிக்கும் வகையில், முறைப்படி விளம்பரம் செய்து, அறிக்கை கொடுத்து அறிவித்துவிட்டு 25-01-2008 அன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த 'அல்ட்ரா டீலக்ஸ்', 'பாயின்ட் டு பாயி;ன்ட்', 'எஸ்.,.டி.சி' போன்ற ஆங்கில எழுத்துகளை த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.பத்மநாபன் தலைமையில் கருப்புமை பூசி தோழர்கள் அழித்தனர். அவர்கள் பேருந்துகளுக்கு வேறு சேதமோ, பயணிகளுக்கு ,டையூறோ செய்யவில்லை. அப்போது, கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளர் தேன் தமிழ்வளவனும் மற்ற காவலர்களும், அவர்களைத் தடியால் கொடூரமாகத் தாக்கிப் படுகாயப்படுத்தினர். கோவைத் தோழர் பா.தனசேகர் என்பவருக்கு ,டதுகை எலும்பு முறிந்தது. க.பாலகுமரன், ச.பிந்துசாரன், கோ.மாரிமுத்து, பா.சங்கர் உள்ளிட்டோர் படுகாயமுற்றனர்.

 சட்டவிரோதமாக வன்முறை ஏவிய காவல்துறையினர்; மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ,துவரை நடவடிக்கை ,ல்லை.

 ஆய்வாளர் தேன் தமிழ்வளவன் மற்றும் தொடர்புடைய காவல்துறையினரை ,டைநீக்கம் செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசைக் கோரி சென்னை, சேப்பாக்கம், அரசினர் விருந்தினர் மாளிகை அருகே 22-02-2008 வெள்ளி காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் திரளானோர் கலந்து கொள்ளும் உண்ணாப் போராட்டம் (உண்ணாவிரதம்) நடைத்துவதற்கு அனுமதி கோரும் மனு 4-02-2008 அன்று கொடுக்கப்பட்டது. அவ்வுண்ணாப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து மாநகரக் காவல்துறை ஆணையர் திரு. நாஞ்சில் குமரன் அவர்கள் 21-02-2008 அன்று பிற்பகல் கடிதம் கொடுத்துள்ளார். 
 
        மாநகரக் காவல் ஆணையரின் இம்மறுப்பு திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளது. முதலில் நாங்கள் 19-02-2008 அன்று உண்ணாப் போராட்டம் நடத்த அனுமதி கோரி கடிதம் கொடுத்தோம். அதற்கு மாநகர ஒற்றுப்பிரிவு உயர் அதிகாரி திரு. ,ளங்கோ அவர்கள் 22-02-2008 அன்று உண்ணாப் போராட்டம் வைத்துக் கொள்ளுமாறு வாய்மொழி ஒப்புதல் கொடுத்து, தேதி மாற்றி மனு கொடுக்க சொன்னார். அதே போல தேதி மாற்றி மனு கொடுத்தோம். அவரை அவ்வப்போது அணுகி உண்ணாப் போராட்டத்திற்கான அனுமதிக் கடிதம் கேட்ட போது விரைவில் தருவோம் என்று கூறிவந்தார்.

அதை நம்பி உண்ணாப் போராட்டத்திற்கான விளம்;பரச் செலவுகள் உட்பட அனைத்துச் செலவுகளும் செய்து முடிக்கப்பட்டன. தமிழகமெங்கும் இருந்து இப்போராட்டத்தில் கலந்து கொள்ள பல்வேறு வாடகை வாகனங்களில் வர எமது இயக்கத் தோழர்கள் பணம் கொடுத்து ஏற்பாடு செய்திருந்தனர். ,ந்த நிலையில் உண்ணாப் போராட்டம் நடைபெற வேண்டிய நாளுக்கு முதல் நாள் பிற்பகல் அனுமதி மறுத்ததன் மூலம் எங்களுக்கு ஏராளமான பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் உழைப்பும் விரையமாகியுள்ளது. உயர்நீதிமன்றத்தை அணுகி அனுமதி மறுப்புக்கு தடை வாங்கி உண்ணாப் போராட்டம் நடத்திட வாய்ப்பு தரக்கூடாது என்ற கெட்ட நோக்கத்துடன் மாநகரக் காவல் ஆணையர் 04-02-2008 அன்று கொடுக்கப்பட்ட அனுமதி கோரும் மனுவுக்கு 21-02-2008 அன்று மறுப்பு தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளார். அனுமதி மறுப்புக் கடிதத்தை, நிகழ்ச்சி நடக்க வேண்டிய நாளுக்கு ஒரு வாரம் முன்பதாகக் கொடுக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறியதாகும் ஆணையரின் இச்செயல்.
 
தன் கீழ் பணியாற்றும் கோயம்பேடு காவல் ஆய்வாளர் தேன்தமிழ்வளவனையும் மற்ற காவல்துறையினரையும் சட்டவிரோத வழிகளில் பாதுகாக்கும் வகையில், நீதித்துறையை அணுகி நிவராணம் தேடும் வாய்ப்பை வேண்டும் என்றே கெடுத்துள்ளார் மாநகரக் காவல் ஆணையர். இது பழிவாங்கும் செயலாகும். அமைதியான வழியில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தக்கூட அனுமதி மறுத்துள்ள மாநகரக் காவல் ஆணையரின் சட்டவிரோத, சனநாயக விரோத செயலை தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

மாநகரக் காவல்துறையின் இந்த சட்டரோத, சனநாயக விரோத செயலை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நீதிகோரி வழக்குத் தொடுக்கவுள்ளோம். உயர்நீதிமன்ற ஆணை பெற்று இவ்வுண்ணாப் போராட்டம்
நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
தோழமையுடன்,
பெ.மணியரசன்
பொதுச் செயலாளர்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி

புதன், 20 பிப்ரவரி, 2008

சென்னையில் உண்ணாப் போராட்டம் - பெ.மணியரசன் அறிக்கை

தமிழ்காக்கப் போராடிய தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி
தோழர்களைத் தாக்கிக் காயப்படுத்தி, எலும்பு முறிவை ஏற்படுத்திய
ஆய்வாளர் தேன் தமிழ்வளவன் மற்றும் காவல்துறையினரை
இடைநீக்கம் செய்யக் கோரி
சென்னையில் உண்ணாப் போராட்டம்
 
பெ.மணியரசன் அறிக்கை
 
     கடந்த 25-1-2008 மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் அன்று தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி இந்தி, ஆங்கில ஆதிக்கங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது.
 
     தமிழக அரசு தனக்குள்ள அரசiமைப்புச் சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி தமிழை முழு அளவில் ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும் செயல்படுத்தாமல் ஆங்கிலத்திற்கு முன்னுரிமையும் மேலாதிக்கமும் தருகிறது.
 
     தமிழக அரசின் ஆங்கில ஆதரவு-தமிழ்ப் புறக்கணிப்பு போக்கை; கண்டிக்கும் வகையில் 25-01-2008 அன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த 'அல்ட்ரா டீலக்ஸ்', 'பாயின்ட் டு பாயி;ன்ட்', 'எஸ்.இ.டி.சி' போன்ற ஆங்கில எழுத்துகளை த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.பத்மநாபன் தலைமையில் கருப்புமை பூசி தோழர்கள் அழித்தனர். அவர்கள் பேருந்துகளுக்கு வேறு சேதமோ பயணிகளுக்கு இடையூறோ செய்யவில்லை. அப்போது, கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளர் தேன் தமிழ்வளவனும் மற்ற காவலர்களும், அவர்களைத் தடியால் கொடூரமாகத் தாக்கிப் படுகாயப்படுத்தினர். கோவைத் தோழர் பா.தனசேகர் என்பவருக்கு இடதுகை எலும்பு முறிந்தது. க.பாலகுமரன், ச.பிந்துசாரன், கோ.மாரிமுத்து, பா.சங்கர் உள்ளிட்டோர் படுகாயமுற்றனர்.
 
     சட்டவிரோதமாக வன்முறை ஏவிய காவல்துறையின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நடவடிக்கை இல்லை.
 
     ஆய்வாளர் தேன் தமிழ்வளவன் மற்றும் தொடர்புடைய காவல்துறையினரை இடைநீக்கம் செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசைக் கோரி சென்னை, சேப்பாக்கம், அரசினர் விருந்தினர் மாளிகை அருகே 22-02-2008 வெள்ளி காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் திரளானோர் கலந்து கொள்ளும் உண்ணாப் போராட்டம் (உண்ணாவிரதம்) நடை பெறுகிறது.
 
        விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. த.வெள்ளையன், ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்தியா, தோழர் தியாகு(பொதுச் செயலர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தோழர் இரா.பாவணன் (தலைவர், தமிழர் கழகம்), தோழர் நிலவன் (பொதுச் செயலர், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்), கவிஞர் தமிழேந்தி (மார்க்சியப் பெரியாரியப் பொதுசுடைமைக் கட்சி) ஆகியோர் கண்டன உடையாற்றுகின்றனர். புலவர் கி.த.பச்சையப்பனார் உண்ணாப் போராட்டத்தை முடித்து வைக்கிறார்.
 
தஞ்சையில் போராட்ட வழக்கைத் திரும்பப் பெறக் கோருதல்

     இந்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து அதே நாளில் தஞ்சையில் தலைமை அஞ்சலகத்தில் இந்தி எழுத்துகளை த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் பழ.இராசேந்திரன் தலைமையில் அழித்த 23 பேர் கைது செய்யபட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல், ஊழியர்களைக் கடமையாற்ற விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிணை மறுப்புப் பிரிவுகளில் வழக்குப் போடப்பட்டுள்ளது. அவ்வழக்கைத் தமிழக அரசு திரும்பப் பெறுமாறு இவ்வுண்ணாப் போராட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
 
       தமிழ் உணர்வாளர்கள் இவ்வுண்ணாப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 

புதன், 6 பிப்ரவரி, 2008

தமிழர் கண்ணோட்டம் - சனவரி 2008

வாசகர்களுக்கு வணக்கம்..

 
தமிழ்த் தேசியப் புரட்சிகர மாத இதழ்
"தமிழர் கண்ணோட்டம்"
சனவரி மாத இதழை இப்பதிவில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளவும்..




தமிழர் கண்ணோட்டம் - சனவரி 2008

நன்றி

-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

திங்கள், 4 பிப்ரவரி, 2008

[muththamiz] தேவை ஒரு விவசாய புரட்சி



---------- Forwarded message ----------
From: மஞ்சூர் ராசா <manjoorrasa@gmail.com>
Date: Feb 3, 2008 2:45 PM
Subject: [muththamiz] தேவை ஒரு விவசாய புரட்சி
To: முத்தமிழ் <muththamiz@googlegroups.com>

அடிப்படையில், ஒரு விவசாயக் கூலி தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த நாங்கள், பல்வேறு காரணங்களுக்காக அருகில் இருக்கும் நகரம் (தேனி) இடம் பெயர்ந்தோம். எங்கள் தாத்தாவிற்குச் சொந்தமான ஒரு சிறு வயலில், விவசாயம் பார்த்த பொழுது, பெரும்பாலும் வரும் வருமானம் வாய்க்கும், வயித்துகுமே போதுமானதாக இருந்தது. அதனை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், நான் இந்த வலைப்பதிவை ஆரம்பித்தேன். அதன் பின்னர் தான், என்னை விட பலபேர் நல்ல முறையில் இதனை அணுகியிருப்பதை காண முடிந்தது.

அவர்களுடைய பதிவுகளிலிருந்து சில நல்ல தகவல்களை பெற முடிந்தது.

1. http://agmarknet.nic.in/ - இங்கு அனைத்து வித விவசாய விளைபொருட்கள் விற்பனை சம்பந்தப் பட்ட விசயங்களை பெற முடிகிறது.
இதனுடைய தமிழக பிரிவின் அலுவலகம், Commissioner, Agricultural Marketing & Agri Business Directorate, Thiru Vi Ka Industrial Estate, Chennai-600032.
இ-மெயில் : amdtn@tn.nic.in மற்றும் agmarkbusiness@rediffmail.com
தொலைபேசி எண்கள் -044-22347484 , 044-22347485, 044-22347454(Fax)

2. http://gis.nic.in/agmarknet/home.asp - அரசு சார்ந்த இந்த நிறுவனத்தின் தற்போதைய செயல் திட்டங்களின் நோக்கம் நிறைவாக இருக்கின்றது. இதனுடைய தற்போதைய நிலை என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் பல தகவல்கள் உண்டு... என்னுடைய "களத்துமேடு" பகுதியை பார்வையிடுங்கள்...

"தகவல் தொழில்நுட்ப பயனை விவசாயிக்கு தருவோம்...
விவசாயத்தை லாபம் மிக்க தொழில் ஆக்குவோம்..." - என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப, முதல் கட்டமாக, தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.

1. பிப்ரவரி - தகவல் திரட்டுதல்
2. மார்ச் - இணைய தள ஒருங்கிணைப்பு மற்றும் "உழைப்பு - பலன் (Cost-Benefit Analysis)" அடிப்படையில் தகுதிப் படுத்தல்.
3. ஏப்ரல் - ஒருங்கிணைந்த திட்டமிடல் (Integrated Planning)
4. மே - நேர்காணல் மற்றும் முதல் கட்டப் பணி செயல்படுத்தல். (களப்பணி - செல்லம்மாள் செந்தில்நாதன்)
5. ஜூன் - மாதிரி பண்ணை அமைத்தல் - செல்லம்மாள் செந்தில்நாதனின் முதலீடு
6. ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர்-அக்டோபர்- மாதிரி பண்ணையின் செயல்பாடுகளும், பயன்களும், லாபமும்...
7. நவம்பர் - மாதிரிப் பண்ணையின் அடிப்படையில், ஒரு கிராமத்தை தத்து எடுத்தல் - (களப்பணி - செல்லம்மாள் செந்தில்நாதன்)
8. தை -1, 2009 - வெற்றிகரமான மாதிரி கிராம அடிப்படையில், மற்ற கிராமங்களுக்கும் விழிப்புணர்வு அளித்து, ஊக்குவித்தல்...
9. இதனை தொடர்ந்து செயல்படுத்த ஒரு அமைப்பை உருவாக்குதல்


உங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்ய தவறாதீர்கள்....

மேலும் விபரங்களுக்கு:
http://vellamai.blogspot.com/2008/02/blog-post.html


--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---



--
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

சனி, 12 ஜனவரி, 2008

[தமிழர் கண்ணோட்டம்] பொங்கல் மலர் 2008 வெளிவந்துவிட்...


உலகத் தமிழர்கள் அனைவருக்கும்
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!
 
தமிழரென்று சொல்வோம் தரணியை செல்வோம் !
 
தமிழர் கண்ணோட்டம்
தமிழ்த் தேசிய மாத இதழ்
 
ஆண்டுதோறும் வெளிக் கொண்டு வரும்
பொங்கல் மலர் வெளிவந்துவிட்டது !
 

 < மார்க்சியம் >

< பெரியாரியம் >

 <  தமிழ்த் தேசியம் >

உள்ளிட்ட கருத்தியல்களின் செய்திச் சுரங்கமாக
அறிவுப்பெட்டகமாக வெளிவந்திருக்கும்
 
தமிழர் கண்ணோட்டம்
பொங்கல் மலர் 2008
வாங்கிப் பயன்பெறுங்கள் !

 
 
தொடர்புக்கு
தமிழர் கண்ணோட்டம்,
20/7, முத்துரங்கம் சாலை,
தியாகராய நகர்,
சென்னை -17
பேச  9445295002, 9841949462
 
அஞ்சலில் பெற விரும்புபவர்கள் மேற்கண்ட முகவரிக்கு
ரூ.100 க்கு MO அல்லது DD அனுப்பி வைக்கலம்.
மலர் தங்கள் வீடு தேடி வரும்.
 

வியாழன், 10 ஜனவரி, 2008

இந்தி மற்றும் ஆங்கிலத் திணிப்பை எதிர்த்து ...

இந்திய அரசின் இந்தித் திணிப்பையும்
தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பையும்
எதிர்த்து
மொழிப்போர் நாளில்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம்

நாள் : 25-01-07, வெள்ளி காலை 10 மணிக்கு

இந்தித் திணிப்பை எதிர்த்து

இடம் : தஞ்சைத் தலைமை அஞ்சலகம்
தலைமை : தோழர் பழ.இராசேந்திரன்,
தஞ்சை மாவட்ட செயலாளர், த.தே.பொ.க

ஆங்கிலத் திணிப்பை எதிர்த்து

இடம் : சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்
தலைமை : தோழர் அ.பத்மநாபன்,
தலைமைச் செயற்குழு, த.தே.பொ.க

          ஆறரைக் கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டில் தமிழகத்தின் ஆட்சிமொழியாகிய தமிழை இந்திய அரசு வட்டார மொழி என்று கொச்சைப்படுத்துகிறது. தமிழைப் புறந்தள்ளி இந்தியை தேசிய மொழி என்று கூறி இங்கு திணிக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படும் அஞ்சல்துறை, தொடர்வண்டித் துறை, வங்கிகள், ஈட்டுறுதி (இன்சூரன்ஸ்) அலுவலகங்கள் மற்றுமுள்ள தில்லி அரசின் நிறுவனங்கள் அனைத்திலும் தமிழக மக்கள் பயன்படுத்தத் தமிழ்; மொழியை அலுவல் மொழியாக வைக்காமல், இந்தியையும் ஆங்கிலத்தையும் அலுவல் மொழியாக வைத்துள்ளது இந்திய அரசு. தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளவில்லை இன்னும் அயலார் ஆட்சியின் கீழ் தான் நீடிக்கிறார்கள் என்று உணர்த்துவதாக இந்நிலை உள்ளது.

            தமிழில் தந்தி கொடுக்க சில நகரங்களில் வசதி செய்வதாக சொன்னார்கள். தொடக்கத்திலிருந்தே அதைச் சரியாக செயல்படுத்தவில்லை. எந்திரம் பழுது என்றார்கள் அலுவலர்கள்;; தமிழில் கொடுத்தால் தந்தி தாமதமாகத்தான் போகும் என்றார்கள். இவ்வாறாகத் தமிழில் தந்தி கொடுப்பதை ஒழித்தார்கள்.

             உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாகக் கொண்டுவர, இந்திய அரசு ஆணையிடக் கோரி அரசமைப்புச் சட்ட விதி 348(2)-இன் கீழ் தமிழக அரசு தில்லிக்கு முறையான கடிதம் அனுப்பியது. அவ்வாறு தமிழை வழக்கு மொழி ஆக்க முடியாது என்று மறுத்து நடுவண் அமைச்சரவை தமிழக அரசின் கடிதத்தைத் திருப்பி அனுப்பிவிட்டது.
 ஆனால் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக இந்தி ஏற்கப்பட்டுள்ளது.
 
                இப்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் உள்பட அனைத்து உயர்நீதி மன்றங்களும் இந்தியில் தீர்ப்புரை வழங்கிட ஆணையிடுவதற்குரிய முயற்சியில் இந்திய அரசு இறங்கியுள்ளது. இதற்காக நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை பெற்றுள்ளது.
 இந்திய அரசு நிறுவனங்கள், இந்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்தியில் தான் பெயர் சூட்டப் பெறுகின்றன. தொலைத்தொடர்புத் துறைக்கு பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) என்றும், "அனைவருக்கும் கல்வி" என்ற திட்டத்திற்கு சர்வ சிட்சா அபியான்(எஸ்.எஸ்.ஏ) என்றும் பெயர் சூட்டியுள்ளார்கள்.

 இந்தி படித்தால் வடநாட்டில் வேலை கிடைக்கும் என்றார்கள். இந்தி படித்த தமிழர்களுக்கு வடநாட்டில் வேலை கிடைக்கவில்லை. மாறாக, இந்திக்காரர்கள் தாம் தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டித்துறை, பி.எச்.இ.எல், பெட்ரோலியத்துறை போன்ற இந்திய அரசுத் துறைகளில் ஏராளமாக வேலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அத்துடன், தனியார் தொழில் துறை, வணிகம், தெருவோர விற்பனை போன்றவற்றிலும் இங்கு இந்திக்காரர்கள் ஆக்கிரமித்து வருகிறார்கள். தமிழர்களுக்கு வடநாட்டில் வேலை கிடைக்காதது மட்டுமல்ல, வடநாட்டார் ஆதிக்கத்தால் தமிழ்நாட்டு வேலை வாய்ப்புகளும் பறிபோகின்றன. 

எனவே தீவிரப்படுத்தப்பட்டுள்ள இந்தித் திணிப்பை எதிர்ப்பதற்கு அடையாளமாக தஞ்சைத் தலைமை அஞ்சலகம், தொலைத் தொடர்பு அலுவலகம் ஆகியவற்றில் 25-1-2008 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
 
ஆங்கிலத் திணிப்பை எதிர்த்து

 மேற்கண்ட இந்தித்திணிப்பையும், இந்திக்காரர் ஆக்கிரமிப்பையும் எதிர்க்க மறுக்கும் தமிழக அரசு தனது அதிகாரத்துக்குட்பட்ட நிறுவனங்களில் ஆங்கிலத்தைத் திணித்துத் தமிழைப் புறந்தள்ளுகிறது. தமிழக அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு முதலில் ஆங்கிலத்தில் பெயர் சூட்டுகிறார்கள். அதன் பிறகு தமிழிலும் பெயர் வைக்கிறார்கள். இதனால் அலுவலர்கள் மட்டத்தில் அத்திட்டம் ஆங்கிலப் பெயராலேயே அழைக்கப்படுகின்றது. திட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டுவதை அடியோடு நிறுத்த வேண்டும்.

 தமிழக அரசு நடத்தும் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், நிறுவனப் பெயரை ஆங்கிலத்திலேயே எழுதுகின்றனர். விரைவுப் பேருந்துகளில் எஸ்.இ.டி.சி என்றும், மற்ற பேருந்துகளில் டி.என்.எஸ்.டி.சி என்றும் எழுதியுள்ளார்கள். அதே போல் "அல்ட்ரா டீலக்ஸ்", "பாயிண்ட் டு பாயிண்ட்" என்று ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார்கள். இப்பொழுது கணிப்பொறிகள் மூலம் நடத்துனர்கள் கொடுக்கும் பயணச்சீட்டுகள் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன.

தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தில், விதிவிலக்கு என்ற பெயரில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதற்கு விரிவாக உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதைத் திருத்தி தமிழ்நாட்டு அரசுத் துறைகளில் தமிழ் மட்டுமே அலுவல் மொழி என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
தமிழக அரசின் இரு மொழிக் கொள்கை ஆங்கிலத்திற்கே மேலாண்மை தருகிறது. இதனால் அன்றாடம் நம் தமிழ்மொழியை ஆங்கிலம் ஒடுக்கி உருக்குலைத்து வருகிறது.
ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாகக் கற்பதை நாம் ஆதரிக்கிறோம். ஆனால் பயிற்றுமொழியாக (Medium), தமிழ் மட்டுமே இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழக அரசுத்துறை மற்றும் இந்திய அரசுத்துறை ஆகியவற்றில் எந்த விதிவிலக்கும் இல்லாமல் தமிழ் மட்டுமே அலுவல் மொழியாக செயல்பட வேண்டும். இது தான்  ஒருமொழிக் கொள்கை.
இந்தி, ஆங்கிலம், தமிழ் மூன்றையும் கல்விமொழியாகவும் அலுவல் மொழியாகவும் வைக்கக் கூறுகிறது காங்கிரசு, பா.ச.க. கட்சிகளின் மும்மொழிக் கொள்கை. ஆங்கிலம், தமிழ் இரண்டையும் கல்விமொழியாகவும், அலுவல்மொழியாகவும் வைக்கக் கூறுகிறது கழகங்களின் இருமொழிக்கொள்கை. இந்த இருமொழிக் கொள்கை இப்பொழுது இந்தித்திணிப்பை தனது மவுனத்தின் மூலம் ஏற்றுக் கொள்கிறது.
 
மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை
இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை
ஒருமொழிக் கொள்கையே உரிமைக் கொள்கை

மொழிப் போர் நாளான 25-1-2007 அன்று தமிழக அரசின்  ஆங்கிலத் திணிப்பை எதிர்த்து, சென்னை கோயம்பேட்டில் அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டுள்ள ஆங்கில எழுத்துகளைத் தார்பூசி அழிக்கும் போராட்டம் நடைபெறும்.

தஞ்சை, சென்னை கோயம்பேடு ஆகிய இடங்களில் நடைபெறும் இப்போராட்டங்களில் திரளாகக் கலந்து கொள்ளுமாறு தமிழ் உணர்வாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம். எந்த இடத்தில் எந்தெந்தப் பகுதித் த.தே.பொ.க. தோழர்கள் கலந்து கொள்வது என்று முறைப்படுத்தப்பட்டுள்ளது.  மற்ற தமிழ் உணர்வாளர்கள் அவரவர் வாய்ப்புப்படி தஞ்சை அல்லது கோயம்பேட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

1938ல் தந்தை பெரியார், மறைமலை அடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற தலைவர்கள், சான்றோர்கள் தலைமையில் தமிழ் காக்கும் மொழிப் போர் தொடங்கியது. இப்போராட்டத்தில் நடராசன், தாளமுத்து ஆகியோர்  சிறைக்கொட்டடியில் மரணத்தைத் தழுவினர். 1965-இல் இந்தித் திணிப்பை எதிர்த்த போராட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரன் மார்பில் துப்பாக்கிக் குண்டேந்தி முதல் களபலி யானார். மாபெரும் தமிழ்த் தேசிய எழுச்சியாக நடந்த அம்மொழிப் போரில் முந்நு}றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் மற்றவர்களும் காங்கிரசு ஆட்சியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கீழப்பழூர் சின்னச்சாமி தொடங்கி, தன் உடலையே தமிழ் உணர்ச்சியின் தழல் சுடராய் எரியவிட்டு மடிந்தோர் பலர். நஞ்சுண்டு மடிந்து நம் தமிழ் உணர்வூட்டியோர் பலர்.
 
அந்த மான மறவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.
ஆதிக்க இந்தியையும் ஆங்கிலத் திணிப்பையும் முறியடிப்போம்.
போராடப் புறப்படுவீர்!

தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி,
20-7, முத்துரங்கம் சாலை, தியாகராய நகர், சென்னை-17.
தொடர்புக்கு  9445295002, 9841949462