ஞாயிறு, 19 ஜூலை, 2009

தமிழ்த் தேசியம் - சிறப்பு மாநாட்டுத் தீர்மானங்கள்



தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் 12.07.09 அன்று திருச்சியில் நடத்தப்பட்ட "தமிழ்த் தேசியம்" - சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் :
 
தீர்மானம் 1 : தமிழ்த்தேசிய எழுச்சி நாள் போராட்டம்
 
தமிழர்களுக்கு நவீன கால அடிமைத்தளை ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் வன்கவர்தல் வழி முந்நூறு ஆண்டுகளுக்கு முன் ப+ட்டப்பட்டது. அதற்கு முன் பிற்காலப் பாண்டிய அரசு, பிற்காலச்சோழப்பேரரசு ஆகியவை வீழ்ச்சியடைந்ததையொட்டி, அயல் இனப்படைத் தளபதிகள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்திருந்தனர். இந்த அயலார் தமிழ் இன அடையாளங்களை அழித்தது ஒரு பக்கம் இருக்க,ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்கள், தமிழர்களைத் தங்களுக்கு வரலாற்றுவழி உறவு எதுவுமில்லாத வட நாட்டினங்களோடு பிணைத்தனர்.
 
நீண்ட நெடுங்காலத்திற்கு நிலைக்கும்படியான அடிமை நுகத்தடியைத் தமிழர்கள் கழுத்தில் ஆங்கிலேயர் பூட்டினர். தில்லி அதிகார நடுவத்தின் அடிமை உறுப்பாக தமிழர் தாயகத்தை முதல் முதலாகப் பிணைத்தனர். அதன்வழி ப+ட்டப்பட்ட அரசியல், பொருளியல், பண்பியல் விலங்குகளை இன்று வரைச் சுமந்து தமிழினம் துன்புறுகிறது. 1947ஆகஸ்ட் 15-இல் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இந்தியாவிற்கு அரசியல் விடுதலை தந்தது. ஆனால் இந்தியாவுக்குள் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழ்நாட்டிற்கு அரசியல் விடுதலை கிடைக்கவில்லை. இதை அப்போதே தந்தை பெரியார் சுட்டிக் காட்டினார். 1947ஆகஸ்ட் 15-க்குப் பிறகு இந்தியாவில் தமிழர்கள் இழந்துள்ள உரிமைகளைப்; பட்டியல் இட்டால் ஏட்டில் அடங்காது. மொழிவாரி மாநிலப் பிரிப்பின்போது திருப்பதி, சித்தூர், புத்தூர், காளத்தி, பலமநேரி உள்ளிட்ட தமிழக நிலப் பகுதிகள் ஆந்திரப்பிரதேசத்தில் சேர்க்கப்பட்டன. கோலார் தங்கவயல், கொள்ளே காலம் போன்ற தமிழகப்பகுதிகள் கர்நாடகத்துடன் சேர்க்கப்பட்டன. மூணாறு, தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, கொச்சின் சித்தூர், செங்கோடை வனப்பகுதி போன்ற தமிழர் தாயகப்பகுதிகள் கேரளத்துடன் இணைக்கப்பட்டன. காவிரி , முல்லைப்பெரியாறு, பாலாறு ஆகியவற்றின் உரிமைகள் அண்டை மாநிலங்களால் பறிக்கப்பட்டன.
 
இந்திராகாந்தி தமிழகத்திற்குச் சொந்தமான கச்சத்தீவைப் பிடுங்கி சிங்கள அரசிடம் கொடுத்தார்.சிங்களப்படை அன்றாடம் தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொல்கிறது. உலகமயம் என்ற பெயரில் பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளைக்குத் தமிழ்நாட்டைத் திறந்துவிட்டுள்ளது இந்தியா. ஏற்கெனவே, மார்வாரி, குசராத்தி சேட்டு முதலாளிகளின் ஆதிக்கத்தில் தமிழகப் பொருளியல் சீரழிகிறது. தமிழக வேலைவாய்ப்புகளை மலையாளிகளும் வடநாட்டாரும் கைப்பற்றிக்கொண்டுள்ளனர்.
 
"இந்திய தேசியம்" என்ற இல்லாத தேசியம் இதற்கெல்லாம் கதவு திறந்துவிடுகிறது.மனித அழிப்பு ஆபத்து நிறைந்த அணுமின் உலைகளை மிகுதியாகத் தமிழ் நாட்டில் திறக்கிறது இந்தியா .எடுத்துக்காட்டு கூடங்குளம்! எல்லாக்கொடுமைக்கும் சிகரம் வைத்ததுபோல் இந்திய அரசு இலங்கை இனவெறி அரசுடன் கூட்டுச் சேர்ந்து ஈழத்தில் தமிழினத்தை அழித்தது. தொடர்ந்து தமிழின அழிப்பில் அங்கு ஈட்டுபட்டும் வருகிறது.
 
எல்லா உரிமைகளையும் இழந்து இன அழிப்புக்கும் உள்ளான தமிழர்கள், வெள்ளை அரசின் கொடுமையைவிட அதிகமான கொடுமைகளையே இந்திய அரசின் கீழ் சுமக்கிறார்கள். இந்தி மற்றும் ஆங்கில ஆதிக்கத்திற்கு சட்ட ஏற்பு இருக்கிறது. தமிழ்மொழிக்கு அரசமைப்புச் சட்டப்படி ஆட்சி மொழி உரிமை இல்லை. தமிழர்களின் அரசுரிமையைப் பறித்துக்கொண்டு ஒரு கங்காணிச் சட்டபேரவையை "ஆட்சிமன்றம்" என்ற பெயரில் தமிழ்த்தேசிய இனத்தி;ற்கு இந்தியா கொடுத்துள்ளது.
 
தில்லியின் விசுவாச ஊழியராக விளங்கும் தமிழக முதல்வர் , கலைஞர் கருணாநிதி கூட "நானே ஒரு அடிமை, நான் இன்னொரு அடிமையான ஈழத்தமிழனுக்கு எப்படி உதவ முடியும்" என்று அண்மையில கேட்டார். தமிழ்த்தேசிய இனம் சுமக்கும் அடிமை நிலையின் அளவைப் புரிந்துகொள்ள இவர் கூற்றும் ஒரு சான்று. தமிழ்த்தேசிய இனத்தின் அரசியல் இறையாண்மையை மீட்டுத் தமிழ்தேசக் குடியரசு நிறுவப்பட்டால்தான், தமிழ்மக்கள் தங்களின் பறிபோன உரிமைகளை முழுமையாகவும் இறுதியாகவும் மீட்கமுடியும். காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு, பவானி, மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக எல்லைப் பகுதியில் உற்பத்தியாகும். ஆறுகள், கச்சத்தீவு முதலியவற்றில் நாம் பறிகொடுத்துள்ள உரிமைகளை மீட்க, தமிழகமெங்கும் முதற்கட்டமாக தமிழ்த்தேசிய எழுச்சி நாள் ஒன்றைக் கடைபிடிக்கவேண்டும் என்று இம்மாநாடு தமிழ் மக்களைக் கேட்டுக்கொள்கிறது.
 
தமிழ்த்தேசிய எழுச்சி நாளில் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், தெரு முனைக்கூட்டங்கள், கலை நிகழ்வுகள் ,பல்வேறு வடிவங்களில் பரப்புரைகள் எனச் செயல்படுமாறு மாநாடு கேட்டுக்கொள்கிறது. தோழமை இயக்கங்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் இன உணர்வாளர்கள் ஆகிய அனைவரும் கூட்டாக இவ்வெழுச்சி நாளைக் கடைபிடிக்க முன்முயற்சிகள் எடுக்க வேண்டும். திருவள்ளுவராண்டு ஆவணிமாதம் நான்காம் நாள், அதாவது 2009ஆகஸ்டு மாதம் 20-ஆம் நாள் வியாழக்கிழமை தமிழ்த்தேசிய எழுச்சி நாள் கடைபிடிக்கப்படும் என்று தமிழ்த்தேசியம் - சிறப்பு மாநாடு தீர்மானிக்கிறது. ஏற்கெனவே நம்முன்னோர்கள் - அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், விடுதலைப் போராளிகள், இன உணர்வுமிக்க இளைஞர்கள் தமிழ்த்தேசிய உரிமைகளுக்காக பலவாறு போராடியிருக்கிறார்கள். உயிர் ஈகம் செய்துள்ளார்கள். கடந்த காலச் சாதனைகளிலிருந்து வீரம்பெற்று, கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்று, திசையைத் தீர்மானித்துக்கொண்ட, தமிழ்த்தேசியத்தின் புதிய தொடக்கமாக தமிழ்த்தேசிய எழுச்சி நாள் அமையட்டும்! வெல்வோம!
 
தீர்மானம் 2: ஈழத்தமிழர் துயர் துடைப்புப் பணிகளில் இருந்து இலங்கை அரசை நீக்க வேண்டும் ஐ.நா.மன்றமே அப்பணிகளைச் செய்யவேண்டும்!
 
தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நசுக்கிட ஈழத் தமிழ் இன அழிப்புப் போரை நடத்திய சிங்கள இனவெறி அரசுக்கு, படை, பணம், அரசியல் வழிப்பட்ட அனைத்து உதவிகளையும் செய்து மனித அழிப்புப்போரில் பங்குகொண்ட இந்திய அரசை தமிழ்த் தேசியம் - சிறப்பு மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. கடந்த மே 16,17,18 நாட்களில் மட்டும் 45ஆயிரம் தமிழர்களும் விடுதலைப் போராளிகளும் சிங்களப்படை ஏவிய பாஸ்பரஸ் குண்டு வீச்சிலும், கொத்துக் குண்டு வீச்சிலும் கொல்லப்பட்டனர். இவ்விருவகைக் குண்டுகளும் ஐ.நா.மன்றத்தாலும் பன்னாட்டுச் சமூகத்தாலும் தடைசெய்யப்பட்டவை. மூன்றரை இலட்சம் தமிழர்களைச் சிங்கள அரசு முள் கம்பிவேலி வதை முகாம்களில் அடைத்து வைத்துள்ளது.
 
ஒரு தேசத்தையே அழிக்கும் குருதி வெறிகொண்டு அலையும் சிங்கள நாஜி அரசுக்கு இந்திய ஏகாதிபத்தியம் மட்டுமின்றி சீனா, ரசியா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகள் போர்க்கருவிகளை வாரி வாரி வழங்கின. போர் விதிமுறைகளைப் புறந்தள்ளி, தமிழ் மக்களைக் கூட்டங்கூட்டமாக இனப்படுகொலை செய்த இலங்கையின் குடியரசுத்தலைவர் இராசபட்சேயும் அவரது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் போர்க்குற்றவாளிகள் ஆவர். ஈழத்தமிழின அழிப்புப்போரில், அரசுப்படைகளோ, விடுதலைப்புலிகளோ, யார் போர் விதிமுறைகளை மீறியிருந்தாலும் அவர்களை விசாரிக்க இலங்கை அரசு ஒரு குழு நியமிக்கவேண்டும் என்று சுவிட்லார்ந்து முன் மொழிந்த தீர்மானத்தைக்கூட ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் எதிர்த்து வாக்களித்தது இந்தியா.
 
கம்ய+னிஸ்ட் கியுபாவும், இடதுசாரி அரசுகளைக் கொண்டுள்ள பொலிவியா, நிகரகுவா ஆகிய நாடுகளும், கம்ய+னிச முகமூடி போட்டுக்கொண்டுள்ள புதிய ஏகாதிபத்தியமான சீனாவும் கூட அந்தத் தீர்மானத்தை எதிர்த்தன. வியட்நாம் சிங்கள அரசை ஆதரித்து வருகிறது. நிலக் கோளத்தில் பத்து கோடித் தமிழர்கள் வாழ்ந்தும் நமக்கென்று ஒரு நாடு இல்லாததால் பன்னாட்டு அரசியலில் தமிழர்கள் அனாதைகளாகவே உள்ளனர். தமிழகத்தில் 6.1ஃ2 கோடி மக்கள் வாழ்ந்தும் தமிழகத்திற்கென்று இறையாண்மையோ, தேசமோ இல்லை. தமிழர்களுக்கு இறையாண்மையுள்ள நாடு வேண்டும்.
 
சிங்கள அரசு தமிழர்களை அடைத்து வைத்துள்ள வதை முகாம்களில் ஒரு வாரத்திற்கு 1400 தமிழர்கள் சாகிறார்கள் என்று இலண்டனிலிருந்து வெளிவரும் 'டைம்ஸ்' ஏடு கணக்கிட்டுள்ளது. நோயினால், பட்டினியால் சாவோரும், சிங்களப் படையாட்களால் சுட்டுக் கொல்லப்படுவோரும் இவ்வெண்ணிக்கையில் அடக்கம். இப்படியே போனால் எஞ்சியுள்ள ஈழத்தமிழர்களும் அழிந்துபோவார்கள். சிங்கள -இந்திய அரசுகளின் விருப்பம்போல் ஈழத்தமிழினம் முற்றாக ஒழிக்கப்பட்டு விடும். இந்த மனித அழிவைத் தடுத்து நிறுத்தக்கோரி ஐ.நா. மன்றத்தையும்,பன்னாட்டுச் சமூகத்தையும் தலையிட வைப்பதே இப்பொழுது நம்முன் உள்ள உடனடிக் கடமை. மனிதப் பேரழிவைத் தடுக்கும் மனச்சான்றுடன், தமிழ்நாடெங்கும் போராட்டங்கள் பெருவீச்சில் நடைபெற வேண்டும்.
 
போராட்டக் கோரிக்கைகள்:-
 
1.போர்க் குற்றவாளிகளான மகிந்த இராசபட்சே - கோத்தபய- பொன்சேகா ஆகியோரை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும். அவர்களோடு கூட்டுச் சேர்ந்து போர்க்குற்றத்தில் ஈடுபட்ட மன்மோகன்சிங், ஏ.கே. அந்தோணி ஆகியோரையும் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
 
2. ஈழத்தமிழர் துயர் துடைப்புப் பணிகளிலிருந்து இலங்கை அரசை முற்றிலும் விலக்கிவிட்டு, ஐ.நா.மன்றமும், பன்னாட்டுச் சமூகமும் மட்டுமே அப்பணிகளைச் செய்யவேண்டும்.
 
3. வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் அனைவரையும் விடுவித்து அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
 
4. ஈழத்தமிழர் தாயகப்பகுதிகளான வடக்கு, கிழக்கு மாநிலங்களில் சிங்களர்களைக் குடியேற்றுவதை ஐ.நா.மன்றமும் பன்னாட்டுச் சமூகமும் தடுக்க வேண்டும்.
 
5. 'வடக்கில் வசந்தம்' என்ற பெயரில் இந்தியாவின் ஆரிய நாஜிகளான என்.ராம் - எம்.எஸ்.சாமிநாதன் குழுவினர்; ஈழத் தமிழர் வேளாண்மை, தொழில் மற்றும் வணிகத்தில் தலையிடுவதைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
 
தீர்மானம்: 3 தமிழகத்தில் மூன்றாண்டு வசித்துள்ள ஈழத்தமிழ் ஏதிலியருக்குக் குடியுரிமை வழங்க வேண்டும்.
 
தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் ஏதிலியர் முகாம்கள், சிறைச்சாலைகளை விடவும் மோசமானவை. சிறைச்சாலைகளில் உள்ள துப்புரவு, குடிநீர், கட்டடப்பாதுகாப்பு, மருத்துவம், உணவு போன்ற உறுதிப்பாடுகள் எதுவும் இந்த முகாம்களில் இல்லை. இவர்களுக்கான உதவித்தொகை மிகமிகக் குறைவாக உள்ளது. இவர்கள் சுதந்திரமாக வெளியே போய் வர அனுமதிப்பதில்லை. இவர்களை மற்றவர்கள் முகாம்களில் போய் எளிதில் சந்திக்க முடியாது. காவல் கெடுபிடிகள் அதிகம். முகாம்களுக்கு வெளியே வாடகை வீடுகளில் தங்கியிருக்கும் ஈழத்தமிழர் அவலம் அதிகம். அவர்கள் காவல்நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். வீடு மாறினால் அதற்குரிய காவல்நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் .
 
இவ்வாறான பதிவுக்கும் ஏதாவது சான்றிதழ் வாங்க வேண்டுமெனில் அதற்கும் காவல்நிலையத்தில் கைய+ட்டு கொடுக்க வேண்டியுள்ளது. இந்திய அரசும், தமிழக அரசும் திபேத்திய ஏதிலியரை நடத்துவதுபோல் ஈழத்தமிழ் ஏதிலியரையும் கண்ணியமாகவும், நாகரிகமாகவும் நடத்த வேண்டும். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்குக் கிடைக்கும் உரிமைகள் அனைத்தையும் இவர்களுக்கு வழங்கவேண்டும். ஐ.நா. அமைப்பு ஏதிலிகளுக்கு அறிவித்துள்ள உரிமைகளை ஈழத்தமிழர்களுக்கு கிடைக்க வேண்டும். மூன்றாண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் தங்கியுள்ள ஈழத்தமிழ் ஏதிலியர் விரும்பினால் அவர்களுக்கு இங்கு குடியுரிமை வழங்கவேண்டும். வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
இப்பொழுது, ஏதிலியர் முகாம்களில் குடும்பத் தலைவராக உள்ள ஆணுக்கு 1 மாதத்திற்கு ரூ.400 என்றுள்ள உதவித்தொகையை ரூபாய் ஆயிரமாக உயர்த்த வேண்டும். குடும்பத்தலைவிக்கு இப்பொழுதுள்ள ரூ.288 மாத உதவித்தொகை ஆயிரமாக உயர்த்த வேண்டும். 13 வயதுக்குள் உள்ள பிள்ளைகளுக்குத் தலைக்கு ரூ.180 என்றுள்ள மாத உதவித்தொகையை ரூ.500 ஆக்க வேண்டும். 13-வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் அனைவர்க்கும் ரூ.288 ஆக உள்ள மாத உதவித்தொகையை ரூபாய 800 ஆக உயர்த்தவேண்டும். அவர்கள் அனைவர்க்கும் புதிய கான்கிரீட் - வீடுகள் கட்டித்தர வேண்டும்;. தட்டுப்பாடில்லாத குடிநீர் வசதி, துப்புரவு வசதி ஆகியவை செய்துதர வேண்டும. ஏதிலியர் முகாம் ஒவ்வொன்றிலும் அவர்களுக்கென்று தனி மருத்துவமனை இருக்க வேண்டும். சிறப்பு முகாம் என்று பெயரிட்டுள்ள சிறைச்சாலைகள் அனைத்தையும் கலைக்க வேண்டும். அவற்றில் உள்ளவர்களை அவரவர் விரும்பும் நாட்டிற்கோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள ஏதிலியர் முகாமுக்கோ அனுப்பி வைக்கவேண்டும்.
 
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமாறு இந்திய அரசையும்,தமிழக அரசையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
 
தீர்மானம் : 4 : ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கப் போராடியோர் - பேசியோர் மீது போட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.
 
தமிழ்நாட்டில் தமிழ் இன உணர்வாளர்களுக்கெதிரான ஒரு சார் நெருக்கடி நிலை (Selective Emaergency) உள்ளது என்றே கருதவேண்டியுள்ளது. ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கக் குரல் கொடுப்போரையும் தமிழ் இன உணர்வு அடிப்படையில் பேசுவோரையும் - ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கப் போராடுவோரையும் தமிழக அரசு, ஆள் தூக்கிச் சட்டங்கள் பயன்படுத்தியும,; காலனி ஆட்சியாளர்கள் தங்கள் ஆதிக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள போட்ட பழைய சட்டப்பிரிவுகளைப்; பயன்படுத்தியும் சிறையில் அடைக்கின்றது. பொதுக்கூட்டங்களில் பேசியதற்காக பலரைச்சிறையில் அடைத்ததும், சிலருக்குத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவியதும் நாடறியும். போர்நிறுத்தம் கோரி போராடிய பலரைக் குண்டர் சட்டத்தில் தமிழக அரசு அடைத்தது.
 
ஈழத்தமிழர்களை அழிக்கும் போருக்காக இந்திய அரசு தமிழகத்தின் வழியாக ஆயுதங்கள் அனுப்பி வருகிறது. ஒரு தடவை கோவை நீலாம்ப+ர் அருகே அவ்வாகனங்கள் செல்வதை எதிர்த்து சாலை மறியலில் உணர்வாளர்களும், பொதுமக்களும் ஈடுபட்டனர். இதற்காக தோழர் கோவை இராம கிருட்டிணன் (பெரியார் தி.க. பொதுச்செயலாளர்) உள்ளிட்ட தோழர்களை ஆள் தூக்கி சட்டமான தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் சிறைவைத்துள்ளனர.; மற்றும் 40 பேர்க்கு மேற்பட்டோரை, மிக மோசமான சட்டப்பிரிவுகளில் சிறை வைத்துள்ளனர்.
 
இந்திய அரசு - இலங்கையுடன் இணைந்து ஈழத்தமிழர்களுக் கெதிரான இன அழிப்புப்போர் நடத்துவதைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் ஆகியவை இந்திய - இலங்கை அரசுக்கொடிகளை எரிக்கும் போராட்டம் நடத்தின. போராட்டத்தில் கலந்துகொண்டோர் பிணை மறுப்பு வழக்கில் சிறைப்படுத்தப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இரகுபதி, பிணை வழங்குவதற்கு, இந்திய அரசுக்கொடியை அவரவர் வீட்டில் ஏற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அத்துடன் அனாதை இல்லத்தில் சேவை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
 
அடிப்படை மதவாதிகளும், சில நாட்டாண்மைகளும் வழங்கும் தீர்ப்பு போல் இது உள்ளது. தமிழ்த் தேசப்பொதுவுடைமைக்கட்சி தோழர் தமிழரசன் அவர்களும், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத் தோழர் பாரதி அவர்களும், மேற்கண்ட மனித உரிமைக்கு எதிரான நிபத்தனைகளை ஏற்க மறுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அவர்கள் இருவரும் இன்னும் கோவை நடுவண் சிறையில் உள்ளனர்.
 
இவையெல்லாம், தமிழ்நாட்டில் தமிழ் இன உரிமைக்கும் உணர்வுக்கும் எதிராக நிலவும் சனநாயக மறுப்புச் சூழலைக் காட்டுகின்றன. தமிழ் இன உணர்வாளர்கள்- இந்த அடக்கு முறைகளுக்கு அஞ்சாமல் போராடவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. தமிழக அரசு, தனது தமிழின எதிர்ப்புப் போக்கைக் கைவிட வேண்டும் என்றும், தமிழின உணர்வாளர்களின் கருத்துரிமை மற்றும் போராட்ட உரிமை ஆகியவற்றைத் தடை செய்யக்கூடாது என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. ஈழத்தமிழர்களைப் பாதுகாப்பதற்காக போராடியோர், பேசியோர் மீது போட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் இது தொடர்பாக சிறையில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் தமிழ்த்தேசியம் - சிறப்பு மாநாடு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

புதன், 15 ஜூலை, 2009

திருச்சியில் எழுச்சியுடன் நடந்த "தமிழ்த்தேசியம் - சிறப்பு மாநாடு" (படங்கள்)
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் திருச்சியில் நேற்று(12.07.09) நடத்தப்பட்ட "தமிழ்த் தேசியம் - சிறப்பு மாநாடு" சிறப்பாக நடந்தேறியது. தமிழினத்தின் தேசிய எழுச்சியை ஒரு எழுச்சி நாளாக கடைப்பிடிக்க வேண்டும், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஈழ உணர்வாளர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.



ஓவியங்கள் மற்றும் புகைப்படக் காட்சி

பாவலர் சமர்ப்பா குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் காலை 9 மணியளவில் மாநாடு தொடங்கியது. அதன் பின்னர், ஓவியங்கள் மற்றும் புகைப்படக் கண்காட்சி நடந்தது. இதனை தணிக்கை அறிஞர் மு.குமரசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் ஓவியர்கள் கவிபாஸ்கர், ஆவுடி கண்ணன், திருமலை, க.ஆனந்த் ஆகியோரின் ஓவியங்கள் மற்றும் புகைப்படக் கலைஞர் நியாஸ் அகமது அவர்களின் புகைப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஈழத்தமிழர் படும் அவலங்களை காட்சிப்படுத்தும் படங்கள் அரங்கம் முழுவதும் வைக்கப்பட்டிருந்தன. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் அதன் தோழமை அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

தமிழ்த் தேசிய அரங்கு

காலை 10.30 மணியளவில் தமிழ்த் தேசிய அரங்கு என்ற பெயரில் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியிள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் இக்கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கி பேசினார். ஈழத்தில் இன அழிவிற்கு முழு முதற் காரணமான இந்திய அரசே தமிழினத்தின் முதற்பகை என்பதை விளக்கினார்.

பின்னர் "உலகமயமும் தமிழ்த் தேசியமும்" என்ற தலைப்பில் தோழர் ம.செந்தமிழன் பேசினார். ஈழத்தில் நடந்த இன அழிவிற்கு உலகமய நாடுகள் எப்படி காரணமாக விளங்கின என்பது பற்றியும் உலக நாடுகளின் சதிகள் பற்றியும் அவர் விளக்கினார். அவருக்குப் பின், "மொழிக் கொள்கை" குறித்து முனைவர் அரசேந்திரன் பேசினார். தமிழ்த் தேசியத்தின் மொழிக் கொள்கை ஒரு மொழிக் கொள்கையே என்றும் இருமொழிக் கொள்கை, மும்மொழிக் கொள்கை ஆகியவை மோசடிகள் என்றும் அவர் விளக்கினார். அதன் பின்னர், மயிலாடுதுறை பேராசிரியர் த.செயராமன் "இழந்த நில, நீர் உரிமைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

கருப்புக் குரல் நாடகம்

(ஓவியர் புகழேந்தி உரையாற்றும் பொழுது)

(கருப்புக் குரல் நாடகத்திலிருந்து....)

(கருப்புக் குரல் நாடகத்திலிருந்து....)

பிற்பகல் 1.30 மணியளவில் தமிழீழத் திரைப்பட உதவி இயக்குநர்கள் அமைப்பு நடத்திய கருப்புக்குரல் கலை நிகழ்வு நடைபெற்றது. ஓவியர் புகழேந்தி அவர்கள் இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். பாடலுடன் தொடங்கிய இந்நாடகத்தில் ஓட்டு அரசியல்வாதிகளின் முகத்திரைக் கிழிக்கும் வண்ணம் காட்சியமைப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நாடகத்தை திரு. ஐந்து கோவிலான் இயக்கியிருந்தார். வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த தமிழர்களின் நிலையை காட்சிப்படுத்தியிருந்த விதம் பார்வையாளர்களை துக்கத்தில் ஆழ்த்தியது.

கலை நிகழ்ச்சி

(கலை நிகழ்ச்சியிலிருந்து....)

இதன் பின்னர், அரியமங்கலம் இலெட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய கலை நிகழ்ச்சி நடந்தது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய "சங்கே முழங்கு" பாடலுக்கு மாணவர்கள் நடனமாடினர்.

பாவீச்சு

(கவிஞர் கவித்துவன் பாவீச்சு நடத்துகிறார்...)

(கவிஞர் கவிபாஸ்கர் கவிதை வாசித்த பொழுது...)

இந்நிகழ்விற்குப் பின்னர், பல்வேறு கவிஞர்கள் பங்கு கொண்ட கவியரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வை "திருக்குறள்" முருகானந்தம் அவர்கள் தொடங்கி வைத்தார். கிறார். இப்பாவீச்சில், பாவலர்கள் தமிழேந்தி, கவித்துவன், கவிபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கவிதைகள் வாசித்தனர்.

படத்திறப்பு
அதன் பின்னர், அண்மையில் காலமான புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் அவர்களது திருவுருவப்படத் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி செந்தமிழர் இயக்க அமைப்பாளர் தோழர் ந.மு.தமிழ்மணி அவர்கள் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். திருமுருகனாரின் சிறப்பான குணங்களையும் தமிழ் இலக்கணத்தில் அவரது அறிவாற்றலையும் விளக்கி அவர் பேசினார். குடந்தைத் தமிழ்க் கழகத்தின் அமைப்பாளர் தோழர் சா.பேகன் அவர்கள் படத்தை திறந்து வைத்து உரை நல்கினார்.

கொடி எரிப்பில் சிறை சென்ற தோழர்களுக்கு பாராட்டு

(மொழிப்போர் ஈகி ப.பெரியசாமி உரையாற்றும் போது...)



 
(கொடி எரிப்பில் சிறை சென்ற தஞ்சை த.தே.பெ.க. நகரச் செயலாளர்
பழஇராசேந்திரன் அவர்கள் பாராட்டப்பட்ட போது...)

இந்நிகழ்விற்குப் பின், ஈழத்தில் தமிழின அழிப்புப் போரில் ஈடுபட்டுள்ள இந்திய - சிங்கள கூட்டுப் படையினரைக் கண்டித்து இந்திய இலங்கைக் கொடிகளை எரித்து சிறைக்கு சென்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மொழிப்போர் ஈகி ப.பெரியசாமி அவர்கள் தோழர்களுக்கு பாராட்டுப் பத்திரங்கள் வழங்கி சிறப்பித்தார்.

தீர்மானங்கள் முன்மொழிவு
(தோழர் கோ.மாரிமுத்து தீர்மானங்களை முன் வைக்கிறார்...)


 
(தோழர் மதுரை ஆனந்தன் தீர்மானங்களை முன் வைக்கிறார்...)


 
(தோழர் குழ.பால்ராசு தீர்மானங்களை முன் வைக்கிறார்...)

மாநாட்டுத் தீர்மானங்களை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு அவர்கள் படித்தார். முதல் தீர்மானத்தை த.தே.பொ.க. மேற்கு மண்டலச் செயலாளர் தோழர் கோ.மாரிமுத்து படித்தார். இரண்டாம் தீர்மானத்தை மதுரை மாவட்டச் செயலாளர் தோழர் ஆனந்தன் வாசித்தார். மூன்றாம் தீர்மானத்தை சிதம்பரம் நகர த.தே.பொ.க. செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் வாசித்தார். தீர்மானங்கள் பலத்த கருவொலியுடன் நிறைவேற்றப்பட்டன.

"தமிழீழ அரங்கு" - கருத்தரங்கம்

இதன் பின்னர், தமிழீழப் பிரச்சினை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு "இப்படிக்கு" இதழின் ஆசிரியர் வீ.ந.சோமசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார். அவரது தலைமையுரையில், கொலைகாரக் கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சியை பற்றியும் ஈழத்திற்கு இந்தியத் தேசியம் விளைவித்த தீமைகள் பற்றியும் விளக்கவுரையாற்றினார்.

(முனைவர் வீ.ந.சோமசுந்தரம் பேசுகிறார்...)

 
(தோழர் க.அருணபாரதி பேசுகிறார்...)

 
(தோழர் கண.குறிஞ்சி பேசுகிறார்...)

இதன் பின்னர், "ஈழத்தின் எதிர்காலம்" என்ற தலைப்பில் தோழர் க.அருணபாரதி பேசினார். "தமிழ்த்தேசியம் என்ற கருத்தியலே ஈழத்திற்கும் தமிழ்நாட்டு விடுதலைக்கும் உதவும் கருத்தியல்" என்பதை சாரமாகக் கொண்டு அவரது பேச்சு அமைந்திருந்தது. "இந்தியமும் ஈழமும்" என்ற தலைப்பில் வழக்கறிஞர் த.பானுமதி அவர்கள் உரைநல்கினார். இந்தியத்தேசிய மாயையிலிருந்து தமிழர்கள் விடுபட்டு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும் என்பதாக அவரது பேச்சு அமைந்திருந்தது. "ஈழமும் உலகநாடுகளும்" என்ற தலைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் தோழர் கண.குறிஞ்சி அவர்கள் ஈழத்தில் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் வாழ்நிலையை பற்றியும், உலக நாடுகள் ஈழப்பிரிச்சினையில் அக்கறை கொள்ளாதது பற்றியும் கருத்துரையாற்றினார்.

நிறைவரங்கம்

(நிறைவரங்க மேடையில் தலைவர்கள்...)

மாலை 7 மணியளவில் நிறைவரங்கம் தொடங்கியது. இந்நிகழ்விற்கு பாவலர் பரணர் அவர்கள் தலைமை தாங்கினார்.

(பாவலர் பரணர் பேசிய பொழுது...)


(தோழர் அமரந்தா பேசிய பொழுது...)

 
(தோழர் நா.வைகறை பேசிய பொழுது...)


 
(தோழர் மதுரை அருணா பேசிய பொழுது...)

தமிழக இளைஞர் முன்ணனி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை அவர்கள் தமிழ்த்தேசியமே இனி எதிர்கால வரலாற்ரைறத் தீர்மானிக்கும் என்று பேசினார். லத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகத் தலைவரும், மார்க்சிய எழுத்தாளருமான தோழர் அமரந்தா ஈழப்பிரச்சினையில் தவறான முடிவெடுத்த லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் அது குறித்து நடந்த கலந்துரையாடல்களைப் பற்றி பேசினார். மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் மதுரை அருணா அவர்கள் தமிழ்த் தேசியத்தில் பெண்களின் பங்கு குறித்து விளக்கிப் பேசினார்.


(தோழர் கொளத்தூர் மணி பேசிய பொழுது...)

 
(தோழர் தியாகு பேசிய பொழுது...)

சிறப்புரையாக, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி அவர்கள் உரையாற்றினார். பின்னர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்கள் தமிழ்த்தேசியம் சாத்தியமே என்ற சாரத்தில் உரை நிகழ்த்தி சிறப்பித்தார்.


(தோழர் பெ.மணியரசன் எழுச்சியுரையாற்றுகிறார் ...)

மாநாட்டின் நிறைவாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் எழுச்சியுரையாற்றினார். தோழர் வே.க.இலட்சுமணன் நன்றி கூறினார்.

மாநாட்டு ஏற்பாடுகளை திருச்சி மாநகர த.தே.பொ.க. அமைப்பாளர் தோழர் கவித்துவன் மற்றும் திருச்சி மாநகர தமிழ்க் கலை இலக்கியப் பேரவை அமைப்பாளர் தோழர் இராசாரகுநாதன், தி.மா.சரவணன், பி.ரெ.அரசெழிலன் உள்ளிட்ட பலரும் முன்னின்று சிறப்புற செய்திருந்தனர்.


--~--~---------~--~----~------------~-------~--~----~
------------------------------------------------------------------------------------------------------------------------------
                                    இளந்தமிழர் இயக்கம் -  கூகிள் குழுமம்

இணையதளம் : http://www.elanthamizhar.blogspot.com
மின்னஞ்சல் : elanthamizhar@gmail.com

குழுமத்தை பார்க்க : http://groups.google.com/group/elanthamizhar
மடல்கள் அனுப்ப : elanthamizhar@googlegroups.com
குழுமத்திலிருந்து விலக : elanthamizhar+unsubscribe@googlegroups.com
------------------------------------------------------------------------------------------------------------------------------
-~----------~----~----~----~------~----~------~--~---




--
Thanks and Regards...
                          K.ANAND B.Sc(Agri).,
                          145,Aravindar street,
                          pondicherry- 605001.
                          +91 9940800358
                     anand_1028@yahoo.co.in

செவ்வாய், 14 ஜூலை, 2009

திருச்சியில் அக்கட்சியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற “தமிழ்த் தேசியம்” சிறப்பு மாநாட்டில்

"இலங்கையில் தமிழின அழிப்புப் போர் இன்னும் முடியவில்லை , இதற்காகத்தான் இப்போதும் இந்திய ராணுவத்தின் உதவியைக் கோருகின்றனர்" என்று தமிழ்நாட்டிலுள்ள தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ. மணியரசன் கூறியுள்ளார்.

திருச்சியில் அக்கட்சியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "தமிழ்த் தேசியம்" சிறப்பு மாநாட்டில் அவரது நிறைவுரை:

"தமிழகத்தில் தமிழர்கள் அரசியல் விடுதலை பெற வேண்டும். ஈழத் தமிழர் விடுதலைக்கு நாம் துணை நிற்க வேண்டும். இந்த இரண்டும்தான் முக்கியக் கடமைகள்.

ஈழ விடுதலை என்ற முற்றிய கதிரை இந்திய, சீன அரசுகளின் உதவியுடன் இலங்கை ராணுவம் அழித்து நாசம் செய்துவிட்டது. ஆனாலும், அந்தப் போராட்டம் மீண்டும் வெல்லும்.

தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியத்துக்கான மண்ணின் சிக்கலை முன்வைக்காவிட்டால் நாம் இலங்கைத் தமிழர் விடுதலையைப் பேச முடியாது; அவர்களுக்கு துணை நிற்கும் அளவுக்கு வளரவும் முடியாது.

இலங்கையில் இப்போது முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மூன்றரை லட்சம் தமிழர்களை, வாரம் ஆயிரத்து ஐநூறு பேராகக் கொல்ல இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, இலங்கையில் இன அழிப்புப் போர் இன்னமும் முடிவடையவில்லை.

இதற்குத்தான் கண்ணி வெடிகளை அகற்ற உதவ வேண்டும் என்ற போர்வையில், இந்திய ராணுவத்தை அழைக்கிறார்கள். இனி இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பக் கூடாது.

தமிழ்நாட்டில் தமிழ்த் தேசத்தை நிறுவ பணம், பதவி, புகழுக்கு ஆசைப்படாத இளைஞர்கள் முன்வர வேண்டும். சேதாரமில்லாமல் தங்க நகையை உருவாக்க முடியாது.

இந்தியாவுக்குள் திபெத்திய அகதிகளுக்கான முகாம்கள் சிறப்பாக உள்ளன. அவர்களுக்கான உதவித் தொகைகளும் அதிகமாக வழங்கப்படுகின்றன. வெளிநாட்டு உதவிகளையும் அவர்கள் விரும்பினால் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், தமிழர்களுக்கான அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகளே இல்லை.

ஒவ்வொரு விடயத்துக்கும்  பொலிசாருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய அவல நிலையில் தமிழீழ ஏதிலிகள் தமிழ்நாட்டில் உள்ளனர். சலுகைகளைப் பெற, அதற்கான சான்றுகளைப் பெற அரசு அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது" என்றார் மணியரசன்.

பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ. மணி:

"இந்திய விடுதலையின்போதே "இந்த நாடு இனி யார் கைக்குச் செல்லுமோ?" எனக் கேட்டார் அம்பேத்கர். அதேபோல, தமிழ்ச் சூழலில் உள்ள சாதிய, மதக் கூறுகளை வைத்துக் கொண்டு என்ன செய்துவிட முடியும்? அதற்காக முன்தயாரிப்புகளைச் செய்ய வேண்டியுள்ளது.

நம்மைப் பற்றி இந்திய அரசு ஏன் அக்கறை கொள்ளவில்லை? என்ற கோபமும், வேகமும் தமிழ்நாட்டில் குறைவாக இருக்கிறது. நியாயமான கோபத்தை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

விடுதலைக்கான ஆற்றலை வளர்க்க வேண்டும்" என்று உரையாற்றினார் கொளத்தூர் தா.செ.மணி.

தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின்  தியாகு:

"தமிழ்த் தேசியம் சாத்தியமா? என்று கேட்கிறார்கள். இவ்வாறு கேட்டுக் கொண்டே இருந்தால் சாத்தியமில்லைதான். அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் தமிழ்த் தேசியம் சாத்தியமாகும்" என்றார் தியாகு.

எழுத்தாளர் அமரந்தா:

"சீன வளர்ச்சியை மாதிரியாக ஏற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது. சீனாவின் "சந்தை சோசலிசம்" கியூபாவையும் மீண்டும் முதலாளித்துவத்தை நோக்கி நகர்த்திவிடும். ஈழப் போராட்டம் குறித்து மக்கள் நலம் பேணும் கியூபா, வெனிசூலா, பொலிவியா போன்ற நாடுகளுடன் நாம் தொடர்ந்து விவாதிக்க வேண்டும். இன விடுதலைக்கான நீண்ட போராட்டத்தை அவர்களுக்கு விளக்க வேண்டும். இதற்கான பணியை "லத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகம்" மேற்கொண்டுள்ளது.

முதல் கட்டமாக அந்த அரசுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்துக்கு சில இடங்களில் இருந்து பதிலும் வந்துள்ளது. இந்தப்பணியை தொடர்ந்து மேற்கொள்வோம்" என்றார் அமரந்தா.

கவிஞர் நா. ராசா ரகுநாதன் வரவேற்றார். வே.க. லட்சுமணன் நன்றி கூறினார்.