வியாழன், 17 டிசம்பர், 2009

கற்றது தமிழ், பலன் ??? தற்கொலை !!!

தமிழ் படித்து அறிவை வளர்த்துக் கொண்டவன்தான் தமிழ்நாட்டில், வேலை யில்
சேர முடியும் என்ற நிலை எப்போதும் இருந்ததுமில்லை, இருக்கவுமில்லை,
இருக்கப் போவதுமில்லை.

தஞ்சைப் பகுதியில் 10 ஆயிரம் இளை ஞர்கள் தமிழைப் படித்துவிட்டு வேலை
கிடைக்காமல் முதிர்ந்து கொண்டிருக்கிறார் கள். இவர்கள் என்ன செய்யப்
போகிறார்கள்?

பேச்சாற்றலை வளர்த்துக் கொண்ட தமிழ்ப் பட்டதாரிகள் பட்டிமன்றம், வழக்காடு
மன்றம், தலைமைக் கழகங்களின் பேச்சாளர்களாவதற்கு முயற்சி செய்யலாம். உடல்
வலுவுள்ள தமிழ்ப் பட்டதாரிகள் 100 நாள் வேலைத் திட்டத்தில் குளைக்கால்
வெட்டப் போகலாம். மற்றவர்கள்?

தமிழில் எம்.எல்., எம்.பில்., பி.எட்., பி.எச்.டி., படித்து விட்டு 35
வயது வரை வேலைக்காக முயன்று தோற்ற பூமிநாதன் என்ற தலித் முதிர் இளைஞன்,
தமிழைப் படித்த தவறை உணர்ந்து 10.12.09 அன்று தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சைப் பகுதியில் 10 ஆயிரத்தில் ஒருவர் காலி!

தஞ்சை மாவட்டம் அணைக்கரை அருகி லுள்ள வடபாதி கிராமத்தில், பூமிநாதனைப்
பெற்ற சின்னாச்சியைச் சந்திக்க சென்றோம்.

""என் மூணு பசங்களில் பூமிநாதன் நடு வுலவன். நல்லா படிச்சான். நெறையப்
படிச்சான். வேலை கெடைச்சாத்தான் கல்யாணம் செய்துக்குவேன்னு தேடுனான்
தேடுனான்... அன்னக்கிக் கூட என்னமோ அப்ளிகேஷன் வாங் கோணும் தஞ்சாவூர்
போகணும்னு கேட் டான். நெஜமாவே நீ வேலை தேடுறியா இல்லை இந்த வயசான
காலத்தில தெனக் கூலிக்கு போய் வர்ற எங்க காசை வாங் கிட்டுப் போயி ஊர்
சுத்துறியாடானு திட்டுனேன். திட்டிப்பிட்டு காசைக் குடுத்தேன். இப்படி
வெஷத்தை வாங்கிக் குடிச்சிட்டுச் சாவான்னு நெனைச்சுக் கொடப் பாக்கலியே
சாமீய்!'' தரையில் முட்டிக் கொண்டு கதறினார் அந்தத் தாய்.

தற்கொலை செய்து கொண்ட பூமி நாதனின் நண்பர் புலவர் சந்திரசேகரைச் சந்தித்தோம்.

""போன மாதம் நடந்த ஆசிரியர்கள் நியமனத்தில் 1588 பேர், அதில் தமிழ்
படித்தோர் 210 பேருக்கு நியமனம். அதிலும் பூமிநாதனுக்கு கிடைக்கவில்லை.
இப்ப டி.ஆர்.பி. கால்ஃபர் பண்ணியிருக்காங்களே... அதுக்காக ஒருவாரம் அலையோ
அலைனு அலைஞ்சு அப்ளிகேஷனை வாங்கிப் பார்த்தால்... அதில் தமிழ் ஆசிரியர்
18 பேர்தான். அந்த 18-ல் ஒண்ணுகூட எஸ்.சி.க்கு கிடையாது. எப்படியாவது
டி.ஆர்.பி.யில் பாஸ் பண்ணணும்னு கஷ்டப்பட்டு படிச்சான். கிடைக்காதுனு
தெரிஞ்சதும் நொறுங்கிப் போனான். விஷத்தை வாங்கிக் குடிச்சிட்டு
செத்துட்டான். அவன் செத்துட்டான்... இன்னக்கி ரெண்டாம் நாள்... நாளைக்கு
மறந்து விடுவோம். பூமிநாதன் மாதிரிதான் நாங்களும்... எங்க கதி?''
கண்களில் திரண்ட ஈரத்தைத் துடைத்துக் கொண்டார் புலவர் சந்திரசேகர்.

தமிழ்மொழி செம்மொழி. ஆனாலும் சொந்த நாட்டின் நீதிமன்றத்திலும் பாராளு
மன்றத்திலும் நுழையும் தகுதி தமிழுக்கு கிடை யாது. தமிழ் மக்களுக்கு
வருமானத்தை தரும் தகுதியும் தமிழுக்குத் தரப்படவில்லை. பூமிநாதன் களின்
புதைகுழியில் கூடி நின்று கோஷம் போடலாம் ""தமிழ் வாழ்க!''.

கருத்துகள் இல்லை: