புதன், 30 செப்டம்பர், 2009

பிரபாகரன் இறக்கவில்லை தமிழகத்தில் உள்ள அகதிகள் நம்பிக்கை: அரசுக்கு உளவுத்துறை அறிக்கை

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இன்னும் இறக்கவில்லை, அவர் 8 பேர் பாதுகாப்புடன் பத்திரமாக உள்ளார் என உளவுத்துறையினரிடம் அகதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள முகாம்களில் கியூ பிரிவு போலீசார் மற்றும் மாநில உளவு போலீசார் இலங்கைக்கு செல்ல விரும்பும் அகதிகள் விபரம், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றிய விவரம் உட்பட பல தகவல்கள் குறித்து கருத்து கேட்டுள்ளனர்.

இதற்கு அகதிகள் பதிலளிக்கையில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு தான் உள்ளார். அவர் 8 பேர் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளார். பிரபாகரன் இறந்ததாக இலங்கை அரசு நாடகம் ஆடுவதாகவும், பிரபாகரன் விரைவில் இலங்கையில் தோன்றுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவர்களின் கருத்து அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: