"‘சாதியம் என்பது மனித குலத்திற்கு எதிரானது. அடிப்படை மனித உரிமை மீறலாகும்.’ என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனை நாமும் முழுமையாக வரவேற்கின்றோம்"
இன்றைய காலகட்டத்தில் ‘மதம்’ என்கின்ற சொல் ‘பிரச்சனைக்குரிய விடயங்களைச் சுட்டிக் காட்டுகின்ற’ சொல்லாக அர்த்தம் பெற்று வருகின்றதோ என்கின்ற ஐயமும், அச்சமும் எமக்கு உண்டு. ‘மதம்’ என்பது வேறு, ‘கடவுள் என்பது வேறு!’ ‘மத நம்பிக்கை என்பது வேறு, கடவுள் நம்பிக்கை என்பது வேறு!’ என்பது போலத்தான் இப்போது சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
எதைப் பற்றியும் தர்க்கிக்கலாம், ஆனால் மதம் குறித்தோ, கடவுள் குறித்தோ தர்க்கிக்கக் கூடாது என்கின்ற எழுதப்படாத விதி ஒன்று இருப்பதைப் பற்றி நாம் அறிவோம்.
ஆனால் பௌத்த பேரினவாதம் குறித்து நாம் வன்மையாகக் கண்டித்துக் கட்டுரை எழுதுவதற்குக் கைதட்டல் கிடைப்பது போல், இந்துப் பேரினவாதம் குறித்து எழுதினால் ‘எது கிடைக்குமோ’ என்ற எதிர்பார்ப்பும் எமக்கு உண்டு. சிங்கள-பௌத்த பேரினவாதம் குறித்து கண்டித்துக் குரல் எழுப்புவதற்கு நான் ஒரு ஈழத் தமிழன் என்பது ஒரு தகுதியாக இருக்கின்றது.
அதுபோல், இந்துப் பேரினவாதம் குறித்து எழுதுவதற்கு, பிறக்கும்போது சைவனாகவும,; பின்னர் இந்துவாகவும் மதமாற்றம் செய்து கொண்ட எண்ணற்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் நானும் ஒருவன் என்ற தகுதியே போதும் என்ற தைரியமும் எனக்கு உண்டு.
ஒரு விடயத்தை மிக முக்கியமான விடயத்தை இக்கட்டுரையில் ஆரம்பத்திலேயே வலியுறுத்திச் சொல்லிவிட விரும்புகின்றோம். எவர் மனத்தையும் புண் படுத்தும் நோக்கமோ அல்லது எவரது நம்பிக்கையையும் விமர்சிக்கும் நோக்கமோ எமக்கு கிடையாது. எந்த மதத்தையோ, கடவுளையோ, உயர்த்தவோ, தாழ்த்தவோ நாம் முயலவில்லை. எமது எண்ணமும் அதுவல்ல!
நடந்ததை, நடப்பதை நாம் உங்களுக்குச் சொல்ல வருகின்றோம். அவ்வளவுதான்! அதனை உங்கள் சிந்தனையில் நிறுத்தி இனிமேல் நடக்க வேண்டியது என்ன என்று நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். சிந்தனையில் சீர்திருத்த மாற்றம் வராமல் செயலில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்பதை நாமும் நம்புகின்றோம்.
இன்றைய தினம், குறிப்பாக இந்தியாவில், இந்துக்களின் பேரினவாதத்தை ‘இந்துத்துவம்’ என்று தாழ்த்தப் பட்டவர்கள் சொல்கிறார்கள். ’அப்படியில்லை’ இந்து தர்மத்தின் உயரிய கோட்பாடுகளின் தொகுப்புத்தான் இந்துத்துவம்- என்று இந்துமதத் தீவிர சிந்தனையுள்ளவர்கள் வாதிடுகின்றார்கள். இந்து மதத்திலுள்ள மிகப்பெரிய பிரச்சனையாக இன்று சாதிப் பாகுபாடு இருப்பதைக் காண்கின்றோம். இதற்குக் காரணம், இந்த வருண சாதி வேறுபாடுகளை இந்துமத வேதங்களே அறுதியிட்டுக் கூறுவதாகச் சொல்கின்றார்கள்.
நான்கு வருண உருவாக்கம் குறித்துப் பேசுகின்ற ‘இருக்கு வேதத்தின்’ புருஷ சூக்தத்தில், புருஷன் என்கின்ற உடலை நான்காக வகுத்து நான்கு வருணங்கள் தோற்றுவிக்கப் பட்டதாகக் கதையாடல் அமைக்கப் பட்டுள்ளது. படைப்புக் கடவுள் பிரம்மாவின் வாயிலிருந்து பிராமணனும், நெஞ்சில் இருந்து சத்திரியனும், தொடையிலிருந்து வைசியனும், பாதத்திலிருந்து இவர்கள் மூவருக்கும் சேவை செய்யும் அடிமையாக சூத்திரன் என்பவனும் உருவாக்கப் பட்டார்கள். இந்த சூத்திர சாதியை சேர்ந்தவர்கள்தான் திராவிடர்கள் என்பது பின்னால் விளக்கப் படுகின்றது.
இந்த நான்கு வருணத்தையும் (நான்கு சாதி அமைப்புக்களையும்) தாண்டியவர்கள் மிகக் கேவலமாக சண்டாளர்கள்- தீண்டத் தகாதவர்கள் என அழைக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, ஒதுக்கப்படுகின்றார்கள். இவர்கள் ‘தலித்துக்கள்’ என்று இப்போது குறிக்கப் படுகின்றார்கள். ‘தலித்’ என்ற சொல் எப்படி வந்தது என்பதை முதலில் பார்ப்போம்.
பிரிட்டிஷ் அரசாங்கம் தீண்டத் தகாத சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க நினைத்து, ஒரு அட்டவணையைத் தயாரித்தார்கள். அந்த அட்டவணையில் வந்த சாதியினரை (ளுஉhநனரடநன ஊயளவந) (ஷெடியூல்ட் காஸ்ற்) அட்டவணைச் சாதியினர் என்று அழைத்தார்கள். பின்னர் மராட்டிய இலக்கியத்தில் அட்டவணைச் சாதியினரைக் குறிக்கப் பயன்படுத்திய சொல்லாகிய ‘தலித்’ என்ற வார்த்தை உபயோகிக்கப் பட்டது. ‘தலித்’ என்பது ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, உழைக்கும் சாதிமக்களைக் குறிக்கின்ற மகாராஷ்டிர சொல் வழக்கிலிருந்து உருவாகியது.
மேற்கூறிய நான்கு வருணங்களிலிருந்தும் ஒதுக்கப்பட்ட தலித்துக்கள் ‘புருஷன்’ என்கின்ற உடலுக்கே அப்பாற் பட்டவர்களாகத் தள்ளி வைக்கப்பட்டனர். நடைமுறையில் ஊருக்கு வெளியே இவர்களுக்காகச் சேரிகள் உருவாக்கப் பட்டன. இவர்களைத் தொட்டாலும், பார்த்தாலும் தீட்டுக் கற்பிக்கப் பட்டது. மலம் அகற்றுதல், சவம் காவுதல், பறையடித்தல் முதலான தொழில்கள் இவர்களுக்கென ஒதுக்கப்பட்டன.
கடும் உடலுழைப்பு இவர்களுக்கென்றானது. இவர்களின் கடும் உழைப்பிற்கு ஈடாக உயிர் வாழ்வதற்கு தேவையான மிகவும் குறைந்தபட்ச ஊதியமே இவர்களுக்கு மானியமாக வழங்கப்பட்டது. திருவிழா முதலிய சடங்குகளிலும் இவர்கள் மிகவும் கீழ் நிலையில் வைக்கப்பட்டு, கடும் உடல் உழைப்பைச் செய்யும் பணிகள்; அங்கும் இவர்களுக்கு கொடுக்கப் பட்டன. மேலாடை அணியக் கூடாது. குடிசைகளுக்கு ஓடு வேயக் கூடாது. செருப்பு அணியக் கூடாது. சைக்கிளில் செல்லக் கூடாது பொதுச்சாலைகள், பொதுச் சுடுகாடுகள், பொது இடங்கள் போன்றவற்றை இந்த மக்கள் பயன்படுத்தக் கூடாது’ என்ற விதிகள் பிறப்பிக்கப் பட்டன.
பிறவி அடிப்படையில் தொழில் என்பது எல்லாச் சமூகங்களிலும் ஏதோ ஒரு வகையில் நடைமுறையில் இருந்ததுதான்! என்றாலும் தொழிலைப் பிறவி அடிப்படையில் ஒதுக்கி அதற்கு சடங்கு ஆசார அடிப்படையில் நியாயம் வழங்குகின்ற கோட்பாட்டை உருவாக்கி திருமண உறவுகளையும் சாதிக்குள்ளேயே முடக்கி அது மட்டுமல்லாமல் இவற்றை எந்த வகையிலும் மீறக்கூடாத விதமாக வழிகளையும் தடை செய்தது - எமது சமூகம் தான்! இதனை நியாயப்படுத்தும் வகையில் முற்பிறவியில் செய்த பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப இப்பிறவியில் சாதியும் வாழ்நிலையும் நிர்ணயிக்கப் படுகின்றன’ என்கின்ற கர்மவினைக் கோட்பாடும் இங்கு உருவாக்கப் பட்டது.
தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்த மட்டில், சங்க காலத்தின்போது இப்போதுள்ளது போல இறுக்கமான சாதிப் பிரிவினைகளும், தீண்டாமையும் நிலவ வில்லையென்றாலும், சங்ககாலத்திலேயே ஒரு சாரார் ‘இழிசனர்’ என்று ஒதுக்கப்பட்டதற்கும், அவர்களது பேச்சுவழமையை ‘இழிசனர் மொழி’ என்றும், தமிழ் இலக்கியத்திற்கு ஒவ்வாதது என்றும் தள்ளி வைக்கப்பட்டதற்கும் தக்க சான்றுகள் உண்டு. தமிழ் மொழி தரப்படுத்தப்பட்ட காலத்தில், செந்தமிழ், கொடுந்தமிழ் என்று பிரிக்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களின் தமிழ் கொடுந்தமிழாக ஒதுக்கப்பட்டது.
கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சமூகத்திலும் வருண சாதிக் கோட்பாடுகளும், தீண்டாமையும் வேர் கொள்ள ஆரம்பித்தன. கிறிஸ்துவுக்கு பின் ஆறாம், ஏழாம் நூற்றாண்டில் இத்தீண்டாமை இறுக்கமாக மேற்கொள்ளப்பட்டதற்குச் சான்றுகள் பல உண்டு. நந்தனார் கதையோடு, திருநாவுக்கரசரின் பதிகங்களையும் சான்றுகளாகக் காட்டலாம். என்றாலும் தமிழ்ச் சமூகத்தில் பிற இந்திய சமூகங்களைப் போல சத்திரிய வர்ணம் கிடையாது. சூத்திர வர்ணங்களில் ஒருவரான வேளாளர் இங்கே பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையிலான ஆதிக்க சக்திகளாக விளங்கினர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நிலவுடைமை ஆதிக்கம் இவ்விரு சாதியினிடமே குவிந்திருந்தன என்று (டீரசவழn ளுவநin) பேர்ட்டன் ஸ்டெய்ன் போன்ற நவீன வரலாற்று ஆசிரியர்கள் நிறுவுகின்றார்கள்.
இலங்கையைப் பொறுத்தவரையில், தமிழரிடையே பார்ப்பனிய மேலாதிக்கம் இல்லாதிருந்த போதும் மேல் சாதியினரிடம் பார்ப்பனிய கொள்கைகள் ஊறிப்போய் ஆதிக்கம் செலுத்தின என்பதே உண்மையாகும்.
பிரபல சிந்தனையாளரான பேராசிரியர் காஞ்சா அய்லய்யா தனது ஆய்வு நூலில் கீழ் கண்டவாறு குறிப்பிடுகின்றார். இவர் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர் இராமன்-இராவணன் போர் குறித்து அவர் குறிப்பிடுகின்றார். அது சைவத் தமிழனுக்கும், ஆரிய இந்துவுக்கும் நடந்த போரைக் காட்டுகின்றது. அவரது கூற்றின்;படி:
“ஆரிய இந்துத்துவ வர்ணாசிரம கோட்பாட்டின்படி வடஇந்தியாவில் எல்லாப் பிரிவினரும் நம்பிக்கையிழந்த நிலையில் அடிமைகள் ஆக்கப் பட்டார்கள். பார்ப்பனர்கள், திராவிடர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த தென்னிந்தியாவிலும், அதற்கு அப்பாலும் தங்களுடைய ஆதிக்கத்தைப் பரப்ப நினைத்தார்கள். தாடகை, சம்புகன், வாலி, இராவணன் ஆகியோர் தலித் பகுஜன்களின் தலைவர்களாக இருந்து வந்தார்கள்.
இப்போது சில பார்ப்பனர்கள் இராவணனும் ஒரு பார்ப்பனனே என்று சொல்ல முயல்கிறாhர்கள். இது முட்டாள்த் தனமானது. இராவணன் ஒரு பேராற்றல் மிக்க தலித் அரசன். அவன் ஒரு தீவிர சைவன்.
தீவிர சைவப் பற்றாளன். பார்ப்பனியத்திலிருந்து சைவத்தைப் பிரிக்கவும், தனித்துவமான தலித் சைவத்தை உருவாக்கவும், இராவணன் முயற்சித்தான். இலங்கையில் இராவணனின் ஆற்றல் மிக்க ஆட்சியைத் தோற்கடித்துப் பார்ப்பன ஆட்சியை உருவாக்க ஆரியர்கள் திட்டமிட்டார்கள். எனவே தென்னிந்தியாமீது படையெடுத்து தாக்குதல் நடத்த முனைந்தார்கள் இராமனுக்கு அந்த பொறுப்புக் கொடுக்கப் பட்டது.
தென்னிந்தியாவில் பார்ப்பனியத்தைப் பரப்புவதோடு பெண்களை அடிமையாக்குவதற்கும் இராமாயணக் கதை அடிப்படையாக உள்ளது. மேலும் தென்னிந்தியாவில் வாழ்ந்த தலித் சமூகத்தை பார்ப்பன ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் தொகுப்பே இராமாயணமாகும்.
இராவணன் வீழ்ச்சியுற்றதோடு தெற்குப் பகுதிகள் முழுமையான பார்ப்பன ஆரியர்களால் வெற்றி கொள்ளப்பட்டன. இராவணன் இறந்தபிறகு பல பார்ப்பன ரிஷிகள் வடஇந்தியாவிலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தார்கள். சாதியற்ற சமூகமாக இருந்த தென்னிந்தியாவில் பார்ப்பனர்கள் நுழைந்து அதைச் சாதி அடிப்படையிலான சமூகமாக மாற்றி பார்ப்பனிய ஆணாதிக்கக் கருத்தியலை புகுத்தி, தங்களுடைய அதிகாரத்தை நிலைநிறுத்தினார்கள். திராவிடப் பகுதியில் தாய்வழிச் சமூகம் நிலை பெற்றிருந்ததை மாற்றி ஆணாதிக்க தந்தைவழிச் சமூகமாக அதனை ஆரியர்கள் மாற்றினார்கள்.
சைவசமயத் தேவாரப் பதிகங்கள் இராவணனை உயர்த்திப் பாடுவதை நாமும் அறிவோம். ‘இராவணன் மேலது நீறு’ என்று தொடங்கி எத்தனையோ தேவாரங்கள் இராவணன் குறித்தும், இலங்கை அரசு குறித்தும் பாடப்பட்டுள்ளன. திருமுறைகளில் காணப்படும் சில வசனங்களை நேயர்களுக்கு இங்கு தருகின்றோம்.
‘வியரிலல்கு வரையுந்திய தோள்களை வீரம் விளைவித்த உயரிலங்கை அரையன்’
‘வானினொடு நீரும் இயங்குவோர்க்கு இறைவனான இராவணன்’
‘கடற்படையுடைய அக்கடலிலங்கை மன்னன்’
‘இருசுடர் மீதோடா இலங்கையர் கோன்’
‘எண்ணின்றி முக்கோடி வாழ்நாளதுடையான்’
‘பகலவன் மீதியங்காமைக் காத்த பதியோன்’
‘சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும்
முனிவனாய் முடி பத்துடையான்’
இப்படியெல்லாம் பாடிப் புகழ்ந்தவர்கள் மேலும் சில விடயங்களை வலியுறுத்துகின்றார்கள். தமிழின் அவசியம் குறித்தும் தமிழின் மேன்மை குறித்தும் நாயன்மார்கள் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
‘தமிழோடிசை பாடல் மறந்தறியேன்’
(ஆனால் இன்றோ இசைப்பாடல் என்றால் தெலுங்கில் இருப்பதே மரியாதை!)
‘திருநெறிய தமிழ்’ என்றும், ‘ஞானத்தமிழ்’ என்றும் ‘பேசும் தமிழ்’ என்றும், ‘உன்னைத் தமிழில் பாடுவதற்கென்றே என்னை நலம் செய்தாய்’
என்றும் பாடிவிட்டுப் போனார்கள்.
(ஆனால் இன்று கோவில்களில் தமிழ் எங்கே?)
இன்றைய தினம் இந்தியாவைப் பொறுத்த வரையில் தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் படுகின்ற இன்னல்கள் வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவிற்கு கொடூரமாக உள்ளன. அதைவிடக் கொடூரம் என்னவென்றால் இவர்களது துன்பங்களும், துயரங்களும் வெளிஉலகிற்கு தெரியாதவாறு மறைக்கப்பட்டு வருவதுதான்.
இந்தியாவில் ‘கட்டாய மத மாற்றத் தடைச்சட்டம்’ ஒரிஸா மாநிலம் உட்பட இரண்டு மாநிலங்களில் சட்டரீதியாக அமுலாக்கப் பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டிலும், கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் கொண்டு வந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் அவரது கட்சி தோல்வியடைந்த பின்னர் இக்கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை செல்வி ஜெயலலிதா இரத்து செய்தார்.
தேர்தல் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக இந்தக் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தை அவர் கருதியதனால்தான் மிகுந்த மனவருத்தத்துடன் இந்த சட்டத்தை செல்வி ஜெயலலிதா இரத்து செய்தார். பார்ப்பனியப் பெண்மணியும் இந்துத்துவ ஆதரவாளருமான செல்வி ஜெயலலிதா கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை அமுலாக்க விரும்பியதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆயினும் இதற்குரிய அடிப்படைக் காரணங்களைச் சற்று தர்க்கிக்க விழைகின்றோம்.
இந்துத்துவ தீவிரவாதம் காரணமாக, அன்று அயோத்தியில் பாபர் மசூதி உடைக்கப்பட்டுப் பின்னர் அங்கே இராமர் கோவில் ஒன்று கட்டப்பட வேண்டும் என்பதற்காக வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. தொடர்ந்தும் இது ஒரு பாரிய பிரச்சனையாகவே இருந்து வருகின்றது. இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை நாம் எமது நேயர்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். நீண்ட நெடுங்காலத்திற்கு பின்னர் மீண்டும் ஒருமுறை இராமன் ஒரு போர்த் தலைவனாகச் சித்தரிக்கப் படுகின்றான்.
அழிக்கும் கடவுளான சிவனை இந்த இந்துத்துவ வாதிகள் முன்னிறுத்த வில்லை. மாறாக முன்னர் திராவிடர்களையும், சைவ மக்களையும் அழித்த இராமன் இப்போது முன்னிறுத்தப் படுகின்றான். மிக மோசமான மதவாதக் கோஷங்களும், வன்முறைகளும் முன் வைக்கப்பட்டன. இந்து-முஸ்லிம் ஒற்றுமை தொடர்ந்தும் சீர்குலைக்கப்பட்டு வருகின்றது. அத்தோடு கிறிஸ்துவ மதம் மீதும் கடுமையான எதிர்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த மூன்று மதங்களையும் சார்ந்தவர்களிடையே உள்ள முறுகல் நிலை அதிகரித்து வருகின்றது. இதைவிட இன்னுமொரு விடயமும் பூதாகரமாக உருவெடுத்து வருகின்றது.
அதுதான் தலித் மக்களின் மதமாற்றம்!
இந்துத்துவத்தின் கொடுமையால் மிகக் கொடூரமான அடக்குமுறையைத் தொடர்ந்தும், அனுபவித்து வருகின்ற கோடிக்கணக்கான தலித் மக்களில் கணிசமானோர் மதம் மாறத் தொடங்கியிருப்பதனை நாம் காணக் கூடியதாக உள்ளது. இவர்கள் இப்படி மதம் மாறுவதற்குரிய காரணம் என்ன? மற்ற மதங்களில், அதன் கோட்பாடுகளில், வழிகாட்டுதலில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையா? அல்லது தாம் இறந்த பின்னர் சொர்க்கத்தை அடைவதற்கு இஸ்லாமோ அல்லது கிறிஸ்தவமோ துணை செய்யும் என்பதா?
இல்லை! இல்லவே இல்லை!!
தாங்கள் வாழ்ந்து வருகின்ற இந்த தற்போதைய நரக வாழ்க்கையிலிருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய வேட்கை! செத்த பின்பு சொர்க்கத்திற்கு போவது அல்ல! அவர்களால் சாதி மாற முடியவில்லை. அதனால் சமயம் மாறுகிறார்கள்.!!
இந்த மதமாற்றத்தைத் தடுக்கா விட்டால் இந்துத்துவம் ஆட்டம் காணத் தொடங்கி விடும். இதன் காரணமாகத்தான் இந்தக் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டமும் இந்துத்துவ பேரினவாதக் கோஷங்களும்!
இந்தியாவில் வாழுகின்ற கோடிக்கணக்கான மக்களை வர்ணாசிரமத்தின் - சாதியின்- அடிப்படையின் கீழ் வைத்து ஒடுக்குகின்ற நிலைமை மாற வேண்டும். அதற்கு பிரிந்து கிடக்கின்ற சகல தலித் பிரிவுகளும், தாழ்த்தப்பட்ட சாதி அமைப்புக்களும் ஒரு கொள்கையின் கீழ் ஒன்று சேரவேண்டும் என்பதே எமது அவா! சாதி என்பது பார்;ப்பனியம் கொண்டு வந்த ஒரு சதியாகும். சாதிப் பிரிவுக்கும், சாதி அடக்கு முறைக்கும் எதிராக மக்கள் சக்தி ஒன்றிணைய வேண்டும். இனவாதத்திற்கு எதிராக நடைபெற்ற உலக மகாநாடு ஒன்றில் பல தீர்மானங்கள் எடுக்கப் பட்டன. அவற்றுள் ஒன்று இந்தச் சாதி பாகுபாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சொல்வது என்பதாகும்!
‘சாதியம் என்பது மனித குலத்திற்கு எதிரானது. அடிப்படை மனித உரிமை மீறலாகும்.’ என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனை நாமும் முழுமையாக வரவேற்கின்றோம்.
அன்புக்குரிய நேயர்களே!
இந்தியாவின் இந்துத்துவ வாதம் குறித்தும், சாதிவெறி குறித்தும் தர்க்கித்த நாம், தமிழீழம் கண்ட சாதிக் கொடுமைகளை ஈழத் தமிழர்கள், ஈழத் தமிழர்களுக்கே இழைத்த அநாகரிகத் தீமைகளையும் மறந்து விடவில்லை! இன்னொரு இனத்தின் அடக்கு முறைக்குப் போராடுகின்ற மக்கள் தமது முன்னோர்கள், தம்மின மக்களுக்கே செய்திட்ட வரலாற்றுக் கொடுமைகளை மறக்கக் கூடாது!
இவை குறித்த விரிவான ஆய்வினை எதிர்வரும் காலத்தில் வழங்குவதற்கு விரும்புகின்றோம்.! இவை குறித்து இன்னும் ஆழமாக பரவலாக ஆய்வினைச் செய்வதே எமது எண்ணமுமாகும். இன்றைய தினம் நாம் கூறியவற்றை கருத்துக்கள் என்று சொல்வதைவிட நடந்த, நடக்கின்ற சம்பவங்கள் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். வழமைபோல் சீர் தூக்கி பார்க்கின்ற பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகின்றோம்.!!
இன்றைய இந்தக்கட்டுரையை எழுதப் பல ஆய்வு நூல்கள் உதவின. முக்கியமாக ‘ஆட்சியல் இந்துத்துவம்’இ ‘இந்துத்துவம்-ஒரு பன்முக ஆய்வு’இ ‘நான் ஏன் இந்து அல்ல’இ ‘உலகமயம் எதிர்ப்பு-அரசியல் தலித்துக்கள்’, ‘Making India Hindu’, ‘Indian Middle Class’ ‘Why go for conversion’ போன்ற நூல்களுடன் சில விவரண ஒளிநாடாக்களும் உதவியுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.
நன்றி :- சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா,www.tamilnation.org
வெள்ளி, 18 மே, 2007
தமிழர்களின் முன்னேற்றத்திற்கு இந்து கோயில்களைத் தரைமட்டமாக்குக!
நம் திராவிட மக்கள் புத்தி இல்லாதவர்களாக, மடையர்களாக, காட்டுமிராண்டிகளாகவே இருக்கின்றனர். இன்னும் நாம், மதத்தின் பேரால், கடவுளின் பேரால் மட்ட சாதி ஆக்கப்பட்டு இழிநிலையில் இருப்பது பற்றிக் கவலைப்படுவதே இல்லை. இப்படி எதனால் காட்டுமிராண்டியோ, இழிமக்களோ ஆனோமோ அந்த மதத்தையும், கடவுளையும் பற்றிச் சிந்திப்பதே இல்லை. என்ன காரணம்? நம் மக்களுக்குப் புத்தியும் இல்லை மானம் இல்லை. இதன் காரணமாகவே ஏமாறுகின்றோம். பரம்பரை பரம்பரையாக நாம் ஏன் கீழ்ச்சாதி? பரம்பரை பரம்பரையாக அவன் ஏன் மேல்சாதி? என்று இந்த அதிசய அற்புதக் காலத்திலும் எவன் சிந்திக்கின்றான்? இந்த நிலைமைகளை மாற்ற வேண்டும் என்று எங்களைத் தவிர எந்தப் பொதுத் தொண்டுக்காரன் பாடுபட்டான்? எவன் சிந்தித்தான்?
பொதுத் தொண்டன் பொதுத்தொண்டு செய்கின்றேன் என்று கூறுகின்றானே, அவனும் சட்டப்படி சாத்திரப்படி இழிமகன்தானே! அவனும் பார்ப்பானுக்கு சூத்திரன் என்கிற வைப்பாட்டி மகன்தானே என்று நினைத்து, எவன் பொதுத்தொண்டு செய்கின்றான்? மக்களிடம் சென்று “நீங்கள் பக்திமான், மேலானவர், தர்ம புருஷன்'' என்று கூறினால் காசு கொடுப்பான். அதை விட்டுவிட்டு, “நீங்கள் மடையர்கள், கல்லைக் கும்பிடுகின்றீர்கள், சாணியைப் பிள்ளையார் என்கிறீர்கள்'' என்று கூறிக் கொண்டு “பசிக்குது கொஞ்சம் சோறு கொடுங்கள்'' என்றால் என்ன கூறுவான்? “உன்னுடைய லட்சணத்துக்குச் சோறு வேறா? போடா போடா'' என்றுதானே கூறுவான்?
இதுவரையில் இந்த நாட்டில் எவரும் செய்யாத தொண்டை நாங்கள்தான் செய்கின்றோம். இந்த நாட்டுக்குச் செய்ய வேண்டிய தொண்டு ஒன்று இருந்தால், இதுதான் என்று நினைத்தபோது வருகின்றோம். இந்த நாட்டு மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல, மடமையைத் திருத்த எந்தப் படித்தவன், புலவன் முன் வருகின்றான்? அவனவன் வயிற்றுப் பிழைப்புக்கே தாம் படித்ததைப் பயன்படுத்துகின்றான். மற்றபடி பணக்கார லட்சாதிபதிகள் இருக்கின்றார்கள். இவர்கள் எல்லாரும் இதுபற்றிப் பாடுபடுகின்றனரா? இப்படி மக்கள் மூடர்களாய் இருந்தால்தான் நாம் கொள்ளை அடிக்க வசதியாக இருக்கும் என்று கருதிக் கொண்டு இருக்கிறார்கள்.
இவற்றை எல்லாம் தட்டிப் பேச இங்கு ஆளே கிடையாது. மேல் நாட்டுக்காரன் அவற்றை எல்லாம் விரட்டி விட்டு அறிவுக்குப் பொருத்தமான முறையில் கடவுளையும் மதத்தையும் அமைத்துக் கொண்டான். அதன் காரணமாக, அறிவியலில் அதிசய அற்புதங்களை நாளுக்கு நாள் உண்டாக்கிய வண்ணம் இருக்கின்றான். அந்த நாட்டில் இப்படி எல்லாம் ஆக அங்குக் கடவுள் துறையில் மதத் துறையில் அறிவுத் துறையில், மாறுதல் உண்டாக்க அறிஞர்கள் கிளம்பிச் சீர்திருத்தினார்கள். நாம் இத்தனைக் கோயில் குட்டிச் சுவரினை வைத்துக் கொண்டு சாதித்தது என்ன? நம்மை சைனாக்காரனும் பாகிஸ்தானும் விரட்டுகின்றான். ஆண்டுக்கு 250 கோடி செலவில் பட்டாளத்தை வைத்துக்கொண்டு இருந்தாலும், நேரு (இந்தியாவின் தலைமை அமைச்சர்) நடுங்கிக் கொண்டு இருக்கின்றாரே?
தோழர்களே! ரயில் வந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. பஸ் வந்து 50 வருஷம் ஆகின்றன. இன்னும் தந்தி, ரேடியோ போன்ற வசதிகள் எல்லாம் ஏற்பட்டு இருக்கின்றன. இன்னும் இதைவிட அறிவியல் அதிசயம் நம் நாட்டிற்கும் வரப்போகின்றது. லண்டனில் நடக்கும் டான்சையோ சினிமாவையோ இங்கு இருந்து கொண்டே பார்த்துக் களிக்கும்படி "டெலிவிஷன்' வெகு சல்லிசாக வரப்போகின்றது. இந்த டெலிவிஷனால் லண்டனில் சினிமா, நாடகக்காரர்களுக்குப் பிழைப்புக் குறைந்து கொண்டே வருகின்றதாம். காரணம், பலர் டெலிவிஷன் வாங்கி வைத்துக்கொண்டு வீட்டில் இருந்தே பார்த்துக் கொள்கின்றனர்.
ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் போட்டிப் போட்டுக் கொண்டு, சந்திர மண்டலத்திலும் குடியேற முயற்சி செய்கின்றான். நமக்கு மட்டும் அப்படிப்பட்ட அறிவு இல்லை என்றால், நாம்தான் கல்லைக் கடவுளாகக் கும்பிடுகின்றோமே! மாட்டுச் சாணியையும் மூத்திரத்தையும் பஞ்சகவ்வியம் என்று கலக்கிக் குடிக்கின்றோமே! சாம்பலும் சுண்ணாம்புப் பட்டையும், செம்மண் பட்டையும் அடித்துக் கொள்ளுகின்றோமே! நாம் என்றைக்கு ஈடேறுவது?
முன்னோர்கள் சொன்னார்கள் மதம் சொல்லுகிறது ரிஷிகள், மகான்கள் சொல்லுகின்றனர் என்ற கருதாமல், தாராளமாக அறிவுக்கு ஆராய்ச்சிக்கு வேலை கொடுத்து உன் புத்தி சொல்லுகின்றபடி நட என்றுதான் கூறுகின்றோம். ஆனால், புத்தர் ஒருவர்தான் “உன் புத்திக்கு ஏற்றபடி, அது சொல்லுகின்றபடி நட. முன்னோர்கள் பெரியவர்கள் சாஸ்திரம் சொல்லுகிறது என்று கேட்காதே! உன் புத்தி சொல்லுகின்றபடி நட'' என்றார். அதன் காரணமாகவே பார்ப்பனர்கள் புத்த நெறியினை ஒழித்துவிட்டார்கள். அந்தக் கொள்கை இன்று சீனா, ஜப்பான், சிலோன், திபெத் ஆகிய நாடுகளில் இருக்கின்றது. இன்று புத்தன் யார் என்று இங்கு பல பேர்களுக்குத் தெரியாது. இப்படிப் புத்தனுக்குப் பிறகு எவனுமே தோன்றவே இல்லையே! இந்த 2500 ஆண்டில் நாங்கள்தான் தோன்றி பாடுபட்டு வருகின்றோம்.
(10.10.1960 அன்று, தூத்துக்குடியில் ஆற்றிய சொற்பொழிவு)
நன்றி :-விடாதுகருப்பு
பொதுத் தொண்டன் பொதுத்தொண்டு செய்கின்றேன் என்று கூறுகின்றானே, அவனும் சட்டப்படி சாத்திரப்படி இழிமகன்தானே! அவனும் பார்ப்பானுக்கு சூத்திரன் என்கிற வைப்பாட்டி மகன்தானே என்று நினைத்து, எவன் பொதுத்தொண்டு செய்கின்றான்? மக்களிடம் சென்று “நீங்கள் பக்திமான், மேலானவர், தர்ம புருஷன்'' என்று கூறினால் காசு கொடுப்பான். அதை விட்டுவிட்டு, “நீங்கள் மடையர்கள், கல்லைக் கும்பிடுகின்றீர்கள், சாணியைப் பிள்ளையார் என்கிறீர்கள்'' என்று கூறிக் கொண்டு “பசிக்குது கொஞ்சம் சோறு கொடுங்கள்'' என்றால் என்ன கூறுவான்? “உன்னுடைய லட்சணத்துக்குச் சோறு வேறா? போடா போடா'' என்றுதானே கூறுவான்?
இதுவரையில் இந்த நாட்டில் எவரும் செய்யாத தொண்டை நாங்கள்தான் செய்கின்றோம். இந்த நாட்டுக்குச் செய்ய வேண்டிய தொண்டு ஒன்று இருந்தால், இதுதான் என்று நினைத்தபோது வருகின்றோம். இந்த நாட்டு மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல, மடமையைத் திருத்த எந்தப் படித்தவன், புலவன் முன் வருகின்றான்? அவனவன் வயிற்றுப் பிழைப்புக்கே தாம் படித்ததைப் பயன்படுத்துகின்றான். மற்றபடி பணக்கார லட்சாதிபதிகள் இருக்கின்றார்கள். இவர்கள் எல்லாரும் இதுபற்றிப் பாடுபடுகின்றனரா? இப்படி மக்கள் மூடர்களாய் இருந்தால்தான் நாம் கொள்ளை அடிக்க வசதியாக இருக்கும் என்று கருதிக் கொண்டு இருக்கிறார்கள்.
இவற்றை எல்லாம் தட்டிப் பேச இங்கு ஆளே கிடையாது. மேல் நாட்டுக்காரன் அவற்றை எல்லாம் விரட்டி விட்டு அறிவுக்குப் பொருத்தமான முறையில் கடவுளையும் மதத்தையும் அமைத்துக் கொண்டான். அதன் காரணமாக, அறிவியலில் அதிசய அற்புதங்களை நாளுக்கு நாள் உண்டாக்கிய வண்ணம் இருக்கின்றான். அந்த நாட்டில் இப்படி எல்லாம் ஆக அங்குக் கடவுள் துறையில் மதத் துறையில் அறிவுத் துறையில், மாறுதல் உண்டாக்க அறிஞர்கள் கிளம்பிச் சீர்திருத்தினார்கள். நாம் இத்தனைக் கோயில் குட்டிச் சுவரினை வைத்துக் கொண்டு சாதித்தது என்ன? நம்மை சைனாக்காரனும் பாகிஸ்தானும் விரட்டுகின்றான். ஆண்டுக்கு 250 கோடி செலவில் பட்டாளத்தை வைத்துக்கொண்டு இருந்தாலும், நேரு (இந்தியாவின் தலைமை அமைச்சர்) நடுங்கிக் கொண்டு இருக்கின்றாரே?
தோழர்களே! ரயில் வந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. பஸ் வந்து 50 வருஷம் ஆகின்றன. இன்னும் தந்தி, ரேடியோ போன்ற வசதிகள் எல்லாம் ஏற்பட்டு இருக்கின்றன. இன்னும் இதைவிட அறிவியல் அதிசயம் நம் நாட்டிற்கும் வரப்போகின்றது. லண்டனில் நடக்கும் டான்சையோ சினிமாவையோ இங்கு இருந்து கொண்டே பார்த்துக் களிக்கும்படி "டெலிவிஷன்' வெகு சல்லிசாக வரப்போகின்றது. இந்த டெலிவிஷனால் லண்டனில் சினிமா, நாடகக்காரர்களுக்குப் பிழைப்புக் குறைந்து கொண்டே வருகின்றதாம். காரணம், பலர் டெலிவிஷன் வாங்கி வைத்துக்கொண்டு வீட்டில் இருந்தே பார்த்துக் கொள்கின்றனர்.
ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் போட்டிப் போட்டுக் கொண்டு, சந்திர மண்டலத்திலும் குடியேற முயற்சி செய்கின்றான். நமக்கு மட்டும் அப்படிப்பட்ட அறிவு இல்லை என்றால், நாம்தான் கல்லைக் கடவுளாகக் கும்பிடுகின்றோமே! மாட்டுச் சாணியையும் மூத்திரத்தையும் பஞ்சகவ்வியம் என்று கலக்கிக் குடிக்கின்றோமே! சாம்பலும் சுண்ணாம்புப் பட்டையும், செம்மண் பட்டையும் அடித்துக் கொள்ளுகின்றோமே! நாம் என்றைக்கு ஈடேறுவது?
முன்னோர்கள் சொன்னார்கள் மதம் சொல்லுகிறது ரிஷிகள், மகான்கள் சொல்லுகின்றனர் என்ற கருதாமல், தாராளமாக அறிவுக்கு ஆராய்ச்சிக்கு வேலை கொடுத்து உன் புத்தி சொல்லுகின்றபடி நட என்றுதான் கூறுகின்றோம். ஆனால், புத்தர் ஒருவர்தான் “உன் புத்திக்கு ஏற்றபடி, அது சொல்லுகின்றபடி நட. முன்னோர்கள் பெரியவர்கள் சாஸ்திரம் சொல்லுகிறது என்று கேட்காதே! உன் புத்தி சொல்லுகின்றபடி நட'' என்றார். அதன் காரணமாகவே பார்ப்பனர்கள் புத்த நெறியினை ஒழித்துவிட்டார்கள். அந்தக் கொள்கை இன்று சீனா, ஜப்பான், சிலோன், திபெத் ஆகிய நாடுகளில் இருக்கின்றது. இன்று புத்தன் யார் என்று இங்கு பல பேர்களுக்குத் தெரியாது. இப்படிப் புத்தனுக்குப் பிறகு எவனுமே தோன்றவே இல்லையே! இந்த 2500 ஆண்டில் நாங்கள்தான் தோன்றி பாடுபட்டு வருகின்றோம்.
(10.10.1960 அன்று, தூத்துக்குடியில் ஆற்றிய சொற்பொழிவு)
நன்றி :-விடாதுகருப்பு
திங்கள், 14 மே, 2007
உலகத் தமிழர் கற்க வேண்டிய பாடங்கள்
"அரசியல் அடிமைத்தனங்களிலிருந்தும், அதிகார அடிமைத்தனங்களிலிருந்தும் தமிழர்கள் இன்னும் முழு விடுதலை பெறவில்லை. குடிபெயர்ந்த நாடுகளில், `கூலி' என்ற பெயர் மாறி, குடிமக்கள் என்ற நிலையைத் தமிழர் அடைந்துவிட்ட போதிலும், அந்தந்த நாடுகளில் தமிழர் இரண்டாம் தரக் குடிமக்களாகவே இருந்து வருகின்றனர். தமிழருடைய இந்நிலைக்குக் காரணம், அயலார் என்று கருதுவதும், பழிப்பதும் தவறு. தமிழருடைய அன்றைய வீழ்ச்சிக்கும், இன்றைய வீழ்ச்சிக்கும் காரணர் தமிழரே."
க.ப.அறவாணன்கன் தமிழர் தொல்பழம் பெருமைகள் பலவற்றைப் பெற்றவர். ஆனால் ஓர் இனத்தை, அந்த இனத்தின் பழம்பெருமை மட்டுமே எடுத்து நிறுத்திவிட முடியாது. 'தம் பழம்பெருமையை இழந்துவிடக் கூடாது. தம் குடிப்பெருமையை நாம் மேலெடுத்துச் செல்ல வேண்டும்' என்ற அளவில் மட்டுமே பழைய பெருமைகள் பயன்படும்; பயன்படுதல் வேண்டும்.
காகேசிய இனத்தைச் சேர்ந்த ஐரோப்பியர்க்கு இத்தகு வஞ்சினம் உண்டு.ஓர் நிகழ்வு : நிக்காலோ மானுச்சி (கி.பி. 1653 - 1708) என்பவர் ஓர் இத்தாலியர். ஔரங்கசீப் ஆண்ட காலத்தில் இந்தியாவிற்குத் தன் நண்பருடன் வந்தார். வழியிலேயே நண்பர் இறந்து போனார். ஒரு வழியாக அவரை அடக்கம் செய்த நிலையில், அரச தூதர் அங்கு வந்து சேர்ந்தார்.
அக்கால நடைமுறைப்படி அயல்நாட்டு வெள்ளைக்காரர் இறந்துவிட்டதால், இறந்தவருடைய உடைமைகளை எல்லாம் அரச தூதரும், அவருடன் வந்த காவலர்களும் முத்திரை இட்டு கைப்பற்றிக் கொண்டனர்.
அதனுடன் மானுச்சியின் உடைகளும், உடைமைகளும் கைப்பற்றப்பட்டன. இதனால் மானுச்சி மிகவும் பாதிக்கப்பட்டார்.
முடிவில், தம் பொருட்களைத் திருப்பித் தருமாறு விண்ணப்பித்தார். செயலாளரிடம் பெற்றுக் கொள்ளுமாறு மேலிடத்திலிருந்து மடல் வந்தது. ஆனால், அவற்றைச் செயலாளர் திருப்பித் தரவில்லை.
அவருடன் ஒத்துப்போக முடியாத நிலையில் மானுச்சி எழுதிய குறிப்பு வருமாறு; செயலாளர் என் பேச்சை நிறுத்தும்படி கத்தினார். "நீ அரசருடைய அடிமை என்பதை இன்னும் உணரவில்லை" என்று சீறினார்.
இந்தச் சொற்களைக் கேட்டதும் நான் எழுந்து நின்று கொண்டேன். "ஐரோப்பியர்கள் என்றும், எப்போதும், எவருக்கும் அடிமைகளாக இருந்ததில்லை, இருக்கவும் மாட்டார்கள்" என்று விடையளித்தேன்.
இத்தாலிய மானுச்சி தன் குறிப்பில் எழுதியதுபோல ஓர் அறைகூவலைத் தமிழராகிய நாம் சொல்ல முடியுமா? தமிழர், பிற இன மக்களிடம் அடிமைப்பட்டுத் தாழ்ந்து கிடந்ததை 1948 க்கு முற்பட்ட இந்திய, இலங்கை ஆகிய தாய் பூமிகளும், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ் முதலான குடியேற்ற நாடுகளும் மெய்ப்பிக்கின்றன.
உலக வரலாற்றில் அன்றுதொட்டு இன்றுவரை, தம் பழம்பெருமையை இழக்காமல் என்றும் வைத்திருக்கும் இனமாக கிரேக்க, உரோமானிய இனத்தையும், அந்த இனத்தின் வழி வந்த ஐரோப்பிய இனத்தையும், இடையீடுபட்டாலும், தன் தலைமை அடையாளத்தை இழக்காத சீன இனத்தையும் இடையூறுகள் இருந்தாலும், ஃபீனிக்ஸ் பறவைபோல எரிதழலில் எரிக்கப்பட்டும் எரிந்து போகாமல் நிமிர்ந்து நிற்கும் யூத இனத்தையும், நாம் சுட்டிக்காட்ட முடியும்.
இதுபோலத் தமிழினத்தைச் சுட்டிக்காட்ட முடியாது. அடிமை நிலை, கூலிநிலை, அகதிநிலை என்ற மூன்று நிலையிலிருந்தும் உலகத் தமிழர்கள் முற்றுமாக மீண்டுவிட்டார்கள் என்று சொல்ல முடியாது.
உலகத் தமிழர் 1947 - 48 க்குப் பிறகு, அரசியல் அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டது போலத் தோன்றினும், அது முழுமையான விடுதலை அன்று என்பதையே இலங்கை உள்ளிட்ட பகுதிகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
அரசியல் அடிமைத்தனங்களிலிருந்தும், அதிகார அடிமைத்தனங்களிலிருந்தும் தமிழர்கள் இன்னும் முழு விடுதலை பெறவில்லை. குடிபெயர்ந்த நாடுகளில், `கூலி' என்ற பெயர் மாறி, குடிமக்கள் என்ற நிலையைத் தமிழர் அடைந்துவிட்ட போதிலும், அந்தந்த நாடுகளில் தமிழர் இரண்டாம் தரக் குடிமக்களாகவே இருந்து வருகின்றனர்.
தமிழருடைய இந்நிலைக்குக் காரணம், அயலார் என்று கருதுவதும், பழிப்பதும் தவறு. தமிழருடைய அன்றைய வீழ்ச்சிக்கும், இன்றைய வீழ்ச்சிக்கும் காரணர் தமிழரே.
தொலைநோக்கு இன்மையும், தமிழ் எனும் மொழியை மையப்படுத்தி சமூகக் கட்டொருமைப்பாட்டை வளர்க்காததும், தம் சமூகத்தைக் கண்டதுண்டமாக வெட்டிப்போடும் மதங்களையும், சாதிப் பிரிவுகளையும், கட்சிப் பிளவுகளையும் அனுமதித்து வளர்த்தெடுத்ததும், உட்பகையும், பொருளாதார நோக்கில் போதிய அளவு சிந்திக்காததும், பின் நாளில் வரும் அரசியல் ஆதிக்கங்களை ஊகித்துத் தற்காத்துக் கொள்ளாததும் குறிக்கத் தக்கனவாகும்.
சோதனைகள் வந்தபோதும், வரும்போதும் வெற்றி பெற்ற இனமக்கள் எவ்வாறு அவற்றை எதிர்கொண்டார்கள், வீழ்ந்தாலும் நிரந்தரமாக வீழாமல் எவ்வாறு நிமிர்ந்து நின்றார்கள் என்பதைக் கூர்ந்து பார்த்தாவது நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு சில பாடங்கள் வருமாறு;
1. ஐரோப்பிய இன வரலாற்றைக் கற்கும் போது அவர்கள் தமக்குள் பேதம் கொண்டு, அடித்துக் கொண்டார்கள். ஒருவர்மேல் ஒருவர் படையெடுத்துக் கொண்டார்கள். ஆனால், எக்காரணம் கொண்டும் ஆசிய, ஆபிரிக்க, அவுஸ்திரேலியக் கண்ட மக்கள் தம்மேல் ஆதிக்கம் செய்வதை அவர்கள் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.
மங்கோலிய இனத் தலைவன் செங்கிஸ்கான் (கி.பி. 1162 - 1227) மகன் ஒகடாய் 1241 இல் ஐரோப்பாவின் ஒரு பகுதியைக் (ரஷ்யா, போலந்து, ஹங்கேரி, ஜேர்மனி) கைப்பற்றினான் என்பது வரலாறு. ஆனால் அந்நிலை சிலகாலம் கூட நீடிக்கவில்லை. நீடிக்க விடவில்லை. அன்றுதொட்டு ஐரோப்பியரும் அவருக்கு மூலவரான கிரேக்கரும், உரோமரும் தம் நாடுகளைக் கடந்து தாம் வாழும் ஐரோப்பா கண்டத்தைக் கடந்தும், கடல் கடந்தும் வேறு நாடுகளை வெற்றி கண்டபொழுது, வென்ற நாடுகளை நம்மைப் போல அப்படியே விட்டுவிட்டு வந்துவிடவில்லை.
அவற்றைத் தம் பூமிகள் ஆக்கிக் கொண்டார்கள். தம் மொழி, பண்பாடு, நாகரிகம், ஆட்சி ஆகியவற்றை அங்கே நிலைகொள்ளச் செய்தார்கள். அலெக்சாண்டர் (கி.மு. 356 - 323) எகிப்தின் மேல் படையெடுத்ததின் நினைவாக எகிப்தில் அலெக்சாண்டிரியா என்ற நகரம் உருவாக்கப் பெற்றது. டாலமி எனும் கலப்பினமே அந்நாட்டை நெடுங்காலம் ஆண்டது. புகழ்பெற்ற எகிப்திய அரசி, கிளியோபாட்றா, டாலமி இனத்தில் பிறந்தவள். உலகம் முழுவதும், கிரேக்கக் கலையும், கிரேக்க இரத்தமும், உரோமானியர்களின் இரத்தமும் கலந்தன.
தமிழ்நாட்டுச் சங்ககால அரசிகளின் அந்தப்புரங்களில் கிரேக்க மகளிர் வேலை பார்த்ததும், தமிழ் அரசர்க்கு மதுவை ஊற்றிக் கொடுத்ததும் இலக்கியப் பதிவுகள். தமிழகம் முழுவதும் குவியல் குவியலாகக் கிடைத்துள்ள உரோமானியக் காசுகளும், மதுச் சாடிகளும் தமிழர் பெருமையை அறிவிப்பன அல்ல. உரோமானியக் காசுகளுக்கும், மதுவுக்கும் கி.மு. விலேயே தமிழர் அடிமையானமைக்கு அவை சான்றுகள்.
2. கவனிக்க வேண்டிய இன்னோர் இனம் சீன இனம். இன வரலாற்றின்படி சீனர் மங்கோலிய இனத்தைச் சார்ந்த மஞ்சள் நிற மக்கள். கி.பி. 15 ஆம் நூற்றாண்டின் அனைத்துக் கண்டங்களிலும் பரவிய ஐரோப்பிய அரசியல் ஆதிக்கத்தை எதிர்த்துச் சாதித்துக் காட்டியவர்கள் ஆபிரிக்காவிலும் இல்லை. தென் - வட அமெரிக்காவிலும் இல்லை, அவுஸ்திரேலியாவிலும் இல்லை, ஆசியாவில் உள்ள பிற இன மக்களிலும் இல்லை, ஜப்பானும், தாய்லாந்தும் முற்றுமாக ஐரோப்பிய ஆதிக்கம் உள்ளே நுழைய விடாமல் கடைசிவரை தடுத்துக் கொண்டன.
பெரும்பகுதி சீனர்களும் அதில் வெற்றி கொண்டனர். சீனர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது. அவர்தம் தலைமை உணர்வு உலக இன மக்களிலேயே சீன இனம்தான் உயர்ந்தது என்று ஒவ்வொரு சீனக் குழந்தைக்கும் கற்பிக்கப் பெறுகிறது. சீனர்களில் ஏழைகள் இருப்பதில்லை. அவர்கள் பல நாடுகளுக்குக் குடியேறிய போதும் எந்த இடத்திலும் அவர்கள் பிச்சைக்காரர்களாக இருந்ததில்லை. இருப்பதில்லை. வணிகத்திலும், செல்வம் சேர்ப்பதிலும் மிகக் குறியாக இருப்பார்கள். இருக்கும் இடத்தில் மட்டுமல்லாமல் குடியேறிய நாடுகளில் தங்கள் மொழி, பண்பாடு, நாகரிகம், பெயர் சூட்டிக் கொள்ளும் முறை முதலானவற்றில் பிடிவாதமாக இருப்பார்கள்.
இந்த நிலைமையை அவர்கள் அடைந்ததற்குக் காரணம், தங்கள் இனத்தில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பிறந்த கன்ஃபூசியஸ் (கி.மு. 551 - 479) போதனைகளையும், இலாவோஸ் (கி.மு. ஆறாம் நூற்றாண்டு) போதனைகளையும் கடந்த முப்பது நூற்றாண்டுகளாகக் கடைப்பிடித்து வருவதுதான். சீனாவிலும், அயல் நாடுகளிலும் வாழும் சீனர்கள், தாம் வாழும் இடங்களில் வணிகத்தையும், பொருளாதாரத்தையும் தம் கைவசம் வைத்திருப்பதைக் காணுகிறோம். பொருளாதார முதன்மை சீனர்களுக்குக் குடியேறிய நாடுகளிலும் தலைமையைப் பெற்றுத் தந்திருக்கிறது.
3. உலக ஆதிகுடிமக்களாக யூதர்கள் தம்மைக் கருதுகின்றனர். பைபிள் பழைய ஏற்பாட்டைத் தங்கள் புனித நூலாகப் போற்றுகின்றனர். அதனை ஒட்டி, மோசஸ் அமைத்துக் கொடுத்த யூத சமயத்தைத் தங்கள் உயிரினும் மேலானதாகப் பின்பற்றுகின்றனர்.
உலக இன மக்களில் சொல்லில் வடித்தெடுக்க முடியாத துன்பங்களை யூத மக்கள் சந்தித்துள்ளனர். முதல், இரண்டாம் உலகப் போர்களின் போது இலட்சக்கணக்கில் யூதர்கள் துடிதுடிக்க கொல்லப்பட்டனர். ஜேர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் மட்டும், அறுபது இலட்சம் யூதர்களைக் கொன்று குவித்தான். இப்படி சொல்லொணாத் துயரத்தை அனுபவித்த யூதர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மூன்று பழக்கங்கள் உள்ளன. அவையாவன: ஒன்று, எந்தச் சூழ்நிலையிலும் கல்வி கற்பது.
இரண்டு, தம் யூத இன மக்களில் ஒருவர் சிறிய ஒன்றைச் சாதித்தாலும் அவரை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவது. மூன்று சீனர்களைப் போன்றே, சீனர்களைவிடவும் பொருளாதாரத்தில் யூதர்கள் மிகக் குறியாக இருப்பார்கள்.
அன்று மட்டுமன்றி இன்றும் உலகப் பெரும் பணக்காரர்களாக யூதர்களே விளங்குகின்றனர். ஐரோப்பிய, சீன, யூத, வரலாற்றை உற்றுப் பார்க்கும் போது அவர்தம் பெரும் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம், அவர்கள் பொருளாதாரத்தில் முன்னிலை வகிப்பதே என்பதை அறிந்து கொள்ளலாம்.
தமிழர்கள், தம் பொழுதுபோக்கு, கலை, இலக்கிய நாட்டங்களிலிருந்து பொருளாதார நாட்டத்தை நோக்கி ஒருமித்து முயல வேண்டும். உலகத் தமிழர் தம் நிகழ்கால, வருங்கால வெற்றியை அவர்களுடைய பொருளாதார வெற்றியே நிர்ணயிக்கும்.
தினமணி- 28 August 2006
க.ப.அறவாணன்கன் தமிழர் தொல்பழம் பெருமைகள் பலவற்றைப் பெற்றவர். ஆனால் ஓர் இனத்தை, அந்த இனத்தின் பழம்பெருமை மட்டுமே எடுத்து நிறுத்திவிட முடியாது. 'தம் பழம்பெருமையை இழந்துவிடக் கூடாது. தம் குடிப்பெருமையை நாம் மேலெடுத்துச் செல்ல வேண்டும்' என்ற அளவில் மட்டுமே பழைய பெருமைகள் பயன்படும்; பயன்படுதல் வேண்டும்.
காகேசிய இனத்தைச் சேர்ந்த ஐரோப்பியர்க்கு இத்தகு வஞ்சினம் உண்டு.ஓர் நிகழ்வு : நிக்காலோ மானுச்சி (கி.பி. 1653 - 1708) என்பவர் ஓர் இத்தாலியர். ஔரங்கசீப் ஆண்ட காலத்தில் இந்தியாவிற்குத் தன் நண்பருடன் வந்தார். வழியிலேயே நண்பர் இறந்து போனார். ஒரு வழியாக அவரை அடக்கம் செய்த நிலையில், அரச தூதர் அங்கு வந்து சேர்ந்தார்.
அக்கால நடைமுறைப்படி அயல்நாட்டு வெள்ளைக்காரர் இறந்துவிட்டதால், இறந்தவருடைய உடைமைகளை எல்லாம் அரச தூதரும், அவருடன் வந்த காவலர்களும் முத்திரை இட்டு கைப்பற்றிக் கொண்டனர்.
அதனுடன் மானுச்சியின் உடைகளும், உடைமைகளும் கைப்பற்றப்பட்டன. இதனால் மானுச்சி மிகவும் பாதிக்கப்பட்டார்.
முடிவில், தம் பொருட்களைத் திருப்பித் தருமாறு விண்ணப்பித்தார். செயலாளரிடம் பெற்றுக் கொள்ளுமாறு மேலிடத்திலிருந்து மடல் வந்தது. ஆனால், அவற்றைச் செயலாளர் திருப்பித் தரவில்லை.
அவருடன் ஒத்துப்போக முடியாத நிலையில் மானுச்சி எழுதிய குறிப்பு வருமாறு; செயலாளர் என் பேச்சை நிறுத்தும்படி கத்தினார். "நீ அரசருடைய அடிமை என்பதை இன்னும் உணரவில்லை" என்று சீறினார்.
இந்தச் சொற்களைக் கேட்டதும் நான் எழுந்து நின்று கொண்டேன். "ஐரோப்பியர்கள் என்றும், எப்போதும், எவருக்கும் அடிமைகளாக இருந்ததில்லை, இருக்கவும் மாட்டார்கள்" என்று விடையளித்தேன்.
இத்தாலிய மானுச்சி தன் குறிப்பில் எழுதியதுபோல ஓர் அறைகூவலைத் தமிழராகிய நாம் சொல்ல முடியுமா? தமிழர், பிற இன மக்களிடம் அடிமைப்பட்டுத் தாழ்ந்து கிடந்ததை 1948 க்கு முற்பட்ட இந்திய, இலங்கை ஆகிய தாய் பூமிகளும், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ் முதலான குடியேற்ற நாடுகளும் மெய்ப்பிக்கின்றன.
உலக வரலாற்றில் அன்றுதொட்டு இன்றுவரை, தம் பழம்பெருமையை இழக்காமல் என்றும் வைத்திருக்கும் இனமாக கிரேக்க, உரோமானிய இனத்தையும், அந்த இனத்தின் வழி வந்த ஐரோப்பிய இனத்தையும், இடையீடுபட்டாலும், தன் தலைமை அடையாளத்தை இழக்காத சீன இனத்தையும் இடையூறுகள் இருந்தாலும், ஃபீனிக்ஸ் பறவைபோல எரிதழலில் எரிக்கப்பட்டும் எரிந்து போகாமல் நிமிர்ந்து நிற்கும் யூத இனத்தையும், நாம் சுட்டிக்காட்ட முடியும்.
இதுபோலத் தமிழினத்தைச் சுட்டிக்காட்ட முடியாது. அடிமை நிலை, கூலிநிலை, அகதிநிலை என்ற மூன்று நிலையிலிருந்தும் உலகத் தமிழர்கள் முற்றுமாக மீண்டுவிட்டார்கள் என்று சொல்ல முடியாது.
உலகத் தமிழர் 1947 - 48 க்குப் பிறகு, அரசியல் அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டது போலத் தோன்றினும், அது முழுமையான விடுதலை அன்று என்பதையே இலங்கை உள்ளிட்ட பகுதிகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
அரசியல் அடிமைத்தனங்களிலிருந்தும், அதிகார அடிமைத்தனங்களிலிருந்தும் தமிழர்கள் இன்னும் முழு விடுதலை பெறவில்லை. குடிபெயர்ந்த நாடுகளில், `கூலி' என்ற பெயர் மாறி, குடிமக்கள் என்ற நிலையைத் தமிழர் அடைந்துவிட்ட போதிலும், அந்தந்த நாடுகளில் தமிழர் இரண்டாம் தரக் குடிமக்களாகவே இருந்து வருகின்றனர்.
தமிழருடைய இந்நிலைக்குக் காரணம், அயலார் என்று கருதுவதும், பழிப்பதும் தவறு. தமிழருடைய அன்றைய வீழ்ச்சிக்கும், இன்றைய வீழ்ச்சிக்கும் காரணர் தமிழரே.
தொலைநோக்கு இன்மையும், தமிழ் எனும் மொழியை மையப்படுத்தி சமூகக் கட்டொருமைப்பாட்டை வளர்க்காததும், தம் சமூகத்தைக் கண்டதுண்டமாக வெட்டிப்போடும் மதங்களையும், சாதிப் பிரிவுகளையும், கட்சிப் பிளவுகளையும் அனுமதித்து வளர்த்தெடுத்ததும், உட்பகையும், பொருளாதார நோக்கில் போதிய அளவு சிந்திக்காததும், பின் நாளில் வரும் அரசியல் ஆதிக்கங்களை ஊகித்துத் தற்காத்துக் கொள்ளாததும் குறிக்கத் தக்கனவாகும்.
சோதனைகள் வந்தபோதும், வரும்போதும் வெற்றி பெற்ற இனமக்கள் எவ்வாறு அவற்றை எதிர்கொண்டார்கள், வீழ்ந்தாலும் நிரந்தரமாக வீழாமல் எவ்வாறு நிமிர்ந்து நின்றார்கள் என்பதைக் கூர்ந்து பார்த்தாவது நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு சில பாடங்கள் வருமாறு;
1. ஐரோப்பிய இன வரலாற்றைக் கற்கும் போது அவர்கள் தமக்குள் பேதம் கொண்டு, அடித்துக் கொண்டார்கள். ஒருவர்மேல் ஒருவர் படையெடுத்துக் கொண்டார்கள். ஆனால், எக்காரணம் கொண்டும் ஆசிய, ஆபிரிக்க, அவுஸ்திரேலியக் கண்ட மக்கள் தம்மேல் ஆதிக்கம் செய்வதை அவர்கள் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.
மங்கோலிய இனத் தலைவன் செங்கிஸ்கான் (கி.பி. 1162 - 1227) மகன் ஒகடாய் 1241 இல் ஐரோப்பாவின் ஒரு பகுதியைக் (ரஷ்யா, போலந்து, ஹங்கேரி, ஜேர்மனி) கைப்பற்றினான் என்பது வரலாறு. ஆனால் அந்நிலை சிலகாலம் கூட நீடிக்கவில்லை. நீடிக்க விடவில்லை. அன்றுதொட்டு ஐரோப்பியரும் அவருக்கு மூலவரான கிரேக்கரும், உரோமரும் தம் நாடுகளைக் கடந்து தாம் வாழும் ஐரோப்பா கண்டத்தைக் கடந்தும், கடல் கடந்தும் வேறு நாடுகளை வெற்றி கண்டபொழுது, வென்ற நாடுகளை நம்மைப் போல அப்படியே விட்டுவிட்டு வந்துவிடவில்லை.
அவற்றைத் தம் பூமிகள் ஆக்கிக் கொண்டார்கள். தம் மொழி, பண்பாடு, நாகரிகம், ஆட்சி ஆகியவற்றை அங்கே நிலைகொள்ளச் செய்தார்கள். அலெக்சாண்டர் (கி.மு. 356 - 323) எகிப்தின் மேல் படையெடுத்ததின் நினைவாக எகிப்தில் அலெக்சாண்டிரியா என்ற நகரம் உருவாக்கப் பெற்றது. டாலமி எனும் கலப்பினமே அந்நாட்டை நெடுங்காலம் ஆண்டது. புகழ்பெற்ற எகிப்திய அரசி, கிளியோபாட்றா, டாலமி இனத்தில் பிறந்தவள். உலகம் முழுவதும், கிரேக்கக் கலையும், கிரேக்க இரத்தமும், உரோமானியர்களின் இரத்தமும் கலந்தன.
தமிழ்நாட்டுச் சங்ககால அரசிகளின் அந்தப்புரங்களில் கிரேக்க மகளிர் வேலை பார்த்ததும், தமிழ் அரசர்க்கு மதுவை ஊற்றிக் கொடுத்ததும் இலக்கியப் பதிவுகள். தமிழகம் முழுவதும் குவியல் குவியலாகக் கிடைத்துள்ள உரோமானியக் காசுகளும், மதுச் சாடிகளும் தமிழர் பெருமையை அறிவிப்பன அல்ல. உரோமானியக் காசுகளுக்கும், மதுவுக்கும் கி.மு. விலேயே தமிழர் அடிமையானமைக்கு அவை சான்றுகள்.
2. கவனிக்க வேண்டிய இன்னோர் இனம் சீன இனம். இன வரலாற்றின்படி சீனர் மங்கோலிய இனத்தைச் சார்ந்த மஞ்சள் நிற மக்கள். கி.பி. 15 ஆம் நூற்றாண்டின் அனைத்துக் கண்டங்களிலும் பரவிய ஐரோப்பிய அரசியல் ஆதிக்கத்தை எதிர்த்துச் சாதித்துக் காட்டியவர்கள் ஆபிரிக்காவிலும் இல்லை. தென் - வட அமெரிக்காவிலும் இல்லை, அவுஸ்திரேலியாவிலும் இல்லை, ஆசியாவில் உள்ள பிற இன மக்களிலும் இல்லை, ஜப்பானும், தாய்லாந்தும் முற்றுமாக ஐரோப்பிய ஆதிக்கம் உள்ளே நுழைய விடாமல் கடைசிவரை தடுத்துக் கொண்டன.
பெரும்பகுதி சீனர்களும் அதில் வெற்றி கொண்டனர். சீனர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது. அவர்தம் தலைமை உணர்வு உலக இன மக்களிலேயே சீன இனம்தான் உயர்ந்தது என்று ஒவ்வொரு சீனக் குழந்தைக்கும் கற்பிக்கப் பெறுகிறது. சீனர்களில் ஏழைகள் இருப்பதில்லை. அவர்கள் பல நாடுகளுக்குக் குடியேறிய போதும் எந்த இடத்திலும் அவர்கள் பிச்சைக்காரர்களாக இருந்ததில்லை. இருப்பதில்லை. வணிகத்திலும், செல்வம் சேர்ப்பதிலும் மிகக் குறியாக இருப்பார்கள். இருக்கும் இடத்தில் மட்டுமல்லாமல் குடியேறிய நாடுகளில் தங்கள் மொழி, பண்பாடு, நாகரிகம், பெயர் சூட்டிக் கொள்ளும் முறை முதலானவற்றில் பிடிவாதமாக இருப்பார்கள்.
இந்த நிலைமையை அவர்கள் அடைந்ததற்குக் காரணம், தங்கள் இனத்தில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பிறந்த கன்ஃபூசியஸ் (கி.மு. 551 - 479) போதனைகளையும், இலாவோஸ் (கி.மு. ஆறாம் நூற்றாண்டு) போதனைகளையும் கடந்த முப்பது நூற்றாண்டுகளாகக் கடைப்பிடித்து வருவதுதான். சீனாவிலும், அயல் நாடுகளிலும் வாழும் சீனர்கள், தாம் வாழும் இடங்களில் வணிகத்தையும், பொருளாதாரத்தையும் தம் கைவசம் வைத்திருப்பதைக் காணுகிறோம். பொருளாதார முதன்மை சீனர்களுக்குக் குடியேறிய நாடுகளிலும் தலைமையைப் பெற்றுத் தந்திருக்கிறது.
3. உலக ஆதிகுடிமக்களாக யூதர்கள் தம்மைக் கருதுகின்றனர். பைபிள் பழைய ஏற்பாட்டைத் தங்கள் புனித நூலாகப் போற்றுகின்றனர். அதனை ஒட்டி, மோசஸ் அமைத்துக் கொடுத்த யூத சமயத்தைத் தங்கள் உயிரினும் மேலானதாகப் பின்பற்றுகின்றனர்.
உலக இன மக்களில் சொல்லில் வடித்தெடுக்க முடியாத துன்பங்களை யூத மக்கள் சந்தித்துள்ளனர். முதல், இரண்டாம் உலகப் போர்களின் போது இலட்சக்கணக்கில் யூதர்கள் துடிதுடிக்க கொல்லப்பட்டனர். ஜேர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் மட்டும், அறுபது இலட்சம் யூதர்களைக் கொன்று குவித்தான். இப்படி சொல்லொணாத் துயரத்தை அனுபவித்த யூதர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மூன்று பழக்கங்கள் உள்ளன. அவையாவன: ஒன்று, எந்தச் சூழ்நிலையிலும் கல்வி கற்பது.
இரண்டு, தம் யூத இன மக்களில் ஒருவர் சிறிய ஒன்றைச் சாதித்தாலும் அவரை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவது. மூன்று சீனர்களைப் போன்றே, சீனர்களைவிடவும் பொருளாதாரத்தில் யூதர்கள் மிகக் குறியாக இருப்பார்கள்.
அன்று மட்டுமன்றி இன்றும் உலகப் பெரும் பணக்காரர்களாக யூதர்களே விளங்குகின்றனர். ஐரோப்பிய, சீன, யூத, வரலாற்றை உற்றுப் பார்க்கும் போது அவர்தம் பெரும் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம், அவர்கள் பொருளாதாரத்தில் முன்னிலை வகிப்பதே என்பதை அறிந்து கொள்ளலாம்.
தமிழர்கள், தம் பொழுதுபோக்கு, கலை, இலக்கிய நாட்டங்களிலிருந்து பொருளாதார நாட்டத்தை நோக்கி ஒருமித்து முயல வேண்டும். உலகத் தமிழர் தம் நிகழ்கால, வருங்கால வெற்றியை அவர்களுடைய பொருளாதார வெற்றியே நிர்ணயிக்கும்.
தினமணி- 28 August 2006
வெள்ளி, 11 மே, 2007
தமிழன் என்றோர் இனம்
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்குபெற்றுள்ள வங்கதேச வீரர்கள் அணிந்திருக்கும் உடைகளின் விற்பனை கொல்கத்தாவில் இப்பொழுது அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
மேற்கு வங்க இளைஞர் கூறும் காரணம், நம் முரட்டுத்தோலை ஊருடுவிக் குத்திக்கொண்டு நிற்கிறது. "இந்தியா சூப்பர் எட்டுக்குள் நுழைய முடியாத நேரத்தில், நம் பக்கத்து நாடான வங்கதேசம் நுழைந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தானே! வங்காளத்தில் கிழக்கு, மேற்கு என்று நாம் ஏன் பார்க்க வேண்டும்?"
தமிழ்நாடு, கேரளா, குஜராத் என்ற எந்தவொரு மாநிலத்திலும் காண முடியாத காட்சியை மேற்கு வங்கத்தில் காண முடிகிறதென்றால், அங்கே `வங்காளி' என்ற உணர்வு மேலோங்கி நிற்கிறது. அது இயற்கையானதுதான்.
இடி அமீனின் கொடுங்கோலாட்சியின் கோரத் தாக்குதலிலிருந்து தன் மாநில மக்களைக் காப்பாற்றி அழைத்து வர விமானங்களை அனுப்பியது குஜராத் அரசு.
வளைகுடாப் போரின்போது மலையாளிகளைப் பாதுகாப்பாக ஏற்றிவர சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்தது கேரள அரசு.
மொழியால், இனத்தால் ஒன்றுபட்ட மக்கள் தங்கள் சொந்தபந்தங்களைக் காக்க மத்திய அரசுக்கு மனு அனுப்பிவிட்டு கையைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருக்கவில்லை. இறையாண்மையுள்ள ஒரு நாடு செய்ய வேண்டிய வேலையை குஜராத், கேளர மாநில அரசுகள் செய்தன.
ஆண்டாண்டு காலமாய் சிங்களப் பேரினவாத அரசின் கீழ் இரண்டாந்தரக் குடிமக்களாய் `தாழ்வுற்று வறுமை மிஞ்சிப் பாழ்பட்டு' நின்ற தமிழர்கள், அறவழிப் போராட்டங்கள் அலுத்துப்போன நிலையில், ஆயுதமேந்திய போராட்டமே தங்கள் விடிவுக்கான வழி என ஈழத்தமிழ் இளைஞர்கள் துணிவான முடிவு மேற்கொண்டது வரலாற்றுக் கட்டாயமாகும்.
விடுதலைப் போராளிகளை ஒடுக்க முயலும் எந்த அரசும் அவர்களுக்குச் சூட்டும் முதற்பெயர் `பயங்கரவாதிகள்' என்பதாகும். இலங்கை அரசும் அதைத்தான் செய்தது.
அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு கௌரவம் பார்க்கும். "ஆயுதங்களை ஒப்படைத்த பின்புதான் பேச்சுவார்த்தை நடத்த முடியும்." என நிபந்தனை விதிக்கும். ஏராளமான தடைகளை எதிர்கொண்டு மிகுந்த சிரமங்களுக்கிடையில் ஆயுதங்களை உற்பத்தி செய்வது, பிற நாடுகளிடமிருந்து வாங்குவது ஆகியவற்றை மேற்கொண்ட பின் வஞ்சக அரசிடம் ஆயுதங்களை ஒப்படைப்பது என்பது தற்கொலைக்குச் சமம் என்பதை உணர்ந்த போராளிகள், அரசின் நிபந்தனைக்கு இணங்க மறுப்பது இயல்பாகும்.
உலகின் எந்த மூலையில் விடுதலைப் போராட்டம் நடந்தாலும் வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவு தரும் இந்திய அரசின் கண்களில், ஈழ விடுதலைப் போராட்டம் மட்டும் பயங்கரவாதமாகத் தோன்றக் காரணம் என்ன?
யாசர் அரபாத்தின் பலஸ்தீன விடுதலை முன்னணி இயக்கத்துக்கு நிதியுதவி, டில்லியில் தூதரகம் திறக்க அனுமதி, ஐ.நா. சபையில் அங்கீகாரம் ஆகியவற்றைச் செயல்படுத்திய இந்திய அரசுக்கு, ஈழத் தமிழர்களின் போராட்டத்தை நசுக்குவதில் மட்டும் ஏன் தனி அக்கறை?
ராஜீவ் படுகொலை என்ற விஷயத்தை ஒரு காரணமாகக் கொண்டு இந்தியத் தமிழர்கள் தங்களுடைய நியாயம், நேர்மை, கடமை, இன உணர்வு ஆகியவற்றிலிருந்து நழுவுவதிலேயே குறியாக உள்ளனர். தேர்தல், சட்டமன்ற பாராளுமன்ற இடங்கள், ஆட்சி, பதவி, சொத்துச் சேர்த்தல், சுகமான வாழ்க்கை, எவருடனும் எதற்காகவும் கூட்டணி வைத்துக்கொள்வதை நியாயப்படுத்துதல் என்பன இவர்களுடைய வாழ்க்கை முறைகளாக மாறிவிட்டன. தங்களைப் போன்று ஈழத் தமிழர்களும் சிங்கள அரசின் கொத்தடிமைகளாக வாழ்ந்து. மானம் பறி போனாலும் வசதியாக வாழ முயற்சிக்க வேண்டுமெனக் கூறாமல் கூறுகின்றனர்.
உலகின் பல பகுதிகளிலும் வாழும் ஈழத்தமிழர்கள், ஈழ விடுதலைப் போருக்கான பல்வேறு பங்களிப்புகளை மிகவும் எச்சரிக்கையாகவும் ஆர்வத்துடனும், செய்து வருகின்றனர். எத்தனையோ மோசமான வாழ்நிலைக்கு நடுவிலும் அவர்கள் சமகாலத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குச் செய்துவரும் அளப்பரிய தொண்டு வியப்புக்குரியது.
தமிழக மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல அஞ்சுகின்றனர். இந்தியக் கடல் எல்லைக்குள்ளேயே நம் மீனவர்களை சிங்கள கடற்படை சுட்டுக் கொல்கிறது.
மத்திய அரசைச் சங்கடப்படுத்திவிடக்கூடாது எனக் கருதும் மாநில அரசும், இலங்கை அரசைப் பகைத்துக் கொள்ளக்கூடாது எனக் கருதும் மத்திய அரசும் தமிழனுக்கு வாய்த்த சாபக்கேடுகள் என்றே தோன்றுகிறது.
கொழும்பில் உள்ள கட்டுநாயக விமானப்படைத் தளத்தின் மீது விமானத் தாக்குதல் நடத்திய போராளிகளின் வலிமை கண்டு சிங்கள அரசு அரண்டுபோய் நிற்கிறது. உலகிலேயே முதன் முறையாகப் போராளிக் குழு ஒன்று தனக்கென்று விமானப்படையை வைத்திருப்பது இதுவே முதல்முறை.
`கங்கை கொண்டான்', `கடாரம் வென்றான்', `இமயத்தில் கொடி நாட்டினான்', `கனக விசயரைக் கல் சுமக்க வைத்தான்' என்றெல்லாம் வாய் வலிக்காமல் பழம்பெருமை பேசிவரும் இந்தியத் தமிழர்கள், நின்று நிதானித்துச் சிந்திக்க வேண்டும் `வங்கக் கடல் சோழர்களின் ஏரியாக இருந்தது' எனத் தம்பட்டம் அடிப்பவர்கள் நிகழ்காலத்துக்கு வர வேண்டும்.
வரலாற்றிலேயே முதன்முறையாகத் தமிழன் விமானப்படை வைத்திருக்கிறான் என்ற மகிழ்ச்சியைக்கூடப் பகிர்ந்துகொள்ள முடியாமல், ஓரக்கண்ணால் டில்லியைப் பார்க்க வெட்கமாக இல்லையா?
வட மாநிலங்களில் சில போராளிக் குழுக்களுடன் மத்திய அரசு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்திருப்பதையும், வேற்று நாட்டில் வைத்து அவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதையும் இந்தியத் தமிழர்கள் பலர் அறியாமல் இருக்கலாம்.
மிரண்டு போய் நிற்கும் சிங்கள அரசு, பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் ஈழப் போராளிகளை அடக்கி ஒடுக்க இந்திய அரசினுடைய முப்படைகளின் உதவியை நாட முனைந்துள்ளது.
இந்திய மீனவர்களின் மீது பாயும் ஒவ்வொரு துப்பாக்கிக் குண்டும் இந்திய இறையாண்மையை ஓட்டையாக்கி வருவதை மத்திய அரசு உணரவில்லை. எவனோ சாகிறான் என்ற பொறுப்பற்ற தன்மையே தொடர்கிறது.
நாடுகளின் எல்லைகள் விரிவதும் சுருங்குவதும் சில நாடுகள் காணாமல் போவதும் புதிய நாடுகள் உருவாவதும் வரலாறு நெடுகிலும் நிகழ்ந்து வருவனவாகும். ஆண்டான் - அடிமை உறவைப் பேணி இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காக்க வேண்டிய கட்டாயம் ஈழத் தமிழர்களுக்குக் கிடையாது.
இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றைக் காக்க வீரப்போர் புரிந்துவரும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நாம் ஏதும் செய்ய இயலாவிடினும், சிங்கள அரசுக்குத் துணைபோக இந்திய அரசை அனுமதியாதிருக்கும் செயலையாவது நாம் செய்தே தீர வேண்டும்.
இனத்தாலும் மொழியாலும் குருதி உறவுள்ள சொந்தம் அழிவதைப் பார்த்துக் கொண்டே இருந்த கல் நெஞ்சம் கொண்டோர் என்று இந்தியத் தமிழர்களுக்கு ஏற்படும் கறை எதிர்காலத்தில் கண்ணீராலும் செந்நீராலும் போக்க முடியாத அளவுக்கு அழுத்தமாகப் பதிந்துவிடும்.
புறநானூற்றுப் புகழ் என்று பெருமையாகப் பேசப்படுவது வீர மரணம் எய்தும் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமாகிவிடும்.
நன்றி:- ஜனசக்தி (தமிழகம்) - ஏப்ரல் 11, 2007
மேற்கு வங்க இளைஞர் கூறும் காரணம், நம் முரட்டுத்தோலை ஊருடுவிக் குத்திக்கொண்டு நிற்கிறது. "இந்தியா சூப்பர் எட்டுக்குள் நுழைய முடியாத நேரத்தில், நம் பக்கத்து நாடான வங்கதேசம் நுழைந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தானே! வங்காளத்தில் கிழக்கு, மேற்கு என்று நாம் ஏன் பார்க்க வேண்டும்?"
தமிழ்நாடு, கேரளா, குஜராத் என்ற எந்தவொரு மாநிலத்திலும் காண முடியாத காட்சியை மேற்கு வங்கத்தில் காண முடிகிறதென்றால், அங்கே `வங்காளி' என்ற உணர்வு மேலோங்கி நிற்கிறது. அது இயற்கையானதுதான்.
இடி அமீனின் கொடுங்கோலாட்சியின் கோரத் தாக்குதலிலிருந்து தன் மாநில மக்களைக் காப்பாற்றி அழைத்து வர விமானங்களை அனுப்பியது குஜராத் அரசு.
வளைகுடாப் போரின்போது மலையாளிகளைப் பாதுகாப்பாக ஏற்றிவர சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்தது கேரள அரசு.
மொழியால், இனத்தால் ஒன்றுபட்ட மக்கள் தங்கள் சொந்தபந்தங்களைக் காக்க மத்திய அரசுக்கு மனு அனுப்பிவிட்டு கையைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருக்கவில்லை. இறையாண்மையுள்ள ஒரு நாடு செய்ய வேண்டிய வேலையை குஜராத், கேளர மாநில அரசுகள் செய்தன.
ஆண்டாண்டு காலமாய் சிங்களப் பேரினவாத அரசின் கீழ் இரண்டாந்தரக் குடிமக்களாய் `தாழ்வுற்று வறுமை மிஞ்சிப் பாழ்பட்டு' நின்ற தமிழர்கள், அறவழிப் போராட்டங்கள் அலுத்துப்போன நிலையில், ஆயுதமேந்திய போராட்டமே தங்கள் விடிவுக்கான வழி என ஈழத்தமிழ் இளைஞர்கள் துணிவான முடிவு மேற்கொண்டது வரலாற்றுக் கட்டாயமாகும்.
விடுதலைப் போராளிகளை ஒடுக்க முயலும் எந்த அரசும் அவர்களுக்குச் சூட்டும் முதற்பெயர் `பயங்கரவாதிகள்' என்பதாகும். இலங்கை அரசும் அதைத்தான் செய்தது.
அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு கௌரவம் பார்க்கும். "ஆயுதங்களை ஒப்படைத்த பின்புதான் பேச்சுவார்த்தை நடத்த முடியும்." என நிபந்தனை விதிக்கும். ஏராளமான தடைகளை எதிர்கொண்டு மிகுந்த சிரமங்களுக்கிடையில் ஆயுதங்களை உற்பத்தி செய்வது, பிற நாடுகளிடமிருந்து வாங்குவது ஆகியவற்றை மேற்கொண்ட பின் வஞ்சக அரசிடம் ஆயுதங்களை ஒப்படைப்பது என்பது தற்கொலைக்குச் சமம் என்பதை உணர்ந்த போராளிகள், அரசின் நிபந்தனைக்கு இணங்க மறுப்பது இயல்பாகும்.
உலகின் எந்த மூலையில் விடுதலைப் போராட்டம் நடந்தாலும் வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவு தரும் இந்திய அரசின் கண்களில், ஈழ விடுதலைப் போராட்டம் மட்டும் பயங்கரவாதமாகத் தோன்றக் காரணம் என்ன?
யாசர் அரபாத்தின் பலஸ்தீன விடுதலை முன்னணி இயக்கத்துக்கு நிதியுதவி, டில்லியில் தூதரகம் திறக்க அனுமதி, ஐ.நா. சபையில் அங்கீகாரம் ஆகியவற்றைச் செயல்படுத்திய இந்திய அரசுக்கு, ஈழத் தமிழர்களின் போராட்டத்தை நசுக்குவதில் மட்டும் ஏன் தனி அக்கறை?
ராஜீவ் படுகொலை என்ற விஷயத்தை ஒரு காரணமாகக் கொண்டு இந்தியத் தமிழர்கள் தங்களுடைய நியாயம், நேர்மை, கடமை, இன உணர்வு ஆகியவற்றிலிருந்து நழுவுவதிலேயே குறியாக உள்ளனர். தேர்தல், சட்டமன்ற பாராளுமன்ற இடங்கள், ஆட்சி, பதவி, சொத்துச் சேர்த்தல், சுகமான வாழ்க்கை, எவருடனும் எதற்காகவும் கூட்டணி வைத்துக்கொள்வதை நியாயப்படுத்துதல் என்பன இவர்களுடைய வாழ்க்கை முறைகளாக மாறிவிட்டன. தங்களைப் போன்று ஈழத் தமிழர்களும் சிங்கள அரசின் கொத்தடிமைகளாக வாழ்ந்து. மானம் பறி போனாலும் வசதியாக வாழ முயற்சிக்க வேண்டுமெனக் கூறாமல் கூறுகின்றனர்.
உலகின் பல பகுதிகளிலும் வாழும் ஈழத்தமிழர்கள், ஈழ விடுதலைப் போருக்கான பல்வேறு பங்களிப்புகளை மிகவும் எச்சரிக்கையாகவும் ஆர்வத்துடனும், செய்து வருகின்றனர். எத்தனையோ மோசமான வாழ்நிலைக்கு நடுவிலும் அவர்கள் சமகாலத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குச் செய்துவரும் அளப்பரிய தொண்டு வியப்புக்குரியது.
தமிழக மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல அஞ்சுகின்றனர். இந்தியக் கடல் எல்லைக்குள்ளேயே நம் மீனவர்களை சிங்கள கடற்படை சுட்டுக் கொல்கிறது.
மத்திய அரசைச் சங்கடப்படுத்திவிடக்கூடாது எனக் கருதும் மாநில அரசும், இலங்கை அரசைப் பகைத்துக் கொள்ளக்கூடாது எனக் கருதும் மத்திய அரசும் தமிழனுக்கு வாய்த்த சாபக்கேடுகள் என்றே தோன்றுகிறது.
கொழும்பில் உள்ள கட்டுநாயக விமானப்படைத் தளத்தின் மீது விமானத் தாக்குதல் நடத்திய போராளிகளின் வலிமை கண்டு சிங்கள அரசு அரண்டுபோய் நிற்கிறது. உலகிலேயே முதன் முறையாகப் போராளிக் குழு ஒன்று தனக்கென்று விமானப்படையை வைத்திருப்பது இதுவே முதல்முறை.
`கங்கை கொண்டான்', `கடாரம் வென்றான்', `இமயத்தில் கொடி நாட்டினான்', `கனக விசயரைக் கல் சுமக்க வைத்தான்' என்றெல்லாம் வாய் வலிக்காமல் பழம்பெருமை பேசிவரும் இந்தியத் தமிழர்கள், நின்று நிதானித்துச் சிந்திக்க வேண்டும் `வங்கக் கடல் சோழர்களின் ஏரியாக இருந்தது' எனத் தம்பட்டம் அடிப்பவர்கள் நிகழ்காலத்துக்கு வர வேண்டும்.
வரலாற்றிலேயே முதன்முறையாகத் தமிழன் விமானப்படை வைத்திருக்கிறான் என்ற மகிழ்ச்சியைக்கூடப் பகிர்ந்துகொள்ள முடியாமல், ஓரக்கண்ணால் டில்லியைப் பார்க்க வெட்கமாக இல்லையா?
வட மாநிலங்களில் சில போராளிக் குழுக்களுடன் மத்திய அரசு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்திருப்பதையும், வேற்று நாட்டில் வைத்து அவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதையும் இந்தியத் தமிழர்கள் பலர் அறியாமல் இருக்கலாம்.
மிரண்டு போய் நிற்கும் சிங்கள அரசு, பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் ஈழப் போராளிகளை அடக்கி ஒடுக்க இந்திய அரசினுடைய முப்படைகளின் உதவியை நாட முனைந்துள்ளது.
இந்திய மீனவர்களின் மீது பாயும் ஒவ்வொரு துப்பாக்கிக் குண்டும் இந்திய இறையாண்மையை ஓட்டையாக்கி வருவதை மத்திய அரசு உணரவில்லை. எவனோ சாகிறான் என்ற பொறுப்பற்ற தன்மையே தொடர்கிறது.
நாடுகளின் எல்லைகள் விரிவதும் சுருங்குவதும் சில நாடுகள் காணாமல் போவதும் புதிய நாடுகள் உருவாவதும் வரலாறு நெடுகிலும் நிகழ்ந்து வருவனவாகும். ஆண்டான் - அடிமை உறவைப் பேணி இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காக்க வேண்டிய கட்டாயம் ஈழத் தமிழர்களுக்குக் கிடையாது.
இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றைக் காக்க வீரப்போர் புரிந்துவரும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நாம் ஏதும் செய்ய இயலாவிடினும், சிங்கள அரசுக்குத் துணைபோக இந்திய அரசை அனுமதியாதிருக்கும் செயலையாவது நாம் செய்தே தீர வேண்டும்.
இனத்தாலும் மொழியாலும் குருதி உறவுள்ள சொந்தம் அழிவதைப் பார்த்துக் கொண்டே இருந்த கல் நெஞ்சம் கொண்டோர் என்று இந்தியத் தமிழர்களுக்கு ஏற்படும் கறை எதிர்காலத்தில் கண்ணீராலும் செந்நீராலும் போக்க முடியாத அளவுக்கு அழுத்தமாகப் பதிந்துவிடும்.
புறநானூற்றுப் புகழ் என்று பெருமையாகப் பேசப்படுவது வீர மரணம் எய்தும் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமாகிவிடும்.
நன்றி:- ஜனசக்தி (தமிழகம்) - ஏப்ரல் 11, 2007
என் மரணத்தில்...
எழுதுவதற்கு இதை
இன்னும் காலங்கள்
இருக்கலாம்
பழுதுற்றுப்
பயனின்றிப்
பிணமாய் நான் விழ
இன்னும் வருடங்கள் ஆகலாம்
அவசியமாய் இது
நடப்பதற்கே
அவசரமாய் இதை
எழுதுகின்றேன்
அலட்சியமாய் விடாமல்
என் இலட்சியமாய் ஏற்று
முடிப்பீர்
ஒவ்வொரு தமிழனின்
இறப்பிலும்
தன் பிறப்பும் சிறப்பும்
அறியா
தமிழினத்து மனிதர் சிலர்
தமிழனாய்ப்
பிறத்தல் வேண்டும்
இறந்து நான்
இருக்கையில்
மறந்தும்
யாரும் அழுது
என் மரணத்தினை
இழிவு செய்யாதிருங்கள்
ஒரு நாள் என்னைச்
சென்னையில் வையுங்கள்
மறு நாள் என்னைக்
காரைக்காலில் புதையுங்கள்
வலத்திய இடத்தில்
ஒலிப்பெருக்கிகள் வையுங்கள்
தமிழிசைப் பாடல்கள்
ஒலிமுழக்கம் செய்யுங்கள்
தமிழாய் வாழும்
தமிழறிஞர்கள்
ஊரும் உறவும்
என் உடல் சூழும் வேளை
தமிழ்ச் செழுமை
தமிழனப் பெருமை
வந்தவர் அறிய
உரையாற்றி உரையாற்றி
நில்லுங்கள்
உணர்வுற்று சில தமிழன்
பிறப்புற்றான் என்றால்
என் பிணம் கூட
உளம் மகிழும்
புதையுங்கள்
ஊர்வலமாய்
என்னுடல் போகும் போது
தமிழ் உணர்வுப் பாடல்கள்
உடன்வரச் செய்யுங்கள்.
வழியில் ஒரு நொடி
அரசலாற்றின்
அந்த நீர்
ஒலி
கேட்க நிறுத்துங்கள்
உயிர்க்காற்றுப் போன
என் உடலில்
அரசலாற்றுக்
காற்று
சில நொடி
படச் செய்யுங்கள்
புதைக்கும்போது
என் இசைப்பாடல்
ஒன்று ஒலிக்கப் புதையுங்கள்
ஈழம் பிறக்கும்
நாள் முன்
நான் இறக்கும்
நாள் வந்தால்
ஈழம் பிறக்கும் நாள்
"ஈழம் பிறந்தது" என்று
என் கல்லறையில்
எழுதுங்கள்
இந்த எழுத்துக்கள்
படர்ந்த பின்தான்
மண்ணுள்
என் உடல்
செரிக்கும்
-பாவலர். காரை மைந்தன
நன்றி: தென்செய்தி, Sept 16, 2006
இன்னும் காலங்கள்
இருக்கலாம்
பழுதுற்றுப்
பயனின்றிப்
பிணமாய் நான் விழ
இன்னும் வருடங்கள் ஆகலாம்
அவசியமாய் இது
நடப்பதற்கே
அவசரமாய் இதை
எழுதுகின்றேன்
அலட்சியமாய் விடாமல்
என் இலட்சியமாய் ஏற்று
முடிப்பீர்
ஒவ்வொரு தமிழனின்
இறப்பிலும்
தன் பிறப்பும் சிறப்பும்
அறியா
தமிழினத்து மனிதர் சிலர்
தமிழனாய்ப்
பிறத்தல் வேண்டும்
இறந்து நான்
இருக்கையில்
மறந்தும்
யாரும் அழுது
என் மரணத்தினை
இழிவு செய்யாதிருங்கள்
ஒரு நாள் என்னைச்
சென்னையில் வையுங்கள்
மறு நாள் என்னைக்
காரைக்காலில் புதையுங்கள்
வலத்திய இடத்தில்
ஒலிப்பெருக்கிகள் வையுங்கள்
தமிழிசைப் பாடல்கள்
ஒலிமுழக்கம் செய்யுங்கள்
தமிழாய் வாழும்
தமிழறிஞர்கள்
ஊரும் உறவும்
என் உடல் சூழும் வேளை
தமிழ்ச் செழுமை
தமிழனப் பெருமை
வந்தவர் அறிய
உரையாற்றி உரையாற்றி
நில்லுங்கள்
உணர்வுற்று சில தமிழன்
பிறப்புற்றான் என்றால்
என் பிணம் கூட
உளம் மகிழும்
புதையுங்கள்
ஊர்வலமாய்
என்னுடல் போகும் போது
தமிழ் உணர்வுப் பாடல்கள்
உடன்வரச் செய்யுங்கள்.
வழியில் ஒரு நொடி
அரசலாற்றின்
அந்த நீர்
ஒலி
கேட்க நிறுத்துங்கள்
உயிர்க்காற்றுப் போன
என் உடலில்
அரசலாற்றுக்
காற்று
சில நொடி
படச் செய்யுங்கள்
புதைக்கும்போது
என் இசைப்பாடல்
ஒன்று ஒலிக்கப் புதையுங்கள்
ஈழம் பிறக்கும்
நாள் முன்
நான் இறக்கும்
நாள் வந்தால்
ஈழம் பிறக்கும் நாள்
"ஈழம் பிறந்தது" என்று
என் கல்லறையில்
எழுதுங்கள்
இந்த எழுத்துக்கள்
படர்ந்த பின்தான்
மண்ணுள்
என் உடல்
செரிக்கும்
-பாவலர். காரை மைந்தன
நன்றி: தென்செய்தி, Sept 16, 2006
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


