வியாழன், 12 பிப்ரவரி, 2009

புதுச்சேரியில் சத்தியம் மக்கள் சேவை மையத்தினர் உண்ணாப்போராட்டம்

சிங்கள இனவெறி அரசுக்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்து
புதுச்சேரியில் சத்தியம் மக்கள் சேவை மையத்தினர் உண்ணாப்போராட்டம்


ஈழத்தமிழர்களை முற்றிலும் அழித்தொழிக்கும் நோக்கோடு சிங்கள இனவெறி அரசு நடத்தி வரும் தமிழின அழிப்புப் போருக்கு இந்திய அரசு உதவுவது படுபாதகச் செயலாகும்.

இந்திய அரசின் இப்போக்கைக் கண்டிக்கும் வகையிலும், சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புப் போரை உடனே நிறுத்துமாறு வலியுறுத்தியும், தமிழீழ மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்குமாறும் கோரிக்கை விடுத்து வரகிற 15-2-09 அன்று புதுச்சேரி சாரம் பகுதியல் கண்டன உண்ணாப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் ஆசிரியர் குழு உறுப்பினர் க.அருணபாரதி தலைமை தாங்குகிறார். சத்தியம் மக்கள் சேவை மையத்தின் நிறுவனத் தலைவர் தே.சத்தியமூர்த்தி முன்னிலை வகிக்கிறார். அவைத் தலைவர் தே.சரவணன் உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கி வைத்து பேசுகிறார்.

சத்தியம் மக்கள் சேவை மையத்தின் செயலாளர் சசிகலா ஆறுமுகம், துணைச் செயலாளர் க.ஆனந்த், பொருளாளர் தே.சந்தோஷ் உள்ளிட்ட இயக்க நிர்வாகிகளும், பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள், சமூக நல இயக்கங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் கண்டன உரை நிகழ்த்துகின்றனர்.

காங்கிரஸ் அரசாளும் புதுச்சேரி மாநிலத்தில் நடக்கவிருக்கும் இவ்வுண்ணாப் போராட்டத்தில், இந்திய அரசிற்கு எதிரான நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக தமிழின உணர்வாளர்கள் பெரும் திரளாக இப்போராட்டத்தில் பங்கு பெற்று வேண்டுமென உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
தே.சத்தியமூர்த்தி,
நிறுவனத் தலைவர்
சத்தியம் மக்கள் சேவை மையம்

தொடர்புக்கு : 9362141055, 9841949462
இணையம் :
http://sathiyapuratchi.blogspot.com
மின்னஞ்சல் : anand.k.mail@gmail.com

நாள் : 12-02-2009,
இடம் : புதுச்சேரி


கண்டன உண்ணாவிரதம்

இந்திய அரசு!
ஈழத்தமிழர்களை அழித்தொழிக்கும் சிங்கள இனவெறி அரசின் போரை உடனே தடுத்து நிறுத்து!

ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு வழங்கிய ஆள், ஆயுத, பண உதவிகளை திரும்பப் பெறு!

தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை அங்கீகரி!

நாள் : 15-02-09
இடம் : சாரம் ஜீவானந்தம் சிலை அருகில், புதுச்சேரி.

---------------------------------------------------- தலைமை ------------------
தோழர் க.அருணபாரதி,
ஆசிரியர் குழு,
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மாத இதழ்.

---------------------------------------------------- முன்னிலை ------------------
தோழர் தே.சத்தியமூர்த்தி,
நிறுவனத் தலைவர்,
சத்தியம் மக்கள் சேவை மையம்.

---------------------------------------------------- தொடங்கி வைத்தல் ---------
தோழர் தே.சரவணன்,
அவைத்தலைவர்,
சத்தியம் மக்கள் சேவை மையம்.

---------------------------------------------------- கண்டன உரை --------------

தோழர் சசிகலா ஆறுமுகம்
செயலாளர்,
சத்தியம் மக்கள் சேவை மையம்.

தோழர் க.ஆனந்த்
துணைச் செயலாளர்,
சத்தியம் மக்கள் சேவை மையம்.

தோழர் தே.சந்தோஷ்
பொருளாளர்,
சத்தியம் மக்கள் சேவை மையம்.

தோழர் ம.சீனிவாசன்
துணைத் தலைவர்,
சத்தியம் மக்கள் சேவை மையம்.

---------------------------------------------------- மற்றும் ----------------------
பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள்,
சமூக நல அமைப்புகள், இயக்கங்கள் ஆகியவற்றின் தலைவர்கள்,
அரசியல் கட்சித் தலைவர்கள்

கருத்துகள் இல்லை: